புதன், 25 டிசம்பர், 2019

18 ம் படி என்றால் என்ன?

18 ம் படி என்றால் என்ன?

18 படிக்கு வைதீகம் தன் தேவைக்கேற்ப பல விளக்கங்கள் சொல்லும்.
அது கண்மாய்கரையில் இருக்கும் கருப்பசாமியும் தன் கடவுளின் அவதாரம்,அம்சம் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை தன்னுள் ஈர்க்க வைக்க பல்லிளித்தக் கதை.

திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நம்பூதிரி பார்ப்பனர்கள் உண்டு. இவர்கள் தங்களை கடவுளுக்கு அடுத்த நிலையில் தாங்கள் தான் என்று சொல்லிக் கொள்வார்கள். இவர்களால் அப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதிகள் 18.

1.சாணார் (நாடார்)
2.கருமறவர் (செங்கோட்டை மறவர்)
3.பாணர்
4.குயவர்
5.நசுரானியர்(சிரியன் கத்தோலிக்கர்)
6.துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை)
7.குறவர்
8.ஈழவர்-தீயர்
9.வாணியர்
10.புலையர்
11.பறையர்
12.கம்மாளர்
13.கைக்கோளர்
14.இடையர்
15.நாவிதர்
16.வண்ணார்
17.பரவர் (தீவாரர்)
18 சக்கிலியர் (தெலுங்கர்)

இந்த 18 க்கும் மேலே தான் நாயர்களும்-நம்பூதிரிகளும் என்ற பொருளில் நம்பூதிரிகளால் நிலைநிறுத்தப்பட்ட 18 படி மேலே உள்ள ஐயப்பன். இந்த 18 சாதிகளுமே தோள் சீலை மறுக்கப்பட்ட சாதிகள் தான்.

18 பட்டியைக் கூட்டுடா என்ற பஞ்சாயத்துச் சொல்லும் இதையொட்டியதே.
18 சாதியையும் ஊர் அம்பலத்தில் கூட்டி தண்டனைகள் மற்றும் வரிகள் தீர்மானிக்கப்பட்டது.

பிராமணீய வைதீக கடவுள்களை
18 சித்தர்கள் கடுமையாய் சாடினர்.கிண்டல் கேலி செய்து மூடத்தனத்தை எதிர்த்தனர். கடவுளை வணங்கினால் நோய்
தீராது என்று வைத்தியம் செய்தனர்.

நட்ட கல்லும் பேசுமோ என்று
கேட்டனர்.இது இங்கு  புதிதாய் காலூன்றிய வைதீக மதம் இந்த சவாலை  சதிமூலம் தீர்வு கண்டது.18 சித்தர்கள் அழகர் மலை வந்திருந்தனர்.
அவர்கள் அழகர் கோவில் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க
வந்திருப்பதாய் பட்டரின் கனவில் கடவுள் சொன்னதாய்கூறி
18 பேரை வெட்டும்படி கூறப்பட்டது.மூடர்கள் வெட்டிச் சாய்த்தனர்.
               
அதன்பிறகு வைதீகமதம் நிம்மதியடைந்து அந்தப் 18
சித்தர்களை மிதித்தே தங்களின் கடவுள் மேலேறியதாய் பொருள்
கொண்டு 18 படிகளை அமைத்தனர்.அதுவே 18 ம்படியாகும். சித்தர்கள் காலம் 800 முதல் 1000 என வரையறுத்துள்ளனர்.

அழகர் கோவில் வரலாறு என்ற நூலை பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக் கழகம்  வெளியிட்டது. சித்தர்கள் பற்றிய பதிவின் குறிப்புகள் அதையொட்டியதே.

18 படி குறித்த பார்ப்பனியக் கதையை மறுத்து,சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய வரலாற்றை, சமூக சீர்திருத்தப் போராளி நாராயண குரு வரலாறில் படிக்கலாம்.

வியாழன், 19 டிசம்பர், 2019

டெல்லி செங்கோட்டை: வரலாற்றின் பிரம்மாண்ட சுவாரஸ்யங்கள்

டெல்லி செங்கோட்டை: வரலாற்றின் பிரம்மாண்ட சுவாரஸ்யங்கள்



டெல்லி செங்கோட்டை - இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோதி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.
செங்கோட்டைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது இங்குதான். சுதந்திரத்தை குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார்.
 

400 ஆண்டு கால வரலாறு
செங்கோட்டையானது, டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. முகலாய ஆட்சிக் காலத்தின் அரசியலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் இது பிரதிபலிக்கிறது.
முதலில் முகலாயர்களின் தலைநகராக ஆக்ராதான் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக ஆக்ராவில் இருந்து ஷாஜகானாபாத்துக்கு (தற்போதைய பழைய டெல்லி) 1638ஆம் ஆண்டு தலைநகரை மாற்றினார் மன்னர் ஷாஜகான்.
'முகலாய சாம்ராஜ்யத்தின் பயணம்' என்ற தனது புத்தகத்தில் இதுகுறித்து எழுதியிருக்கிறார் ஐரோப்பிய பயணி ப்ரான்காயிஸ் பெர்னியர். அதில், ஆக்ராவில் தாங்க முடியாத வெப்பம் நிலவியதால், டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சாமராஜ்யத்தை கட்டுப்படுத்த டெல்லி பொருத்தமாக இருந்ததால், ஆக்ராவில் இருந்து தலைநகர் மாற்றப்பட்டது என்ற காரணமும் கூறப்படுகிறது.
மதில்களும்மாளிகைகளும்
 

1639 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி செங்கோட்டை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதை கட்டி முடிக்க 9 ஆண்டுகாலம் ஆனது. அப்போதைய மதிப்பிலேயே இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில் பெரும்பாலான செலவு, மாளிகை கட்டவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிவப்பு நிற கற்கல் பயன்படுத்தி கட்டப்பட்டதாலே, இது செங்கோட்டை என்று பெயரிடப்பட்டது.

கலை வடிவம் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளின் உச்சத்தை செங்கோட்டை நமக்கு காண்பிக்கிறது என்று பலராலும் புகழப்படும் இக்கட்டடம் பாரசீக, ஐரோப்பிய மற்றும் இந்திய கலைவடிவங்களின் தொகுப்பில் கட்டப்பட்டுள்ளது.
யமுனை நதியின் மேற்கு கரையில் இருக்கும் செங்கோட்டை, மேற்கு மற்றும் கிழக்கில் நீண்டு செல்கிறது. செங்கோட்டையின் மதில் சுவர்கள், 2.41 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.
இதன் பிரதான கட்டட அமைப்பாளர்கள் இரண்டு பேர். மற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் ஹமித் மற்றும் அஹமத் ஆகிய இருவருமே இதனை கட்டும் வேலையில் முக்கிய பங்காற்றியவர்கள். இதற்காக பின்னாளில் இருவருக்கும் முகலாய மன்னரால் தக்க சன்மானம் வழங்கப்பட்டது.
செங்கோட்டைக்கு இரண்டு பிரதான நுழைவாயில்கள் உள்ளன. ஒன்று லாகூர் நுழைவாயில் மற்றொன்று டெல்லி நுழைவாயில்.
லாகூர் நுழைவுவாயில்
 

செங்கோட்டையின் மிக முக்கியமான நுழைவாயில் இதுதான். முக்கிய பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் மனுதாரர்களால் அப்போது இந்த நுழைவாயில் பயன்படுத்தப்பட்டது.
இரண்டாம் அக்பர் ஆட்சிகாலத்தில் செங்கோட்டையை பார்வையிட வந்த பிஷப் ஹீபர், "நான் பார்த்ததிலேயே சிறந்த நுழைவாயில் மற்றும் நடைக்கூடம் இதுதான்" என்று இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஔரங்சிப் காலகட்டத்தின் போது (1658-1707), அனைத்து பிரதான நுழைவுவாயில்களுக்கு முன்பும் 10.5 மீட்டர் உயரம் கொண்ட பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன.
கோட்டையை மணமகளாக்கி, அந்த முகத்திற்கு முக்காடு அணிந்திருக்கிறாய் என்று ஆக்ராவில் சிறையில் இருந்த ஷாஜகான், தன் மகன் ஔரங்சிப்பிற்கு, இந்த பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டது குறித்து கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
டெல்லி நுழைவுவாயில்

ஷாஜகானாபாத்தின் தெற்கு வாயிலே இந்த டெல்லி நுழைவாயில். வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக ஜம்மா மசூதிக்கு செல்ல மன்னரால் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால், 1857க்கு பின், செங்கோட்டையை பிரிட்டன் கைபற்றிய பிறகு இந்த நுழைவாயில் பொதுமக்களுக்கு மூடப்பட்டது.
டெல்லி நுழைவாயிலின் இரு பக்கங்களும் யானைகளின் சிலை அமைந்திருந்தது. ஆனால், ஔரங்கசீப்பின் மத நம்பிக்கைகள்படி, சிலை வைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதனால் அதனை இடிக்க உத்தரவிட்டார்.
தற்போது அங்கு காணப்படும் யானை சிலைகள், 1903ல் லார்ட் கர்சனால் எழுப்பப்பட்டதாகும்.

சூறையாடப்பட்ட செங்கோட்டை
நாம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தோமேயானால், செங்கோட்டை பலரால் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
யார் கொள்ளையடித்தார்கள்?

1739ஆம் ஆண்டு இரானிய ஆட்சியாளர்களில் ஒருவரான நதிர்ஷா, கோஹினூர் வைரம் பதித்த மயில் சிம்மாசனத்தை இங்கிருந்து கொள்ளையடித்து சென்றார்.
பின்னர் 18ஆம் நூற்றாண்டில், மராத்தியர்களாலும், ரொஹிலாக்களாலும் (உருது மொழி பேசக்கூடியவர்கள்) முகலாய கோட்டை கொள்ளையடிக்கப்பட்டது.
இறுதியாக 1857ஆம் ஆண்டு, கடைசி முகலாய மன்னர் பகதுர் ஷா சஃபரிடம் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். பிரிட்டன் படையினரால், செங்கோட்டை கட்டடத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.
அவர்களின் தலைமையகமாக செங்கோட்டை மாற்றப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள் மற்றும் மாளிகைகள் ராணுவ முகாம்களாக செயல்பட்டன. சமகால ஆவணங்களின்படி, சுமார் 80 சதவீத கோட்டை கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ராணுவ குடியிருப்புக்காக பயன்படுத்தப்பட்டது.
பிரம்மாண்டமான செங்கோட்டையில் உள்ள மற்ற இடங்களை பற்றி பார்க்கலாம்.

நவுபுத் கானா (இசை மன்றம்)
செங்கோட்டையின் உள்நுழைந்தவுடன் இதனை நீங்கள் பார்க்க முடியும். இதன் மேல் தளம் இசை மன்றமாக இயங்கியது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரச வம்சத்தை சார்ந்தவர்கள் வரும்போது அவர்களை வரவேற்க மேளம் அடித்து இசை இசைக்கப்படும்.
தற்போது இது 'இந்திய போர் நினைவு அருங்காட்சியம்' ஆக மாற்றப்பட்டுள்ளது.

திவான்--அம் (பொது மன்றம்)

திவான்- இ-அம் உடைய சிறப்பம்சம் அதில் இருக்கும் பளிங்கு அரியணையும், பின் சுவரும். 1648, 16 ஏப்ரல் அன்று செங்கோட்டையை ஷாஜகான் திறந்து வைத்தபோது முதல் மன்றத்தை இங்குதான் நடத்தினார்.
இங்கு அமர்ந்தே பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டது.

திவான்--கஸ் (சிறப்பு மன்றம்)

அழகு நிறைந்த பிரம்மாண்டத்திற்கு பெயர் போனது இந்த கட்டடம். இங்குதான் முக்கிய மற்றும் ரகசிய அரசு விவகாரங்களை அதிகாரிகளுடன் மற்றும் பிற நாட்டு தூதர்களுடன் மன்னர் விவாதிப்பார். இக்கட்டடத்தின் நடுவில் பளிங்கு மேடை ஒன்று இருக்கும். அலங்கரிக்கப்பட்ட அந்த மேடையில்தான் பிரபலமான மயில் அரியணை இருந்தது. 1739ல் இந்த அரியணை பெர்ஸியாவின் நதிர் ஷாவால் எடுத்து செல்லப்பட்டது.
ஹம்மாம் (குளியலறை)

திவான்-இ-கஸ் கட்டடத்தின் வடக்கே இது அமைந்துள்ளது. இதில் மூன்று முக்கிய அறைகள் இருக்கும். ஒன்று குளிர் தண்ணீரில் குளிக்கும் அறை, வெந்நீரில் குளிக்கும் அறை மற்றும் ஆடை மாற்றும் அறை. பளிங்கு கற்கள் மற்றும் மலர் வடிவத்திலான இரண்டாம் ரக ஆபாரண கற்கள் வைத்து இந்த அறைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
மோட்டி மஸ்ஜித்

மோட்டி மஸ்ஜித் என்பது பளிங்கால் கட்டப்பட்ட சிறிய மசூதியாகும். மன்னர் ஔரங்கசிப்பால் அவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. அரச குடும்பத்து பெண்களுக்கு இதில் தனி வழி இருந்தது.
கஸ் மகால் (சிறப்பு மாளிகை)

இதுதான் மன்னரின் குடியிருப்பு பகுதி. இதில் மூன்று பகுதிகள் இருக்கும். இதில் ஒரு அறை மன்னர் தனியாக வழிபாடு செய்வதற்கும், நடு அறையானது உறங்குவதற்கும், மூன்றாவது அறையானது ஆடை மாற்றும் அறையாகவும் பயன்படுத்தப்பட்டது. மலர் வடிவிலான ஓவியங்களால் இவை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
ரங்க் மஹால் (வண்ணமயமானமாளிகை)

இந்த பெரும் கட்டடம் மூத்த அரசிகளுக்காக கட்டப்பட்டது. அழகான வண்ணமயமான உள்அறை அலங்காரங்களால், இது ரங்க் மஹால் என்று அழைக்கப்பட்டது.
மும்தாஜ் மஹால்

முதலில் ஜஹனரா பேகம் மேன்ஷன் என்று அழைக்கப்பட்ட இது, அரச அந்தப்புரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது, முகலாய சகாப்தத்தின் பொருட்களை வைத்திருக்கும் அருங்காட்சியமாக விளங்குகிறது.
பழைய டெல்லியின் இறைச்சலுக்கு இடையே பெரும் சகாப்தத்தின் வரலாற்றை ஏந்தி நிற்கும் செங்கோட்டையின் வரலாற்றை இந்த வார்த்தைகளில் அல்லது ஒரு கட்டுரையில் முழுவதுமாக கூறிவிட முடியாது.
சற்று அமைதியாக நின்று கோட்டையை உயர்ந்து பார்த்தால், இந்திய மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அனுபவித்த சுகதுக்கங்களையும் நம் கண் முன் பார்க்கலாம்.
நன்றி பிபிசி.

சனி, 14 டிசம்பர், 2019

தேயிலை பற்றி அதிகம் அறிந்திடாத தகவல்கள்


தேயிலை பற்றி அதிகம் அறிந்திடாத தகவல்கள்

தேநீர். இன்றைய உலகில் நீருக்கு அடுத்தபடியாக அதிகமாக உட்கொள்ளப்படும் பானம். இலங்கையர்கள் என்ற வகையில் ஏனைய  நாட்டவர்களை விட தேயிலை மற்றும் தேநீர் ஆகியவற்றுடனான உறவு நமக்குச்சற்றே அதிகம். காலையில் எழுந்தவுடன் அந்நாளுக்கான ஆரம்பம் ஒரு கோப்பை தேநீர். மாலை நேர இடைவெளிக்கு ஒரு கோப்பை தேநீர். தலை வலி என்றால் ஒரு கோப்பை தேநீர். விருந்தினர் வருகையென்றால் தேநீர். இரவுநேர விழித்திருப்புகளுக்கு துணை செய்வதும் ஒரு கோப்பை தேநீர். இவ்வாறு வெவ்வேறு சேர்மானங்களுடனான தேநீர் நம்மில் பலரது வாழ்க்கையுடன் நீண்டநாளாக பயணம் செய்தவண்ணமே இருந்து வருகிறது. இந்த தேநீரின் தாயகம் எது? ஏன் இது இன்றளவில் உலக  மக்களிடையே இத்துணை பிரபல்யம் பெற்றிருக்கிறது? இக்கேள்விகளுக்கான விளக்கத்தை அளிப்பதே இந்த ஆக்கம்.


தேயிலையின் தாயகம்
இன்றைய உலகின் மாபெரும் மக்கள் தொகையை தன்வசம் பேணிவரும் சீனாவே தேயிலையை முதன்முதலில் பயிர்செய்த நாடாக அடையாளம் காணப்படுகிறது. சீன புராணங்களின் படி விவசாயத்தை உலகத்திற்கு வெளிப்படுத்திய முதலாவதும், தெய்வீகமானவருமான விவசாயி ஷென்னோங் ஒரு நாள் கானகத்தில் உண்ணக்கூடிய பச்சைத்தாவரங்களை கண்டறியும் நோக்குடன் செயற்பட்டுக்கொண்டிருந்த போது, தவறான தாவரங்களை உண்டு 72 முறை பாதிப்படைந்தார். ஆனால் அந்த தாவர விஷங்கள் ஷென்னோங்கை முழுமையாக பாதிப்பதற்கு முன்னராக காற்றில் பறந்து வந்த இலையொன்று அவரது வாயில் விழுந்தது. அதனை உண்டவுடன் ஷென்னோங்கை தங்கியிருந்த விஷங்கள் செயலற்று போகலாயின. இவ்வாறே இவ்வுலகின் முதல் விவசாயி தேயிலையை கண்டறிந்தார். இந்த புராணக்கதை உண்மையாக இல்லாமல் போயினும் இக்கதை அக்கால சீனர்கள் தேயிலையை மருத்துவ நோக்கத்துக்காக பயன்படுத்தினார்கள் என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது.



சீனாவில் தேயிலைப் பயிர்ச்செய்கை நடைபெற்றுவந்த முறை
எகிப்தின் ஃபாரோக்கள்  கீசா பிரமிட்டுகளை கட்டுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது 6000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே தேயிலையானது சீனாவில் பயிர்செய்யப்பட்டு வருவதாக கருதப்படுகிறது. எனினும் கி.மு மூன்றாம் நூற்றாண்டின் அளவிலேயே தேநீர் பயிரிடல் குறித்தான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் தேயிலையை ஒரு கீரை வகையாக பயன்படுத்தி தானியக்கஞ்சி வகைகளை செய்து வந்தனர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே அவை உணவில் இருந்து குடிப்பானமாக மாற்றம் அடைந்தது. ஆரம்பகால தேயிலை இன்று நாம் பார்ப்பது போல தூளாக இருக்கவில்லை, மாறாக பச்சை தேயிலை நீராவியில் அவிக்கப்பட்டு அச்சுக்களில் அழுத்தி ஒரு கேக் வடிவத்தில் சேமிக்கப்பட்டது. இதனை சீனர்கள் muo-cha என்று அழைத்தனர். தற்போது அதுவே motcha என்று மருவியுள்ளது.

தனியே ஒரு பானமாக மட்டுமில்லாது வேறு பல வழிகளிலும் தேநீருக்கு சீனத்தில் அதிக முக்கியத்துவம் இருந்தது.ஆரம்பகால சீன இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தேநீரானது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மேலும் சீனாவின் பல பேரரசர்கள் தேநீரை விரும்பி உட்கொண்டமையால் தேநீரானது ஒரு சமூக அந்தஸ்து மிக்க பொருளாக இருந்தது. தற்கால நவீன கோஃபி ஷோப்களில் செய்யப்படும் coffee painting போலவே அக்கால சீனத்தில் தேயிலை சாயத்தை பயன்படுத்தி ஓவியங்கள் வரையப்பட்டது. நீண்டகாலமாகவே சீனாவுக்குள் மாத்திரமே அடைப்பட்டிருந்த தேயிலையானது கி.பி 9ம் நூற்றாண்டில் நிலவியிருந்த டாங் பேரரசின் ஆட்சியில் ஜப்பானிய துறவியொருவர் மூலமாக ஜப்பானுக்கு சென்றது. காலப்போக்கில் தேயிலையை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளில் புதிய மாற்றங்கள் உண்டாகிய வண்ணமே இருக்க கி.பி 14ம் நூற்றாண்டிலேயே இன்று நாம் காணும் தேயிலை தூளுக்கான வடிவம் தரப்பட்டது. அக்காலத்தில் சீனத்தை ஆண்ட மிங் அரச குடும்பம் தேயிலையை பல நாட்களுக்கு சேகரித்து வைக்கக்கூடிய வகையில், பச்சை தேநீரை அவிக்காது, சூடான சட்டிகளில் வறுத்து பொடியிட்டு வைத்துக்கொண்டனர். சீனா பல காலமாக மேற்கத்தைய நாடுகளுடன் வணிகத்தொடர்புகளை பேணி வந்தது. அந்த வகையில் சீனத்தில் இருந்து ஏற்றுமதியான பிரதான பண்டங்க்ள் தேயிலை, சீனப்பட்டு மற்றும் போசளின்.

ஐரோப்பிய தேநீர் கலாசாரம்.
இன்றைய உலகில் தேநீருக்கான கேள்வி அதிகரித்து இருப்பதற்கான காரணம் 1600களில் தேநீர் ஐரோப்பிய கலாச்சாரத்தில் ஏற்படுத்திய தாக்கமே. முதன்முதலில் ஐரோப்பிய மதத்துறவிகள் மூலமே தேயிலையின் அறிமுகத்தை மேற்கு நாடுகள் கண்டன. பிறகு ஐரோப்பிய நாடுகள் தாமாக சீனாவுடன் தேயிலை வர்த்தகத்தை நடத்தின. கிழக்குலக வர்த்தகத்தின் ஆரம்ப சக்தியாக பரிணமித்தவர்கள் டச்சுக்காரர்களே. இவர்கள் தான் முதல் ஐரோப்பிய தேயிலை வியாபாரிகள். கி.பி 1658இல் முதல்முறையாக டச்சுக்காரர்கள் லண்டனில் தேயிலையை விற்கலாயினர். அப்போது தேயிலைக்கு வழங்கப்பட்ட விளம்பரப்படுத்தல் அதன் மருத்துவ ரீதியான பயன்களே. டச்சுக்காரர்களின் வியாபாரத்தின் விளைவாக ஐரோப்பாவின் சிலபகுதிகளில் தேயிலைக்கான சந்தைகள் உருவான போதிலும் பாரிய அளவு முன்னேற்றங்கள் எதுவும் உருவாகவில்லை.



இளவரசி கேத்தரின் தன் தோழிகளுடன் தேநீர் அருந்தும் காட்சி

கி.பி 1662 இல் போர்த்துக்கள் நாட்டின் இளவரசியான கேத்தரின் ஆஃப் ப்ரகான்ஸா இங்கிலாந்தின் அரசரான சார்ள்ஸ் 2 ஐ மணம் செய்தமையே தேயிலைக்குரிய அந்தஸ்தை ஐரோப்பாவில் உயர்த்தியது. 17ம் நூற்றாண்டில் இருந்தே உலகசக்தியாக வளர்ச்சியடைந்து வந்த பிரித்தானியாவிற்கு அரசியாக வேண்டும் என்ற நோக்கக்த்திற்க்காகவே இளவரசி கேத்தரின் சார்ள்ஸை மணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்காக போர்த்துக்கள் தரப்பில் இருந்து பாரியளவில் சீர்வரிசைகள் பிரித்தானியாவிற்கு சென்றது. அதில் ஒன்றே அரசி கேத்தரினின் விருப்பத்திற்குரிய தேயிலை. கேத்தரின் அரசியானதும் கேத்தரினிடம் இருந்த தேநீர் பழக்கம் பிரித்தானிய உயர்குடி பெண்களிடம் வேகமாக பரவியது. மாலை நேரங்களில் பெண்கள் ஒன்றாக இணைந்து தேநீர் பரிமாறிக்கொள்ளும் டீ டைம் பழக்கம் இன்றளவும் ஐரோப்பாவில் வழக்கில் உள்ளது. Motcha என்று அழைக்கப்பட்ட தேயிலைக்கு Tea என்ற பெயர் வருவதற்கு காரணமாக இருந்ததும் அரசி கேத்தரின் தான் என்ற கருத்து நிலகிவுகிறது. கேத்தரின் தேயிலைகளை கொண்டுவந்த பெட்டியில்

என்று எழுத்தப்பகிட்டிருந்தது. இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்களும் இணைந்தே TEA என்ற வார்த்தை உருவானது என்று கருதப்படுகிறது.

பிரித்தானியவில் உருவான இந்த புதிய கலாச்சாரம் வெகுவிரைவில் அண்டைய நாடும், ஐரோப்பாவின் மற்றுமொரு சக்தியுமான பிரான்சில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தேயிலைக்கான கேள்வியில் மிகவேகமாக உயர்வடைந்தது. முதன்முதலில் தேநீரில் பால் சேர்க்கும் முறையானது ஐரோப்பாவிலேயே தோற்றம் பெற்றது. பிரித்தானியாவில் இன்னும் சற்றுக்கூடுதலாக மேற்கிந்திய தீவுகளில் இருந்து பெறப்பட்ட கரும்புச்சக்கரையும் சேர்க்கப்பட்டது. தேயிலையின் தாயகமாக சீனா இருந்தாலுமே கூட, இன்று நம்மில் பலர் தேநீர் அருந்தும் முறை ஐரோப்பாவுக்கு உரியதே. 1700களில் கோஃபியை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக தேயிலை நுகரப்பட்டது. தேநீருக்கு உருவான இந்த அதீதகேள்வியின் விளைவாக ஐரோப்பிய கடல் வணிகத்தில் பெரும் போட்டி சூழ்நிலை உருவானது. உலகின் மிகவேகமான கப்பல் வகையான க்ளிப்பர் கப்பல்கள் உருவாக இந்த தேயிலை வணிகமே காரணம் ஆகியது. சீனத்தில் இருந்து எவர் விரைவாக தேயிலை கொண்டு வருகின்றனரோ அவர் பெரும் லாபத்தை காணலாகினார். இந்த திடீர் பொருளாதார மாற்றமானது விரைவில் அரசியலாகவும் மாற்றம் கண்டது.



உலகின் மிகவேகமான கப்பல் வகையான க்ளிப்பர் கப்பல்
தேயிலை ஏகாதிபத்திய முறியடிப்பு
1800களின் மத்தியகாலம் வரையில் உலகத்தில் தேயிலைக்கான பிரதான, ஏகபோக உற்பத்தியாளராக இருந்தது சீனாவே. பொதுவாகவே வெளிநாட்டவர்களை சற்று அவதானத்துடனேயே நெருங்குவது சீனர்களின் வழக்கம். மேலும் தங்களுடைய கலாச்சாரத்தை பேணுவதிலும் அதிக அக்கறை கொண்டவர்கள். எனவே ஐரோப்பியர்களால் சீனாவுடன் வர்த்தகத்தை பேண முடிந்ததே தவிர, தேயிலை உற்பத்தி பற்றிய எந்தவிதமான தகவல்களையும் பெற முடியவில்லை. ஐரோப்பாவிலோ ஏகத்திற்கு தேயிலைக்கான கேள்வி உயர்ந்து வந்தது. வர்த்தகப்போட்டியும் உயர்ந்த வண்ணம் போக, சீனாவுக்கு அதிகளவு வெள்ளிக்காசுகளை செலுத்தியே தேயிலை வாங்கவேண்டிய நிலை ஏற்படவும் பிரித்தானியாவில் வெள்ளிக்கான தட்டுப்பாடு உருவானது.



வங்காளத்து போதைச்செடி ஓபியம்

இக்காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்தது. வெள்ளிக்கான தட்டுப்பாட்டை சமப்படுத்தும் வகையில் பிரித்தானியா சீனத்துடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது. அதன்படி தேயிலைக்கு பதிலாக ஓபியம் என்ற வங்காளத்து போதைச்செடிகள் பரிமாற்றப்பட்டது. ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாக சென்றாலும் சிறிதுகாலத்திலேயே சீனமக்கள் ஓபியத்திற்கு அடிமைகளாயினர். நிலைமை கைமீறிப்போவதற்குள் மக்களை காக்க எண்ணிய சீனாவின் சின் அரசு பிரித்தானியாவின் ஓபியத்தை தடை செய்ததுடன், சீன துறைகளில் நின்ற ஓபியம் படகுகளை அழித்தது. சின் அரசின் இந்த அதிரடியான செயல்பாடு சீனாவுக்கும் பிரிதானியாவுக்கும் இடையே 3 போர்கள் நடைபெற காரணமானது. 1839இல் இருந்து 1842 வரையில் நடந்த இந்த ஓபியம் போர்களின் இறுதியில் பிரித்தானியா வெற்றி பெற்றதுடன், ஹாங்காங் துறைமுகத்தை தன்னுடைய காலனிப்பகுதியாக மாற்றிக்கொண்டது. அதை தொடர்ந்து சீனாவுடன் இருந்த வர்த்தகத்தொடர்புகளில் அதீத கெடுபிடிகளையும் திணித்தது.



சீனாவிற்குள் உளவாளியாக அனுப்பப்பட்ட ராபர்ட் ஃபார்ச்சூன்
பட உதவி : media.npr.org
பிரித்தானியா எத்தனையோ முயற்சிகளை செய்த போதிலும் சீனாவிடம் இருந்து தேயிலை விதைகளையோ, அதை பயிர்செய்யும் கலையையோ அறியமுடியவில்லை. எனினும் 1823இல் ஆங்கிலேயரான மேஜர் ராபர்ட் ப்ருஸ் இந்தியாவின் அஸ்ஸாமில் காட்டுத்தேயிலை பயிர்களை மக்கள் பயன்படுத்துவதாக கண்டறிந்தார். எனினும் அதனை சீனாவின் தேயிலைக்கு பதிலாக பயிரிடுவதற்கு பிரித்தானியா முன்வரவில்லை. எனவே தந்திரோபாயம் ஒன்றை கையாள முடிவெடுத்தது பிரித்தானியா. 1848 இல் தாவரவியல் அறிஞரான ராபர்ட் போர்சூன் (Robert Fortune) என்பவரை சீனாவுக்குள் ரகசிய உளவாளியாக அனுப்பினர். சிலவருட முயற்சிக்கு பின்னர் தரமான தேயிலை விதைகள், கன்றுகள் மற்றும் தேர்ச்சிமிக்க 80 தேயிலை விவசாயிகளுடன் இந்தியாவுக்கு திரும்பினார். இந்தியாவின் டார்ஜிலிங் பகுதியில் முதல் தேயிலை பயிர்ச்செய்கையை பரிசோதித்த பிரித்தானியா வெற்றியடைந்தது. த்தொடர்ந்து நீலகிரி உள்ளிட்ட இந்தியாவின் சிலப்பகுதிகளிலும், இலங்கையின் மலைநாட்டிலும், கென்யாவிலும் பாரிய தேயிலை தோட்டங்கள் உருவாக ஆரம்பித்ததும் சீனாவின் தேயிலை ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது.

இலங்கை : தேயிலை தேசம்.
இலங்கையின் மிக ஆரம்பகால பெருந்தோட்ட பயிர்ச்செய்கையானது கறுவா. இது ஒல்லாந்தர் காலத்திலேயே அதிகளவில் நடை பெற்று வந்தது. எனினும் காலப்போக்கில் இலங்கையின் கட்டுப்பாடு பிரித்தானியாவின் கைவசம் வந்ததும் கறுவாவிற்கு பதிலாக கோப்பி பயிசெய்கை இலங்கையில் வலுப்பெற்றது. எனினும் 1800களின் இறுதியில் இலங்கையில் கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட இலைத்தொற்றால் பெருமளவு கோப்பி பயிர்கள் அழிந்தன. அதை தொடர்ந்து கோப்பிக்கு பதிலீடாக கோக்கோ முதலியவை பயிரிடப்பட்ட போதும் அவைகளும் குறித்த இலைத்தொற்றுக்கு ஆளாகின. 1870இல் கோப்பி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த முதலாளிகள் ஒரு மனதாக ஒரு புதிய பயிசெய்கைக்கு மாறினர். அப்பயிர் தேயிலை.



இலங்கை மலையக தேயிலை பயிர்ச்செய்கை

1824 இல் இருந்தே இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் கல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காட்டு தேயிலை பயிர்கள் பேராதனை பூங்காவில் நடப்பட்டிருந்த போதிலும்,1867லேயே முதலாவது வர்த்தக நோக்க பயிர்செய்கைக்காக தேயிலை பயிரிடப்பட்டது. கண்டி மாவட்டத்தின் லுல்கந்துர பகுதியில் ஜேம்ஸ் டெய்லர் எனும் ஆங்கிலேயரே இதனை செயற்படுத்தினார். 19 ஏக்கர் நிலப்பரப்பில் உருவான இந்த தோட்டத்தில் இருந்து 1873இல் சுமார் 10கிலோகிராம் தேயிலை லண்டன் நகரத்தை அடைந்தது. இலங்கை தேயிலைக்கான மதிப்பு அதிகரிக்கவே 1899 அளவில் இலங்கை முழுவதிலும் சுமார் 400,000 ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உருவாகின.

நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்றைய நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேயிலை உற்பத்தியில் தொடர்பு கொண்டுள்ளனர். இலங்கையின் சிங்கள மக்கள் தேயிலை பயிரிடலில் ஆர்வம் இல்லாமல் இருந்தபடியால், குறைந்த ஊழியத்தில் இந்தியாவில் இருந்து பல தமிழர்கள் இலங்கைக்கு பல்வேறு காலகட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். தேயிலை தோட்ட வரலாற்றுக்கு முன்னமே சுமார் 100,000 தொழிலாளர்கள் இவ்வாறு குடிபெயர்ந்து வந்தனர். இன்றைய நாட்களில்கூட இவர்களின் சந்ததிகளே இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாக நிற்கின்றனர். எனினும் அவர்களுக்கு அரசாங்கம் இன்றளவும் நியாயமான ஊதியத்திற்காக அவர்களை போராடவிடுவது, இந்நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் நாம் அனைவரும் வெட்க வேண்டிய விடயம்.

இலங்கையின் தேயிலை உற்பத்தியானது உலகளவில் நல்ல  வரவேற்பை பெற்றிருப்பதால் நாட்டின் மொத்த தேசிய வருமானத்திற்கு கணிசமான அளவில் பங்களிப்பு செய்கிறது. இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகளாக இருப்பவை வடக்கு ஆசிய நாடுகளும், மேற்கு ஆசிய நாடுகளுமே. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 58% இந்த பகுதிகளுக்கே செல்கின்றன.

தேநீர்
உலகில் பல்வேறு மக்கள் தொகுதிகளால் அருந்தப்படும் இந்த தேநீர் இடத்திற்கு இடம் வேறுபட்ட செய்முறைகளில் பரிமாறப்படுகிறது. நேபாளத்தில் உப்பும், யாக் மாட்டின் பாலுடனும் பரிமாறப்படும் அதே நேரத்தில், இந்தியாவில் இஞ்சி, ஏலக்காய் மற்றும் கறுவா போன்ற வாசனை திரவியங்களுடன் தேநீர் தயாரிக்கப்படுகிறது.


சூடாக பரிமாறப்படும் சுவையான தேநீர்

இத்தனை ஆர்வத்துடன் மக்கள் தேநீரை அருந்துவத்தில் நல்ல பயன்களும் இருக்கத்தான் செய்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு 2 தொடக்கம் 3 கோப்பை தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு மனஅழுத்தம், பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு தேநீர் அருந்தாதவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. எனவே அடுத்த முறை ஒரு கோப்பை தேநீரை அருந்தும் போது முகத்தில் ஒரு புன்னகையை படரவிடுங்கள். ஏனெனில் தேநீர் நல்லது.
Thanks roar.media.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 11 டிசம்பர், 2019

அற்புதமான சிற்பம், திருக்குறுங்குடி கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது


இந்த அற்புதமான சிற்பம், திருக்குறுங்குடி கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இதில் கருடன், ஒரு கையில் ஒரு ஆமையையும், மற்றொரு கையில் ஒரு யானையையும் பிடித்துக்கொண்டு இருக்கிறது. அலகில் முறிந்து விழும் மறக்கிளையை தாங்கிப் பிடிக்கின்றது. அந்தக் கிளையில் சில கிளையில் சில ரிஷிகள் தலை கீழாக தொங்கியபடி தவம் செய்கிறார்கள். இதன் விளக்கம்.

அமிர்த கலசத்தைத் தேடிப்போகும் கருடன் தன் தந்தை கஷ்யபரைச் சந்திக்கிறான். தனக்குப் பணிகள் நிறைய இருப்பதால், சத்தான உணவு வேண்டும் என்று தந்தையிடம் கேட்கிறான். கஷ்யபர் அருகில் உள்ள ஏரியைக் காண்பித்து, அங்கு ஒரு யானையும் ஆமையும் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாகவும், அந்த இரண்டையும் பிடித்துத் தின்றுகொள்ளலாம் என்று காண்பிக்கிறார்.

யார் இந்த ஆமையும் யானையும்? விபாவசு, சுப்ரீதிகா என்று இருவர் இருந்தனர். இளையவன் சுப்ரீதிகா தமையன் விபாவசுவிடம் சொத்துகளைப் பிரித்துத் தருமாறு சண்டை போட்டுக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சொத்துப் பிரிவினை நடந்தாலும், அதன் பிறகும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். விபாவசு தன் தம்பியை யானையாகப் பிறக்குமாறு சபிக்கிறான். சுப்ரீதிகா, தன் அண்ணனை ஆமையாகப் பிறக்குமாறு சபிக்கிறான்.

யானையாகவும் ஆமையாகவும் ஆனபின்னும் இருவரும் கஷ்யபர் காட்டிய ஏரியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்

அந்த இருவரையும் தின்றபின் அமிர்த கலசத்தை எடுக்கச் செல் என்று சொல்கிறார் கஷ்யபர்.

கருடன் பாய்ந்து சென்று ஒரு கையால் யானையின் தும்பிக்கையையும் மற்றொரு கையான் ஆமையின் கழுத்தையும் பிடிக்கிறான். பிறகு சாவகாசமாக இரண்டையும் தின்ன ஓர் இடத்தைத் தேடுகிறான். இப்படியே பறந்து பறந்து சென்று கடைசியில் ஒரு ஆலமரத்தில் ஏறி அமர்கிறான் கருடன்.

ஆனால் கருடனின் கனம் தாங்காமல் மரக்கிளை முறிந்து கீழே விழப்போனது. அந்த மரக்கிளைகளில் வால்கில்ய ரிஷிகள் தலைகீழாகத் தொங்கி தவம் செய்துவந்தனர். வால்கில்யர்கள் பிக்மி வகை ரிஷிகள். மிகச் சிறிய பரிமாணம் உடையவர்கள். சொல்லப்போனால் கருடன் பிறப்புகே வால்கில்யர்கள்தான் காரணம். அந்த ரிஷிகள் கீழே விழுந்துவிடக்கூடாதே என்று கருடன் பாய்ந்து அந்தக் கிளையை தன் அலகால் கவ்விக்கொள்கிறான்.

அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.
(ஆதாரம் : கருட புராணம்)

வியாழன், 5 டிசம்பர், 2019

சித்திரையும் பூட்டியநல்லேரும்


#சித்திரையும்_பூட்டியநல்லேரும்

சித்திரை 1-ம் தேதி  தமிழ் வருடபிறப்பு என்று நினைவில் இருப்பதை விட நல்லேரு பூட்டுற நாளா தான் எனக்கு தெரியும்.

விடியற் காலையிலேயே ஏர் கலப்பை,  மாடு ஓட்டுற குச்சி, விதைகள் எல்லாம் கலந்த கலவை கொண்ட கூடை,  கொஞ்சம் மாட்டு எரு, ஒரு வாளி நீராறம் எல்லாத்தையும் திண்ணையில் வச்சு,  வெல்லம் ஏலக்காய் போட்ட பச்சரிசியை வாழை இலையில் படைத்து அதோட அவுலு, வாழைப்பழம் வைத்து சாமி கும்பிட்டுட்டு அப்பா ஏர்கலப்பையை  எடுத்துக்க, அண்ணன் வண்டிமாட்டை புடிச்சுகிட்டு முன்னாடி போக, தம்பி வம்பட்டியையும் எரு இருக்குற கூடையையும் எடுத்துக்கிட்டு அவர்களை தொடர்ந்து போவான்.

"ஏய்…. ஆயி அந்த விதைக் கூடையை எடுத்துக்கிட்டு  எல்லாருக்கும் முன்னாடி போ", என அப்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் விதை கூடையோட அப்பாவுக்கு முன்னாடி போய் நிப்பேன். எல்லாருக்கும் வழிகாட்டியா விதையை தூக்கிட்டு முன்னாடி போகும்போது ஒரு கெத்து வரும் பாருங்க…அது தனி உணர்வு!

குடும்ப தலைவியான அம்மா கடைசியா நீராற வாளிய தூக்கிக்கிட்டு வருவாங்க.
 அப்பா, அண்ணன், தம்பி மூணு பேரும் ஏர் ஓட்டிட்டு பிறகு வரப்பு வெட்ட, நான் விதை தெளிப்பேன். அந்த வருட வேளாண்மையில் தொடக்க நாளாக அமையும். கடைசியாக  அம்மா கொடுக்கிற நீராகாரத்தை குடிச்சுட்டு வீடு வந்து சேருவோம்.

 நாங்க சித்திரை முதல் நாள்  கோவிலுக்கு போனதில்லை. வடை பாயசத்தோட சாப்பிட்டதும் இல்லை. நல்லேரு பூட்டிட்டு வந்த பிறகு மாரியம்மன் கோவிலுக்கு போய் சேவல் அறுத்து, பொங்கல் வச்சுட்டு வந்து கறிச்சோறு சாப்பிடுவோம்.

 இது எங்க வீட்டு பழக்கம் மட்டுமல்ல,  எங்கள் காவிரி டெல்டா பகுதி கிராமங்களின் வழக்கம். தஞ்சைப்பகுதி கிராமங்களின் வாழ்வியலான வேளாண்மையோடு தொடர்புடைய சித்திரை முதல் நாளை, தமிழ் பெயரே இல்லாத ஒரு பெயரை வெச்சு தமிழ் வருடப்பிறப்புனு சொல்லி, இராத்திரி 12 மணிக்கே கோவில்ல மணி அடிச்சு காசு பாக்குறது ஒரு பக்கம். தமிழ் வருடப்பிறப்பு ராசிபலன் சொல்றேன்னு வசூலிக்கும் கூட்டம் மறுபக்கம்.

 இதுல கொடுமை என்னன்னா..? இதுதான் தமிழ் பண்பாடு என மக்களிடம் விளம்பரம் பன்றாய்ங்க பாருங்க அதுதான்.
  தலைமுறை தலைமுறையா நாங்க பூட்டுற நல்லேரும், மாரியம்மன் கோவிலில் வைக்கிற பொங்கலும், அறுக்குற சேவலும்  தமிழர்களின் பண்பாடு இல்லையா..?

 தஞ்சை டெல்டா பகுதியில் சித்திரை முதலுக்கு பூட்டுற நல்லேரு தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அந்த வருட உணவுத் தேவைக்கான தொடக்க நாள்.

 நம் வாழ்வியலோடு தொடர்புடையது நமது பண்பாடு என்பதை நாம் உணர வேண்டும்!

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

திருவாவூர் மாவட்டத்தில் சிறப்புகள் பெற்ற ஊர்கள்


திருவாவூர் மாவட்டத்தில் சிறப்புகள் பெற்ற ஊர்கள் :

கூத்தாநல்லு}ர்:

சின்ன சிங்கப்பூர் என்ற பெயரைப் பெற்றது இவ்வூர். கிராமங்களுக்கு நடுவில் மாடமாளிகைகள் சூழ நகர் அமைந்துள்ளது. இவ்வூர் முழுவதும் முஸ்லீம்கள் நிறைந்து வாழ்கின்றனர். இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவி வணிகம், வேலைவாய்ப்பு பெற்று இந்நகரை செல்வச் செழிப்புமிக்கதாக மாற்றியுள்ளனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் முன்பு யாராவது வீடு கட்டவேண்டும் என்றால் கூத்தாநல்லு}ரை ஒருமுறை சுற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு பல மாளிகைகள் நிறைந்த ஊர். இன்றும்கூட ஐசா பேலஸை பார்க்கலாம். சாரணபாஸ்கரதாஸ் என்கிற பெயரில் அரபு இலக்கியங்கள் மொழிபெயர்த்த பெரியவரும் இவ்வூர்காரர்தான். இவ்வூரையொட்டிய அத்திக்கடை, மரக்கடை முதலிய இடங்களிலும் முஸ்லீம்கள் நிறையபேர் வாழ்கின்றனர்.

வடபாதிமங்கலம்:

ஆரூரான் சர்க்கரை ஆலையால் இவ்வூர் புகழ்பெற்றது. இந்த ஆலை இருப்பதால் இவ்வூர் அருகிலுள்ள பல கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டு இங்கு அனுப்பப்படுகிறது. ஒன்றுபட்ட தஞ்சைமாவட்டத்தில் ஏற்பட்ட முதல் ஆலைகளில் இதுவும் ஒன்று. இதன் உரிமையாளரான தியாகராஜ முதலியார் இம்மாவட்ட சிறப்பு பிரமுகராவார்.

நீடாமங்கலம்:

மாவட்டத்தில் அதிக நெல்விளைச்சல் உள்ள பகுதிகளில் இவ்வூர் முக்கியமானது. இங்கிருந்து நெல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1761இல் கட்டிய யமுனா பாய் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது. புகழ்பெற்ற தவில் வித்வான், கலியுக நந்தி மீனாட்சிசுந்தரம் இவ்வூர்காரரே ஆவார்.

மகாதேவபட்டினம்:

இவ்வூர் மன்னார் குடியிலிருந்து 10கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு ஐதருக்கும் பிரிட்டீ\; தளபதி பிரெய்த்வெயிட்டுக்கும் 1781இல் போர் நடைபெற்றது. கோட்டையில் சிதைந்த பகுதிகள் காணப்படுகிறது. மா, பலாவுக்கு இவ்வூர் புகழ்பெற்றது.

திருத்தருப்பூண்டி:

இவ்வூர் இவ்வட்டத்தில் தலைநகருமாகும். இன்று திருத்துறைப்பூண்டி என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் இங்கு துறைமுகம் இருந்ததாகக் கருதப்படுகிறது. 1952லும், 1955லும் உருவான புயல்களால் கடல் நீர் இவ்வட்டத்துக்குள் புகுந்து பெருஞ்சேதத்தை உண்டாக்கியது. திருத்துறைப்பூண்டி என்பது வில்வவனத்தை குறிக்கும் என்பர். இவ்வூர் கோயிலில் பஞ்சமுக வாத்யம் இருக்கிறது. திருவாரூருக்குப் பிறகு இங்கு மட்டுமே இந்த இசைக் கருவியைக் காணலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரான மணலி தான் புகழ்பெற்ற வள்ளலான மணலி ராமகிரு\;ண முதலியாரின் பரம்பரை ஊராகும். புகழ்பெற்ற பொதுவுடைமைமிக்க தலைவரான மணலி கந்தசாமி இவ்வூரைச் சார்ந்தவரே ஆவார். இவ்வூர் இப்பகுதியில் முக்கியமான வணிகத்தலமாகும்.

மாவூர்:

திருநாட்டியத்தான்கூடிக்கு அருகில் உள்ளது. கல்கத்தாவிலுள்ள காளி கோயிலைப் போன்ற ஒரு கோயில் இங்கு இவ்வூரினரான சர்.ஆர்.எஸ்.சர்மாவால் கட்டப்பெற்றிருக்கிறது. சர்மா கல்கத்தாவில் பத்திரிகை நடத்தியவர். பிரிட்டி\; வைஸ்ராய்களின் ஆதரவு பெற்றவர். இந்தியாவிலிருந்து இலண்டனுக்கு ஆகாய விமானத்தில் சென்ற முதல் இந்தியர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டத்தில் நெல்விளையும் பகுதிகளில் நன்னிலம் வட்டம் முக்கியமானது. இங்குள்ள மதுவனீசுவரர் கோயிலில், சிவபெருமானின் விக்கிரகத்துக்குப் பின்னால் தேன்கூடு இருக்கிறது. இக்கோயில் மிகப்பெரிய கோயிலாகும். இவ்வூர் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலத்துக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் மாப்பிள்ளைக் குப்பம் என்பதாகும்.

குடவாயில்:

இவ்வூரின் பெயர் இப்போது கொடவாசல் என்று மருவி வழங்கி வருகிறது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் குடவாசல் இருக்கிறது. குடம் என்பது மேற்கைக் குறிக்கிறது. குடவாயில் ஒரு நகரின் மேற்குப் பகுதி. இங்கே குடந்தையைத் தலைநகராகக் கொண்ட அரசர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படுகிறது. தண்குடவாயில் அன்னோள் என்று அகநானுறு கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தலையாலங்காடு:

தலையாலங்கானம் என்பது இவ்வூரேயாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெரும் போர்க்களம் இதுவே. நெடுநெல்வாடையும் மதுரைக் காஞ்சியும் இவ்வூரில் நிகழ்ந்த போர் வெற்றியைப் புகழ்கின்றன. இவ்வூர் குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பெருவேள?ர், திருக்கரவீரம் என்ற பாடல்பெற்றத் தலமும் தலையாலங்காட்டுக்கு அருகே உள்ளன.

திருக்கண்ணபுரம்:

திருவாரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களால் இங்குள்ள பெருமாள்கோயில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வூரிலுள்ள கோயில் 12 ஆம் நு}ற்றாண்டில் சோழர் பாணியில் கட்டப்பட்டது. முனியதரையன் என்ற சிற்றரசன் அக்காலத்தில் ஏற்படுத்திய அறச்செயல்படி இன்றும் முனியதரையன் பொங்கல் இக்கோயிலில் வழங்கப்படுகிறது.

திருக்கண்ணங்குடி:

கீவள?ர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இவ்வைணவத்தலம் இருக்கிறது. பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட கருடாழ்வார் திருவுருவம் இக்கோயிலில் இருக்கிறது. அவ்வுருவம் கைகளை ஒன்றின்மேல் ஒன்றாகக் குறுக்கே மடக்கி வைத்த நிலையில் அமைந்து தோற்றப்பொலிவு பெற்றது. இரவில் மூடாத இலைகளையுடைய புளியமரம், பூத்துக் காய்த்தாலும் விதையை நட்டால் முளைக்காத வகுளமரம், வேறு எங்கும் நல்லநீர் இல்லாவிட்டாலும் ஓர் இடத்தில் மட்டும் நன்னீர் கிடைக்கும் கிணறு ஆகியவை இங்கு உள்ளன. இதையொட்டிய பழமொழி இங்கு நிலவுகிறது. உறங்காப்புளி ஊறாக்கிணறு, காயாவகுளம், தோரா வழக்கு திருக்கண்ணங்குடி என்பதாகும்.

திருக்கொள்ளம்பூதூர்:

இவ்வூர் வெட்டாற்றின் வடகரையிலிருக்கிறது. இவ்வூர் ஞானசம்பந்தருடைய புராணத்துடன் தொடர்புடையது. இவ்விழா ஐப்பசி அமாவாசை நாளில் நடைபெறுகிறது. விபுலானந்தர் எழுதிய யாழ்நு}ல் வெளிவர உதவிய பெ.ராம.ராம. சிதம்பரம் செட்டியார் ஆதரவால் இவ்வூர் கோயிலிலேயேதான் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.

முத்துப்பேட்டை
முத்துப்பெட் என்றும் அழைக்கப்படும் முத்துப்பேட்டை, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு பஞ்சாயத்துக்குட்பட்ட சிறு நகரமாகும். இச்சிறுநகரம், உப்புக் காயல்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் நிறைந்து, மீன்பிடித் தொழிலுக்கு ஏதுவான இடமாக அமைந்துள்ளது. இது காவேரி படுகையின் கிழக்குக் கோடியில், கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு சாதகமான வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது. இவ்வூர், மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 360 கி.மீ. தொலைவில், திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் நடுவில் அமைந்துள்ளது. முத்துப்பேட்டையில் உள்ள ஆலையத்தி காடு என்றழைக்கப்படும் சதுப்பு நிலக் காடு, இந்தியாவிலுள்ள் பெரிய சதுப்பு நிலக் காடுகளுள் ஒன்றாகும். முத்தெடுப்பதற்கு உகந்த இடமாகவும் இது விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து, இவ்வூருக்கு எளிதாக சென்று வரலாம். இவ்வூர் அருகேயுள்ள சம்புவானோடையில் புகழ்பெற்ற இரண்டு தர்க்காக்கள் உள்ளன. இங்கு நிகழும் சந்தனக்கூடு விழாவுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து முஸ்லீம்கள் வருவார்கள்.

திருப்புகலு}ர்:

இவ்வூர் நன்னிலத்திலிருந்து நாகை செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவிலுள்ள சிற்றுர். அப்பருடன் தொடர்புடைய ஊர். பாடல்பெற்ற தலம். இங்குள்ள கோவில் பெரியது. இதைச் சுற்றி மூன்று பக்கமும் அகன்ற அகழிகள் உள்ளன@ ஊருக்குத் தென்பக்கத்திலுள்ள முடிகொண்டான் ஆற்றிலிருந்து பாய்காலும் வடிகாலும் இருப்பதால் அகழி எப்போதும் தௌpந்த நீர் உடையதாக இருக்கிறது. இங்கு 67 பழமையான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நெற்குன்றவாணர் என்ற புலவர் பாடியுள்ள திருப்புகலு}ர் அந்தாதி இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.

தீபங்குடி:

இவ்வூர், நன்னிலத்திற்குத் தென்மேற்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது - சமணர் கோயிலுள்ள இடம். இக்கோயில் 16 ஆம் நு}ற்றாண்டில் கட்டப்பெற்றதென்று கூறுகின்றனர். பழங்கோயில் ஆற்றால் அழிக்கப்பட்டதாம். இங்கு சமணர்கள் வாழ்கின்றனர். கலிங்கத்துப்பரணி பாடிய கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டார் பிறந்த ஊர் இதுவே ஆகும்.

வலங்கைமான்:

கும்பகோணத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் சிவபெருமானின் வலதுகையில் மான் இருப்பதால், வலங்கைமான் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆங்கிலப் பேச்சாளர் சுiபாவ hழழெசயடிடந ளடைஎநச வரமெ வ.ச.சீனிவாச சாஸ்திரியார் பிறந்ததும் இவ்வூரே.

சுற்றுலாத்தாலங்கள்:

உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் :
திருவாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், 1999-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருவாருரில் இருந்து 65 கி.மீ., தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் உதயமார்தாண்டபுரம் அமைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீரே, உதயமார்தாண்டபுரம் சரணாலயத்திற்கு ஆதாரமாக உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் சரணாலயத்திற்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவைகளின் வருகைக் காலமாகும். கோடையின் துவக்கமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நீர் வரத்தின்றி வறண்டு காணப்படும்.

பறவைகள்:

சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, வக்கா (அ) இராக் கொக்கு போன்ற பறவைகள் அதிகளவில் கூடுகின்றன. நத்தை குத்தி நாரை அதிகளவில் வந்து செல்கின்றன. ஒராண்டில் அதிகபட்சமாக 10,000 பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க ஏற்ற காலமாகும்.

வேளாண்மை:

திருவாரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலே வேளாண்மைதான். கீழத்தஞ்சை மாவட்டமாக உள்ள இப்பகுதிகள் பொன் விளையும் பூமி. மேட்டூர் அணை கட்டிய பிறகு வடவாற்றுக் கால்வாயால் மன்னார்குடி வட்டம் பெரும்பயன் அடைந்திருக்கிறது. நன்னிலம் வட்டத்தையொட்டிய பகுதிகள் மிகுந்த வளம் அடைந்திருக்கின்றனநன்னிலம் வட்டம் நல்ல மழையும், நிலவளமும், ஆற்றுவளமும் ஒருங்கே பெற்றுள்ளது. நன்னிலம் வட்டம் தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக நிலவரி செய்யும் மாவட்டம் ஆகும்.

வெண்ணாற்றுக் கால்வாய் திருத்துறைப்பூண்டி வட்டம் வழியே கடலில் கலக்கிறது. ஆனால் இவ்வட்டத்துக்கு வரும் முன்னரே தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. எனவே இவ்வட்டம் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. இருந்தாலும் திருத்துறைப்பூண்டி வட்டாரங்களில் நன்செய் நிலங்களும், நாச்சிக்குளம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் தென்னந்தோப்புக்களும் உள்ளன.

சர்க்கரை ஆலை:

வடபாதிமங்கலத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றும் நல்ல முறையில் நடந்து வருகிறது. இதற்குத் தேவையான கரும்பை சுற்று வட்டாரங்களில் பயிர்செய்து இங்கு கொண்டுவரப்படுகிறது.

#Thiruvarur
#திருவாரூர்_சிறப்புகள்

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*