ஞாயிறு, 22 ஜூலை, 2018

SC. (Scheduled Castes) என்பதன் வரலாறு


SC. (Scheduled Castes)  என்பதன் வரலாறு.

1911ல் நடந்த இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பின்வரும் காரணிகளால் “தீண்டத்தகாதவர்கள்” (Untochables) என்று வரையறுக்கப்பட்டவர்களை ஒரு பட்டியலுக்குள் அடங்கும் சாதிகளாக (Scheduled Castes) தொகுத்து 1935 இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு  1937 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

1. Denied the supremacy of the Brahmins,
பிராமணர்களின் உயர் அதிகாரத்தை மறுப்பவர்கள்

2. Did not receive the Mantra from Brahmana or other recognized Hindu Guru,
பிராமணர்களிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்து குருவினரிடம் இருந்து மந்திரங்களைப் பெறாதவர்கள்

3. Denied the authority of the Vedas,
வேதங்களின் சட்ட அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்

4. Did not worship the great Hindu Gods,
இந்துக்கடவுள்களை  வணங்காதவர்கள்

5. Were not served by good not  Brahmanas,
பிராமணர்களைக் குடும்ப புரோகிதர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்கள்

6. Have no Brahman priests at all,
பிராமணர்களைக் கிட்டத்தட்ட புரோகிதர்களாக ஏற்றுக் கொளாதவர்கள்

7. Have no access to the interior of the ordinary Hindu temple.
இந்துக் கோயில்களில் நுழையும் அனுமதி  மறுக்கப்பட்டவர்கள்

8. Cause pollution,
தீட்டு ஏற்படுத்துபவர்கள்

9. Bury their dead and
தங்களின் இறந்தவர்களைப் புதைப்பவர்கள்

10. Eat beef and do not revere the cow,
பசுவை வணங்காதவர்கள்,பசுவின் கறியை உண்பவர்கள்.

மேற்கண்ட பட்டியலை உன்னிப்பாக உற்று  நோக்கினால் SC.என்றால் இந்துமதத்தின் ஆதிக்க அதிகாரத்தை எதிர்த்தவர்கள்,சாதி இந்துக்கள் அல்லாத சமத்துவவாதிகள் என்பது புரியும்.

 - (BAWS.Vol.5.P.232.)

வெள்ளி, 13 ஜூலை, 2018

மறைக்கப்பட்ட பறையர் வரலாறு


மறைக்கப்பட்ட பறையர் வரலாறு- ஜெ.மு.இமயவர்மன் 
அண்ணன் காடுவெட்டி குரு காஞ்சிபுரம் கூட்டத்தில் வைத்து சொன்னார் ""பறையனிடம் மோளம் தான் இருக்கும்னு"" எனக்கு காடு வெட்டி குரு மேல் கடும் கோபம் வந்தது அண்ணன் குரு பேசிய பேச்சில், பறையன்னா கீழ் சாதியா? ? தீண்டத்தகாதவனா? ? எப்போது சமூகம் என்னை தீண்டத்தகாதவன் என்றது என்று கடும் குழப்பத்தில் இருந்தேன்.  இந்நிலையில் என்னை சேலம் போலீசார் ஒரு வெடிகுண்டு வழக்கில் பொய்யாய் குற்றவாளியாய் சேர்த்தனர்.  அதற்காக முன் ஜாமீன் வாங்க நான் சென்னை உயர் நீதிமன்றம் சென்ற போது என் சாதியை சேர்ந்த சென்னை வழக்கறிஞர்கள் எனக்காக கடும் சிரத்தை எடுத்தனர்,நான் அவர்கள் சாதி என்ற ஒற்றை காரணத்திற்காக .அதனால் என் மணதில் கடும் நெருடல் ஏற்பட்டது,எந்த சாதிக்காக அந்த வழக்கறிஞர்கள் எனக்காக உழைத்தார்களோ அந்த என் சாதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று. இந்த சூழலில் ஒரு நாள் நள்ளிரவு 11.30 மணிக்கு நானும் என் மனைவி பொன்னியும் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், அப்போது பொன்னி தான் சொன்னார் இராஜ இராஜ சோழனின் அண்ணன் ஆதித்ய கரிகாலனை பாண்டியர்களுக்காக கொன்றது ""சோமன் சாம்பான் என்று "" அப்போது நான் திடுக்கிட்டேன். சாம்பவர் சோழர் ஆயிற்றே அவர்கள் எப்படி ஆதித்ய கரிகாலனை கொல்ல முடியும் .எனில் பறையர் பாண்டியரா ?? என்று  ...அதன் பின் வரலாற்றை தேடிப்புறப்பட்டேன். ஒரு வருடம் கடும் முயற்சி. காடு ,மேடாய் சுற்றி திரிந்தேன் .கல்வெட்டு ,கல்வெட்டாய் தேடிப்படித்தேன் .செப்படுகள் ,ஒலைச்சுவடுகள் ,புத்தகங்கள் இப்படி ஒன்றும் விடாமல் படித்தறிந்தேன் .எனது தேடலில் பொக்கிசமே கிடைத்தது .இதற்கு காரணமான என் மனைவி பொன்னியை கை எடுத்து கும்பிட்டேன்.""பறையன் தான் ஆதி தமிழ்  சாதி என்பதை குறித்து  பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன.பறையரின் ஆண்மை, வீரம், பண்பாடு குறித்த   ஆதாரங்கள் குவியல் குவியலாய் கிடைத்தது.வடதமிழ்நாட்டை அரசாண்ட பறையர், பறையர் வெளியிட்ட நாணயம், கொங்கு மண்டாலத்தை கோலோச்சிய பறையர், தென் தமிழ் நாட்டின் வீர சாம்பவ பறையர் பற்றி எல்லாம் அங்கொன்றுமாய், இங்கொன்றுமாய் சிதறி கிடந்த வரலாற்றை தேடி பிடித்தேன்.  விவசாயம் செய்த உழவு பறையர்,வீரமாய் வாழ்ந்த சாம்பவ பறையர், உலகிற்கே அறிவை போதித்த வள்ளுவ பறையர்,விஞ்சாணத்தை ஆதியில், தமிழ் சாதியில் கணித்த கணிய பறையர், நெசவு செய்த கோலிய பறையர், கோட்டை காட்டி வாழ்ந்த கோட்டை பறையர், இப்படி 108 வேலை செய்த பறையறை தேடி  பிடித்தேன்  அதை எல்லாம் தொகுத்து "பறையரின் மறைக்கப்பட்ட வரலாறு " என்ற புத்தகம் பதித்தேன் .இந்த புத்தகத்திற்கு ""ஈழ விடுதலைக்காய்  வாழும் ஐயா காசி ஆனந்தன் "" ஐயா அவர்களிடம் மதிப்புரை பெற்றேன்.மும்பையில் அகில பாரத பறையர் சாம்ராஜ்யம் ஏற்பாடில்அயோத்தி தாச பண்டியர் - தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பேத்தி ரேவதி பறையர்  கையால்  வெளியிட்டேன்.என் சாதியிடம் மோளம் மட்டும் தான் இருக்கும் என்று சொன்ன  அண்ணன்  காடுவெட்டி குருவின் போக்கில் மாற்றம் கொண்டு வர காடுவெட்டி குருவிடம் இந்த புத்தகத்தை கொடுத்து இதோ பறையன் வாழ்ந்து, வளர்ந்த வரலாறு "" முந்தி பிறந்தவன் நான்,முதல் நூல் தரித்தவன் நான்  ""என்றும் ,புற நானூற்றிலே "" பாணன்,பறையன் ,துடியன் ,கடம்பன்,இந்நாண்கல்லது குடியல்ல "" என்று போற்றி புகழ பட்ட என் பறையர் வரலாற்றை அண்ணன் காடுவெட்டி குருவிடம் தர ஆசைப்பட்டேன்.   குரு காலமானதால் என் புத்தகம் முற்றுபெறவில்லை "" என்ற வேதனை ஒரு புறம் இருந்தாலும் --- ஆய்வின் அடிப்படையில் நான் கண்டு கொண்டது. "",பறையன் தான் ஆதி தமிழ் முதல் சாதி, ஆண்ட சாதி "'--- சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன். இந்த பதிவின் பின்னூட்டத்தில் என் அருமை எதிரி PMK சேலம் அருள் ,காடு வெட்டி குரு அவர்களிடம் நமது வரலாறு கொண்டு சேர்க்கப்பட்டதாக சொல்கிறார். என் வாழ்வில் நான் அடைந்த மிகப்பெரிய வெற்றியாக இதை கருதுகிறேன். நன்றி அதே போல் பறையர், தேவர், நாடார் ,கவுண்டர், படையாச்சி, நாயக்கர் சாதி பெயரா? ??? இல்லை.                                       தேவர் என்கிற ஒரு இனமோ, சாதியோ ஆதியில் இல்லை .ஆம் இருபதாம் நூற்றாண்டில் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முன் முயற்சியால்  கள்ளர், மறவர், அகமுடையார் என அழைக்கப்பட்ட முக்குலத்தோர் ஒன்றினைக்கப்பட்டு  அவர்களுக்கு ஏற்கனவே தமிழ் அகராதியில் உயர்வான பொருள் கொடுத்த தேவர் என்ற பெயரை முத்துராமலிங்க தேவர் சூட்டினார். அதே போல் நாடார் என்ற பெயரும் ஆதியில் கிடையாது சாணார் என அழைக்கப்பட்டவரே 19 ம் நூற்றாண்டில் தங்களுக்கு நாடார் என்ற பெயரை சூட்டி கொண்டனர். அதே போல் கவுண்டர் என்பதும் சாதி அல்ல. ஆம் கொங்கு மண்டலம் என சொல்லப்படும் சேலம், ஈரோடு, நாமக்கல்,திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள வேளான்மை செய்யும் விவசாயிகள் தங்களுக்குள் கொங்கு மண்டல வேளாளர் என ஆரம்பத்தில் அழைத்து பின் தங்களுக்கு கவுண்டர் என்ற அர்த்தம் இல்லாத அடைமொழி சேர்த்தனர்.அதே போல் படையாச்சி என்பதும் சாதியல்ல. சாம்பவராயர் என்கிற பறையரின அரசர்களின் படைப்பிரிவின் தளபதிகளும் வீரர்களும் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயரே படையாச்சிகள் இதை பார்த்த தொண்டை மண்டலம் எனச்சொல்லப்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகளும் தங்களை படையாச்சிகள், கவுண்டர்கள், நாயக்கர் என அழைத்து கொண்டனர். அதே போல் நாயக்கர் என்பது சாதியா என்றால்? அதுவும் கிடையாது. விஜய நகர பேரரசின் படையெடுப்பு காலமான 13 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசை அண்டி பிழைத்தவர்கள் தங்களுக்கு வைத்து கொண்ட பெயர் நாயக்கர்கள் இவர்கள் வேறு நாயுடு வேறு.அதே போல் பறையர் சாதியா?  என்றால் கிடையாது இது ஒரு பேரினம். புற நாணூற்றிலே"" துடியன், பாணன், பறையன் ,கடம்பன் என்று இந்நான்கல்லது குடியில்லை" என்று பாடப்பட்ட ஒரு பேரினம். இவர்களில் பல தொழில் வல்லுநர் உண்டு .இவர்களில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள்  கணியன் என்றும்  வள்ளுவன் என்றும்,உண்ண உணவை தயாரித்த விவசாயிகள் சாம்பவ குல வேளாளர் என்றும், உடுக்க உடை கொடுத்த நெசவுப்பறையர் ,சாலியப்பறையர் என்றும் நீரை உருவாக்க கிணறு தோன்டிய தோண்டி பறையர், தோட்டி பறையராகவும்,மோளமடித்த முரசுபறையரும்,கோட்டை கட்டி வாழ்ந்த கோட்டை பறையரும், யாருக்கும் வீரத்தில் சலைக்காத கிழக்கத்திய பறையர் உட்பட 108  குழுக்கள் உள்ளன. இந்த பறையர்  என சொல்லப்படும் பேரினமே புரிதலில்லாமல் இன்று சாதியாய் பார்க்கப்படுகிறது.இன்றைய 2017 ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பறையர்  உள்ளனர் .இது ஐநா சபையில் இடம் பெற்றுள்ள பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.



பூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

ட்டியல் இனத்தவரிலும் குறிப்பாக பறையர் சாதி தோன்றியதன் வரலாறு குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வு நூல்கள் வந்துவிட்டன. இப்போது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன், ‘மறைக்கப்பட்ட பறையர் வரலாறு’ என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். வெளியீடு, கலகம் வெளியீட்டகம்.
ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், பின் அட்டைக் குறிப்பு வழங்கி கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளார்.
இந்நூலை முழுவதும் வாசித்து முடிக்கையில், பறையர் என்ற இனமே இந்தியாவில் பேரினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. இசை பறையன், களத்து பறையன், கிழக்கத்தி பறையன், நெசவுக்கார பறையன், பரமலை பறையன், பஞ்சி பறையன், பறையாண்டி பறையன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெயர்களில் இந்த சமூகத்தினர் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.
பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு செய்துள்ளார். களப்பிரர் ஆட்சிக்காலம், இருண்ட காலம் என்பதே பொதுவில் சொல்லப்படுவது. ஆனால் அம்பேத்கரோ, கி.மு. 3 முதல் கி.மு.6ம் நூற்றாண்டு வரையிலான களப்பிரர் ஆட்சிக்காலத்தில், வர்ணமுறையற்றும், சாதி சமயம் பேதமின்றி இருந்ததாகவும் தகவலைச் சொல்கிறார்.
ஒரு காலத்தில் நாடார்களும், முக்குலத்தோர்களும் ஆதிக்க சாதியினரால் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளனர். தொடர் போராட்டத்திற்குப் பின்னர், இவ்விரு சாதிகளின் அந்தஸ்து உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் பறையர் சமூகம் இன்னும் தீண்டாமைப் பிடியில் இருந்து மீளவே இல்லை என்ற கவலையையும் வாசகர்களுக்கு கடத்தி விடுகிறார், நூலாசிரியர்.
தமிழகத்தில் பட்டியல் சாதியினர் மீது 1948ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும் பார்வைக்குக் கொடுத்துள்ளார்.
கூலியை உயர்த்திக் கேட்டதற்காகவே 44 தலித்துகளை குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட கீழ் வெண்மணி சம்பவம் முதல் வாச்சாத்தி, தருமபுரி நத்தம் காலனி சூறையாடப்பட்டது வரை குறிப்பிட்டுள்ளார்.
துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய குடிகளே சிறந்தது என்ற புறநானூறு பாடலும் பறையர் இனத்தின் தொன்மையை சான்று பகர்கிறது. அதற்காக புறநானூறு பாடல்களை அதிகமாகவே சான்றுக்காக கொடுத்திருப்பதால், வாசகர்களுக்கு சற்று அயற்சியை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
சேரர், சோழர், பாண்டியர்கள் மட்டுமின்றி கடையேழு வள்ளல்களும்கூட பறையர் இனத்தைச் சேர்ந்தவர்களே என்கிறார், நூலாசிரியர். குறிஞ்சி நிலம், பாறைகள் நிறைந்தது. பாறைகள் நிறைந்த பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களை ‘பாறையர்’ என்றும் அதுவே பின்னாளில் பறையர் என்றும் மருவியதாகச் சொல்கிறார்.
அந்தக் கணக்கின்படி அவர் சங்ககால மன்னர்கள் யாவருமே பறையர் என்ற பட்டியலுக்குள் சேர்த்துக் கொண்டதை சரியான தர்க்கமாகக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவில் இந்த ஆய்வு நூல் சற்று போதாமையுடன் இருக்கிறது.
மற்றோர் இடத்தில், சோழ மன்னர்களை ‘பரகேசரி’ என்றும் அழைப்பார்கள் (பக். 44) என்கிறார். பரகேசரி என்ற சொல் வாயிலாக சோழ அரசர்கள் பறையர் என்று நிறுவ முயற்சிக்கிறார். பரகேசரி என்ற சொல்லின் அர்த்தம் தெரியாமல் அவர் அப்படி கருதி இருக்கலாம் என்பது என் கருத்து.
ராஜகேசரி, பரகேசரி என்பது சோழ அரசர்களுக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்களே. ராஜகேசரி என்றால் ‘அரசர்களுக்கெல்லாம் சிங்கம்’ போன்றவன் என்பதும், பரகேசரி என்றால் ‘அயலக அரசர்களுக்கு சிங்கம் போன்றவன்’ என்ற பொருளில் அத்தகைய பட்டப் பெயர்கள் மொழியப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் சொல்லும் மருவி, பறையர் ஆனதாகச் சொல்வது ஏற்பதற்கில்லை.
பெரும்பாலும் மேற்கோள்களாகவே கடந்து செல்வதால், நூலாசிரியர் இன்னும் கொஞ்சம் கள ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். எனினும் பறையர் வரலாறு பற்றிய ஆரம்பக்கட்ட தகவல் திரட்டாக இந்நூலைக் கருதலாம்.
நூல்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு
வெளியீடு: கலகம் வெளியீட்டகம்
பக்கம்: 190 விலை: ரூ.200.
தொடர்புக்கு: 9597654190.

செவ்வாய், 10 ஜூலை, 2018

தாஜ்மஹால் பற்றி நமக்குத் தெரியாத மர்மங்கள்!

தாஜ்மஹால் பற்றி நமக்குத் தெரியாத மர்மங்கள்!

ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தான் பேகம் நினைவாகக் கட்டிய தாஜ்மஹாலில் பல மர்மங்கள் புதைந்துள்ளன.
தாஜ்மஹாலில் பல மர்மங்கள் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவற்றை கண்டறியும் முயற்சிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. அவ்வாறு முயற்சி எடுக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவற்றில் சில காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்…
1) அல்லாவின் 99 பெயர்கள் தாஜ்மஹாலின் சுவர்களில் பலவித வண்ணங்களில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்லாம் மதப்படி, கடவுளுக்குப் பெயர் எதுவும் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



2) இப்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலைப் போல, கருப்பு தாஜ்மஹால் ஒன்றை கட்ட ஷாஜகான் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரை வீட்டுச் சிறையில் தள்ளி, அந்த திட்டத்தை அவுரங்கசீப் தவிடுபொடியாக்கிவிட்டார்.

3) 300 ஆண்டுகளுக்கு முன்பே, தாஜ்மஹாலின் மதிப்பு 32 பில்லியன் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இது 65 பில்லியனாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

4) தாஜ்மஹாலில் சிறு தவறு கூட நேராத வகையில், கட்டிடப் பணிகளில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள சமச்சீரான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.

5) இந்த கட்டிடத்தை கட்ட 22 வருடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுபோன்ற சிறப்பான ஒரு கட்டிடத்தை வேறு யாரும் கட்டக்கூடாது என்பதற்காக, தாஜ்மஹால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களின் கைகளை, ஷாஜகான் வெட்டிவிட்டதாகவும் கதைகள் உலாவுகின்றன.

6) தாஜ்மஹால் உள்ளேயும் சிறு ஓடை ஒன்று ஓடுவதாகக் கூறப்படுகிறது. ஷாஜகானை பழிவாங்கும் வகையில் கட்டிட சிற்பிகள் இந்த வேலையை செய்துள்ளனர்.

7) கட்டிடத்தின் உள்ளே ஓடும் சிறு ஓடையின் மூலம் எங்கே உள்ளது என்பது யாருக்குமே தெரியவில்லை. இதனால், கட்டிட வடிவமைப்பாளரை ஷாஜகான் கொல்லாமல் உயிருடன் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

8) தாஜ்மஹாலின் உள்ளே, பெண் ஒருவர் அடிக்கடி அழும் சத்தம் கேட்பதாக, தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனை சில சுற்றுலாப் பயணிகளும் உறுதி செய்துள்ளனர்.

9) தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாகவும், அதனை உருமாற்றி, தாஜ்மஹாலாக ஷாஜகான் மாற்றிவிட்டார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

10) மேலும், தாஜ்மஹாலை ஷாஜகான் புதியதாக கட்டவில்லை என்றும், ஏற்கனவே இருந்த கோவிலை உருமாற்றி, சலவை கற்களை பதித்து, தாஜ்மஹால் என மாற்றிவிட்டார் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

எது எப்படியோ, பலவித மர்மங்களை கொண்டிருந்தாலும், வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…

செவ்வாய், 3 ஜூலை, 2018

இந்திய புலியின் மாவீரனின் கதை [ திப்பு சுல்தான் ] : The Life Story of Tipu Sultan

இந்திய புலியின் மாவீரனின் கதை [ திப்பு சுல்தான் ] : The Life Story of Tipu Sultan

திப்பு சுல்தான் (பிறப்பு: நவம்பர் 20, 1750 - 4 மே 1799), திப்பு சாஹிப் என்றும் அழைக்கப்படும் திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளர் ஆவார். அவர் மைசூர் சுல்தான் ஹைதர் அலி மூத்த மகன் ஆவார். திப்பு சுல்தான் தனது ஆட்சியின் போது பல நிர்வாக கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினார், அதில் அவரது நாணயம், ஒரு புதிய மௌலூடி சாம்பல் காலண்டர் மற்றும் மைசூர் பட்டு தொழில் வளர்ச்சியை துவக்கிய புதிய நில வருவாய் அமைப்பு ஆகியவை அடங்கும். அவர் இரும்பு தாழ்வான மைஸசியன் ராக்கெட்டுகளை விரிவுபடுத்தி, இராணுவ கையேடு Fathul Mujahidin ஆணையிட்டார் மற்றும் ராக்கெட் பீரங்கியைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறார். ஆங்கிலோ-மைசூர் வார்ஸில் பிரிட்டிஷ் படைகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் முன்னேற்றத்திற்கு எதிராக ராக்கெட்டுகளை நிறுவினார், இதில் பொல்லிலூர் போர் மற்றும் செண்டிங்கேபத்தின் முற்றுகை உட்பட. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகின் மிக உயர்ந்த உண்மையான ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் சிலவற்றில் மைசாரை ஒரு பெரிய பொருளாதார சக்தியாக நிறுவியுள்ள ஒரு லட்சிய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தையும் அவர் மேற்கொண்டார்.
 
திபூ சுல்தானுடனான ஒரு கூட்டணியை பிரான்சின் தளபதியாக இருந்த நெப்போலியன் போனபர்டே முற்பட்டார். திப்பு சுல்தான் மற்றும் அவரது தந்தை ஆகியோர் பிரஞ்சு பயிற்சி பெற்ற இராணுவத்தை பிரிட்டிஷ் உடனான தங்கள் போராட்டத்தில் இணைத்தனர். மைசூர் மராத்தியர்கள், சீரா, மற்றும் மலபார், கொடகு, பெட்னோர், கர்னாட்டிக், மற்றும் திருவாங்கூர். திப்புவின் தந்தை ஹைதர் அலி, மைசூர் கைப்பற்றப்பட்ட அதிகாரத்திற்கு உயர்ந்து, 1782 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் மரணத்தின் மீது மைசூர் வெற்றி பெற்றார். இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போரில் பிரித்தானியருக்கு எதிரான முக்கியமான வெற்றிகளை அவர் வென்றார் மற்றும் அவரது தந்தை இறந்தபின் மங்களூரில் 1784 உடன்படிக்கை டிசம்பர் 1782 இல் இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போரின் போது புற்றுநோய் இருந்து வந்தது.
திப்பு சுல்தான் 4.8 மில்லியன் ரூபாக்களை மராத்தாக்களுக்கு ஒரு முறை போருக்கு செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார், மற்றும் மராத்தா-மைசூர் போர் உட்பட மராட்டிய மற்றும் திப்புவுடன் கஜெண்டிராகட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1.2 மில்லியன் ரூபா வருடாந்த அஞ்சலி, ஹைதர் அலி கைப்பற்றப்பட்ட அனைத்து பிரதேசங்களையும் திரும்பப் பெறுவதற்கும் கூடுதலாக.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியின் திரிமுனை எதிரி ஒரு எதிரிடையான எதிரியாக இருந்தார். 1789 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்-சார்புடைய திருவாங்கூர் மீது தனது தாக்குதலை முறித்துக் கொண்டார். மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போரில், அவர் முன்னர் வெற்றி பெற்ற பிராந்தியங்களை இழந்து, செண்டிங்காபதம் ஒப்பந்தத்தில் தள்ளப்பட்டார், மலபார் மற்றும் மங்களூர் உட்பட. ஒட்டோமான் சாம்ராஜ்ஜியம், ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்ஸ் உட்பட வெளிநாட்டு நாடுகளுக்கு அவர் தூதர்களை அனுப்பினார்.
நான்காம் ஆங்கிலோ-மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைப்புகள் ஹைதராபாத் நிஜாம் ஆதரித்தன. அவர்கள் திப்புவைத் தோற்கடித்து, ஸ்ரீராங்கபத்னா கோட்டையைத் தற்காத்துக் கொண்டிருந்தபோது, ​​மே 17, 1799 அன்று கொல்லப்பட்டார்.
அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கடுமையான எதிர்ப்பை அளித்த சில தென் இந்திய அரசர்களில் ஒருவரானார், ஹைதர் அலி உடன். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக போராடிய ஒரு ஆட்சியாளராக அவர் பாராட்டப்படுகிறார். அதேபோல், அவர் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்து, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மாப்பிள் முஸ்லிம்கள் மீதான தனது அட்டூழியங்களை விமர்சித்தார்.