வியாழன், 13 பிப்ரவரி, 2020

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….


தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….

 தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….

பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்…………….

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……!

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட்_கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :-

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல்_நடுவே_ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் ‪#‎திருக்குறளும்‬ :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை …அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து………………. என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல்_அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் …….உலகின் தொன்மையான நகரம் :-

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.

வியாழன், 6 பிப்ரவரி, 2020

தொழில்நுட்பம், விஞ்ஞானத்தை ஆச்சரியப்படுத்தும் மகத்தான கலைப் படைப்பு 'தஞ்சை பெரியக் கோவில்'


தொழில்நுட்பம், விஞ்ஞானத்தை ஆச்சரியப்படுத்தும் மகத்தான கலைப் படைப்பு 'தஞ்சை பெரியக் கோவில்'

விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில்.

மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின் பேரழகு அது. அத்தகைய பெருமைக்கு முக்கியக் காரணம் காவிரி உருவாக்கிய வளமை தான். கண்ணை விரிய வைக்கும் காவிரியின் கலைப்பெருக்கத்தில் முதன்மையானதும், மனித உழைப்பின் மகத்தானதுமே தஞ்சை பெரிய கோவில்.

கண் எட்டிய தூரம் வரை மலைகளோ, குன்றுகளோ இல்லாத பெரும் சமவெளியே தஞ்சை. ஆனால் பெரும் கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கான கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது முதல் கேள்வியாக மனதில் எழுகிறது. இரண்டாவது எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதே.

சிறிய சக்கரம் மாட்டிய கைப்பெட்டியை இழுத்து வருவதற்குள் வேர்வை சிந்தும் மனிதர்களைப் பயணத்தின் பொழுது பார்த்திருப்போம். இது எப்படி சாத்தியமானது. கற்பனை செய்யவே மனம் அஞ்சுகிறது.

கற்கள் கொண்டு வந்து சேர்த்ததற்கான ஆய்வுகளைத் தேடினால் சில தரவுகள் கிடைக்கிறது.

திருச்சிக்கு அருகே மாமலை என்றொரு மலை இருந்ததாகவும், அந்த மலையை முற்றிலும் அறுத்து எடுத்து, யானைகள் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மனிதர்கள் நினைத்தால் மாமலையும் கடுகு தான். திருக்கோவிலூர் என்ற ஊருக்கு அருகிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகவும் சில ஆய்வுகள் சொல்கிறது.

கோவிலுக்குள் சென்றவுடன் உடல் சிலிர்க்கிறது. படைப்பின் பிரமாண்டத்தில். பொன் நகைகளில் செய்வதைப் போன்று கல்லில் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளை செதுக்கி வடித்திருக்கிறார்கள்.

உலகில் எத்தனையோ ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் தஞ்சை பெரிய கோவில் குறித்த ஆய்வுகளே அதிகமாக இருக்கிறது. அயல் நாட்டவர்களுக்கு தஞ்சை பெரிய கோவில் மாபெரும் வியப்பாகத்தான் அமைந்து போனது. இன்றைய இந்திய நிலப்பரப்பில் அன்று எழுந்த கட்டிடங்கள் பல.

கஜூராஹோ, புவனேஸ்வரத்தின் லிங்கராஜ் ஆகியவையும் தஞ்சை பெரிய கோவிலின் 11 ம் நூற்றாண்டைச் சார்ந்தது தான். ஆனால் அன்று எவ்வளவு கட்டிடங்கள் உருவானாலும் ஆலயங்களின் தலைவனாக தஞ்சை பெரிய கோவிலே பேசப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது மூன்றாவது கேள்வி?

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் கி.பி 985 முதல் கி.பி.1014 வரையிலானது. தஞ்சை பெரிய கோவில் கி.பி. 1003 ல் தொடங்கி கி.பி 1010 ம் ஆண்டில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. ஆலயத்தை உற்று நோக்கினால் ஏழு ஆண்டுகளில் கட்டியிருக்க முடியுமா என்று நான்காவது கேள்வி வந்து விழுகிறது. ஆனால் அதுவே உண்மையாகவும் இருக்கிறது.

மாபெரும் மனித உழைப்பும், கலைஞர்களின் சிந்தனை ஆற்றலும் இணைந்து இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இந்தக் கோவில் கட்டுவதற்கு எது காரணமாக இருந்தது என்ற ஐந்தாவது கேள்விக்கு, போர்களில் கிடைத்த வெற்றிகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கவே இராஜராஜன் ஆலயம் எழுப்பியதாக பதில் கிடைக்கிறது.

இக்கோவில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12.

சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18. கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216.சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247.

பக்தி இயக்க பரவலாக்கத்தில் மொழிக்கான முக்கியத்துவத்தை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் உள்ள ஆலயங்களிலேயே தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியே இரண்டாவது பெரிய நந்தி. முதலாவது பெரிய நந்தி எது என்பது ஆறாவது கேள்வி.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள லேபாக்சி பாபனேஸ்வரர் ஆலயத்திலுள்ள நந்தியே இந்திய நிலப்பரப்பில் உள்ள கோவில்களில் முதலாவது பெரிய நந்தி. இதன் உயரம் 15 அடி. நீளம் 27 அடி. தஞ்சை பெரிய கோவில் நந்தியின் உயரம் 12 அடி. நீளம் 20 அடி. தஞ்சை நந்தியின் வேலைப்பாடும், கலை அழகும் தனித்துவமானது. இந்த நந்தி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது ஏழாவது கேள்வி.

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தி இது. தஞ்சை கோவில் கட்டப்பட்டபோது வைக்கப்பட்ட நந்தி சிறு சேதாரம் அடைந்ததால் நாயக்கர் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நந்தியே இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எட்டாவதாக ஒரு கேள்வி எழுகிறது. கோவில் கோபுரத்தின் அடித்தளம் பற்றிய கேள்வி. இத்தகைய பிரமாண்ட கோவில் கோபுரத்தின் ஆழம் 10 அடிகள் மட்டும் தான். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் என்றே இதை பலரும் அழைக்கிறார்கள். ஆனால் இது கோபுரம் அல்ல. விமானம் என்றும், கோவிலின் முகப்பில் அமைவதே கோபுரம் என்றும் கூறுகிறார்கள் கட்டிடக்கலை வல்லுநர்கள்.

இந்தக் கோவில் எதை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது என்ற ஒன்பதாவது கேள்விக்கான விடை மயன்.

தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை என மயன் புகழப்படுகிறான். மயன் கால பிரமிடுகளின் முன் மாதிரியே தஞ்சை பெரிய கோவில் என்கிறார் சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை தமிழகத்தின் கலைப் பொக்கிசங்களை உருவாக்கித் தந்த சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பிறந்த சிற்பி கணபதி ஸ்தபதி. கட்டிடக்கலையின் தாயகம் தமிழகம் தான் என்கிறது அவரது அனுபவ ஞானம்.

கருங்கற்களால் இரண்டு சுவர்கள் சுற்றி அமைக்கப்பட்டு கருவறையில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உள் சுவரின் அகலம் 11 அடி. வெளிச்சுவரின் அகலம் 13 அடி. இந்த இரண்டு சுவர்களுக்கிடையேயான தூரம் 6 அடி. இந்தச் சுவர்களில் சோழர்களின் ஓவியங்கள் வியக்கத்தக்க வகையில் வரையப்பட்டுள்ளன. இந்த இரண்டு சுவர்களுக்குமான ஆற்றலை அறிந்தால் அதிர்ந்து தான் போக வேண்டியுள்ளது. 216 அடி உயரம் கொண்ட கருங்கற்களால் இழைக்கப்பட்ட விமானத்தின் ஒட்டு மொத்தச் சுமையையும் இந்த இரண்டு சுவர்களுமே தாங்கி நிற்கிறது.

கருவறை இருள் சூழ்ந்த இடம். உள்ளே எப்போதும் வெளிச்சம் பரவி நிற்க வேண்டும். ஏனெனில் லிங்கம் அங்கே இருக்கிறது. மனிதர்கள் இல்லாத போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விளக்கு ஒன்று அமைக்கப்பட்டது.

இராஜராஜனின் சகோதரி குந்தவை ஏற்றிய விளக்கு அது. அது நந்தா விளக்கு என்கிறார்கள். நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாக திரியை தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.

விமானத்தை பார்த்தால் பத்தாவது கேள்வி மட்டுமல்ல.பல கேள்விகள் எழுகிறது. அதற்கான பதில்கள் அனைத்தும் காவிரியின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் உழைப்பின் மேன்மையை உலகுக்கு பறைசாற்றும் உன்னதப் படைப்பல்லவா அது?

கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுதியில் நூல்வைத்துப் பிடித்து, கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றால் அது கோபுரத்தின் துல்லியமான மையத்தில் இருக்கும். மரம், இரும்பு,காரை போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில்.

இவை எல்லாவற்றையும் கடந்து கோபுர விமானத்தின் உட்புறம், ஒரு டம்ளரைக் கவிழ்த்து வைத்திருப்பது போன்ற உள்கூடாகக் காட்சியளிக்கும். கற்களை ஒன்றோடு இணைத்து, நுட்பமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோவில்.விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

உலகின் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழகத்தின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. கோயில் கட்டிடக் கலைஞரும், ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் இதையொட்டி கூறிய கருத்து முக்கியமானது.

"பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி, அதில் பரு மணலை நிறைத்து, அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம்" என்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்.

பெரியகோவில் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்தக் கதைகளின் உள்நோக்கம் என்னவென்று கூர்ந்து கவனித்தால் மூன்று விசயங்கள் வெளிப்படுகிறது.

1. அதன் பெருமையைப் புகழ்வதாக நினைத்து அறியாமல் பேசுவது.

2. பழமை குறித்த கதைகளை விஞ்ஞானம் மறுக்கும் போது, மக்கள் உண்மையை அறியவிடாமல் மூடத்தனங்களை ஊதிப் பெருக்குவது.

3. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விஞ்ஞான அறிவை இருட்டடிப்பு செய்வதன் மூலம் ஆதிக்கச் சிந்தனையாளர்களால் மூடத்தனங்களை பரப்புவதில் சுயநலம் அடங்கியுள்ளது.

மக்களிடையே பரப்பப்பட்டுள்ள கருத்துகள் சிலவற்றையும், அதன் உண்மைத் தன்மையையும் இங்கு பார்க்கலாம்.

1.`கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது’

2.விமானத்தின் உயரத்தில் இருக்கும் கல் 80 டன் கொண்ட ஒற்றைக் கல்.

3.கோவிலில் உள்ள நந்தி வளர்கிறது.

4. இரவு நேரத்தில் நந்தி எழுந்து மேய்வதற்குச் செல்கிறது.

5.நந்தி மேயச் செல்லாமல் இருப்பதற்காக முதுகில் கடப்பாரை கொண்டு ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்.

6.சாரம் கட்டி கல்லை மேலே கொண்டு சென்றார்கள். இந்தக் கருத்துகளை கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன் திட்டவட்டமாக மறுக்கிறார்.

`காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும். உயரே இருப்பது 80 டன் உள்ள ஒரே கல் அல்ல. பல கற்களை ஒன்றாக ஒட்டி வைத்திருக்கும் நுட்பமான வேலைப்பாடே. ஆரஞ்சு பழம் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருப்பதைப் போன்ற நுட்பமே அது. நந்தி வளரவும் இல்லை.மேய்வதும் இல்லை. ஆணி அடித்து அமர வைக்கவும் இல்லை.

ஐந்து முதல் ஆறு டன் எடையுள்ள ஒவ்வொரு கல்லையும் எப்படி உயரே கொண்டு சென்றார்கள்? மண்சாரம் அமைத்து என்கிறார்

சிற்பி கணபதி ஸ்தபதி. மண் சாரம் என்றால் என்ன? பெரிய கோவிலின் உயரம் எவ்வளவு உயர்கிறதோ அந்த அளவுக்கு சுற்றி மண்ணை சாய்வாக கொட்டிவிடுவார்கள். இதன் மலை போன்ற சாய்ந்த பகுதிகளில் கற்பாறைகளைக் கொண்டு சென்றிருப்பார்கள் என்கிறார்.

மழைநீர் தேங்கி ஆலயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரண்டு வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.வடக்கு பக்கத்தில் ஒன்றும், தெற்குப் பக்கத்தில் ஒன்றுமாக நீர் வெளியேறும் பாதைகள் உள்ளது.முதலில் அழுக்காக வரும் நீர் தெற்கு பக்கம் மூலமாக நந்தவனத்திற்கும், இரண்டாவது வரும் நல்லநீர் வடக்குப் பக்கமாக சிவகங்கை குளத்திற்கும் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. முதல் மழைநீர் சேகரிப்புத்திட்டம் இதுதான்.

பெரியகோயிலில் இதுபோன்ற அற்புதங்கள் நிறைய இருக்கின்றன. பல விஷயங்கள் மக்களிடையே போய் சேராததால்தான் தவறான தகவல்களை நம்பி வருகிறார்கள். கோயிலைப் பற்றிய ஆய்வுச் செய்திகள், அதிகம் மக்களிடையே பகிரப்பட வேண்டும்.

கோவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பம் போற்றிப் புகழப்பட வேண்டும்.

புதன், 5 பிப்ரவரி, 2020

ஆயிரம் ஆண்டு அதிசயம்... தஞ்சைப் பெரியகோயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!


ஆயிரம் ஆண்டு அதிசயம்... தஞ்சைப் பெரியகோயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றதுதான். அதனால்தான், இதை *`ஆர்க்கிடெக் மார்வெல்’* என்கிறார்கள் வல்லுநர்கள்.

தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது. சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயிலுக்கு நாளை குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது.

தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010ல் ராஜராஜனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. பிறகு, தி.மு.க ஆட்சியில் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தஞ்சைப் பெரியகோயிலில் ஓதுவார்களால் தீந்தமிழ்த் தேவாரம் முழங்க, பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, குடமுழுக்கு ஏற்பாடுகளையும் பெரியகோயில் பற்றிய அபூர்வ தகவல்களையும் அறிந்துகொள்வோம்!

கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், `ராஜராஜேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது

கி.பி 1003 - 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குடமுழுக்கின்போது கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கோபுரக் கலசம் ஆகிய 5 இடங்களிலும் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மந்திரம் சொல்லப்படும்; தமிழுக்குத் தகுந்த முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது.

கூம்பைத் தலைகீழாகக் கவிழ்த்துவைத்த அமைப்பில், பெரிய கோயிலின் 216 அடி உயர விமானம் எழுப்பப்பட்டிருக்கிறது. பலகைக் கற்களை ஒன்றன்மீது ஒன்றாக இலகுப் பிணைப்பு (loose joint ) மூலம் அடுக்கப்பட்டிருக்கிறது. பெரியகோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே கற்களால் ஆனவை. எங்குமே சுதைச் சிற்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. விமானத்தின் உச்சியில் உள்ள கலசத்துக்குக் கீழே சிகரம் போன்று இருக்கும் கல், 8 இணைப்புகளால் ஆனது.

இதற்குப் பெயர், பிரம்மாந்திரக் கல். இதன் எடை, சுமார் 40 டன். அதற்குக் கீழே இருக்கும் பலகையின் எடை, சுமார் 40 டன். அந்தப் பலகையில் எட்டு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை, சுமார் 40 டன். இந்த 120 டன் எடைதான் ஒட்டுமொத்த கோயில் கோபுரத்தையும் ஒரே புள்ளியில் அழுத்திப் பிடித்து, புவியீர்ப்பு சக்திமூலம் தாங்கி நிற்கிறது.

கோயில் அமைந்துள்ள இடம், சுக்கான் பாறையாகும். இந்த இடத்தில் குழி தோண்டி மணலை நிரப்பி, அதன்மீது கோயில் எழுப்பியிருக்கிறார்கள். பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட *தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப்* போன்றதுதான். அதனால்தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.

`பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்’ என்று கோயிலில் பொறித்து வைத்திருக்கிறார், ராஜராஜன். இத்துடன், கோயில் கட்டுமானத்தில் யார் யாருக்கு பங்களிப்பு உண்டு என்கிற தகவல்களையும் அப்படியே கல்வெட்டில் பொறிக்கச் செய்து, கோயிலை ஒரு ஆவணக் காப்பகமாக உருவாக்கியுள்ளனர்.

`கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பது நம் முன்னோர்கள் வாக்கு. பெரியகோயிலின் விமானம் முழுவதும் ராஜராஜன் காலத்தில் பொன் தகடுகளால் வேயப்பட்டு பொலிவுடன் காணப்பட்டது. இது பற்றிய தகவல், `ராஜ ராஜேஸ்வரமுடையார் ஸ்ரீ விமாநம் பொன் மேய்வித்தான்... ராஜராஜ’ என்று குறிப்பிடப்படும் கல்வெட்டு, கோயிலில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பிற்காலத்தில் இவை, முகலாயர்களாலும் சுல்தான்களாலும் கொள்ளையடிக்கப்பட்டன.

பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும், சிறப்புகளையும் கொண்ட தஞ்ச

ைப் பெரியகோயில் குடமுழுக்குத் திருவிழாவால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குடமுழுக்கு விழா, நாளை 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை பூஜைகள் 1 - ம் தேதி தொடங்கியது. 110 யாக குண்டங்கள் கொண்டு, யாகசாலை பூஜைக்கான பந்தல் மட்டும் 11,900 சதுர அடிகள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. யாக பூஜையில் 400-க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், பண்டிதர் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் திரள்வதால், பாதுகாப்புப் பணிக்கு என 4,492 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோயில் வளாகம் மற்றும் தஞ்சை நகரப் பகுதிகள் என மொத்தம் 192 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகர்ப் பகுதி முழுவதும் 17 இடங்களில் தற்காலிகக் காவல் உதவி மையங்களும், விழாவுக்கு வருபவர்களின் வசதிக்காக, 55 தகவல் அறிவிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 6 இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, கதவுகளுடன்கூடிய தடுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி என கோயிலுக்கு மட்டுமின்றி கோயிலைச் சுற்றிலும் ஒருவழிப்பாதையில் அனுப்பப்படுவர். தீயணைப்புத்துறை சார்பில் 30 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. மேலும், அதி நவீன தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக, நகரைச் சுற்றியுள்ள புறவழிச்சாலைப் பகுதியில் 21 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் மக்களின் வசதிக்காக 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள புதுப்பட்டினத்தில், தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் இறங்கும் மக்களை அழைத்துவந்து கோயிலுக்கு அருகாமையில் சுமார் ஒரு கி. மீ முன்னதாக இறக்கிவிடுவதற்கு, 200 பள்ளி மற்றும் தனியார்வேன்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கோயில் குடமுழுக்கு விழா பணிக்காக 1,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பழைய தஞ்சாவூர் ... தஞ்சை பெரியகோயில் ... 800 ஆண்டுகளாக புதைந்து கிடந்த உண்மை ...


பழைய தஞ்சாவூர் ... தஞ்சை பெரியகோயில் ... 800 ஆண்டுகளாக புதைந்து கிடந்த உண்மை ...

இதன் பெருமை வாய்ந்த வரலாறு அதன் சுற்றுசுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தும் கூட, உள்ளூர் மக்கள் பெரிய கோவிலை ஆவணப்படுத்த தவறி விட்டார்கள். 1860 க்கு முன்னர் கோயிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையிலேயே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது .. .

1858 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பிறகு, புனித பீட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த, ஆங்கிலேய கிருத்துவ பாதிரியார் மற்றும் தலை சிறந்த தமிழ் அறிஞர் ஆகிய ஜி.யூ.போப், பெரிய கோவிலை ஆவணப்படுத்துமாறு கோரப்பட்டார்.

அதன் விளைவாக தஞ்சை பெரிய கோயில், ஒரு சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று ஆவணப்படுத்திய முதல் நபர் அவர்தான். உள்ளூர் அறிஞர்களிடமிருந்து விசாரித்ததில் பெரிய கோயில் "காஞ்சிபுரத்து காடுவெட்டி சோழர்" என்பவரால் கட்டப்பட்டது என்பதை அறிந்து அவர்கள் சொன்னதை வைத்து வெளியிட்டார்.

பிற்காலத்தில் தான் முழு உண்மை தெரிய வந்தது .... 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோயில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது .

ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் பெரிய கோயிலின் பூர்வீ கத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோயிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார் !!


இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது.

இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது .பெரிய கோயில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.

பெரிய கோயில் கட்டப்பட்ட அதே நேரத்தில் சிவங்கா குளமும் தோண்டப்பட்டது. கட்டிடக் கற்களை கோயிலின் உச்சிக்கு எடுத்து செல்ல வட்ட வளைவை மண் சாரபாதையாக உருவாக்க அதன் மண் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் கூறப்படுகிறது ... கட்டிடக் கற்களை கோயிலின் உச்சிக்கு எடுத்து செல்ல, பெரியகோயிலில் இருந்து ஏறக்குறைய 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரப்பள்ளம் வரை, ஒரு சாய்ந்த மண் இரக்கம்/சாரபாதை அமைக்கப்பட்டு கற்களை மேலே எடுத்து சென்றனர் என்று பரவலாக சொல்வது உண்டு. இரண்டு காரணங்களுக்காக அது நடைமுறைக்கு சரிவராது ; ஒன்று, இந்த சாரப்பள்ளம் கிழக்கில் உள்ளது.. கட்டிட கற்கள் தென்மேற்கில் இருந்து வந்தது; இரண்டு, 200 அடி உயரத்திற்கு எடுத்துச் செல்ல 1:15 விகிதத்துடன் ஒரு இரக்க சாரம் கட்ட, அதிகபட்ச நீளம் சுமார் 3000 அடி மட்டுமே போதுமானது , இதுவும் 1 கிலோமீட்டருக்குள் தான் அடங்கும். எனவே 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரப்பள்ளத்திலிருந்து ஒரு இரக்க சாரம் அமைக்க வேண்டிய சூழ்நிலை அவசியமில்லை.

1000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பெரிய கோயில் பூகம்பங்கள், இராணுவ படையெடுப்புகள், திருட்டு, சூறை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தாங்கி இன்று வரை கம்பீரமாக நிற்பது ஒரு மாபெரும் அதிசயம்.

800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை .... 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. ... 1335ல் : தில்லி சுல்தான் படையெடுப்பு .. 1350 முதல் 1532வரை தேவ ராயாவின் விஜயநகரின் ஆதிக்கம் ... 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி .. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.... 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி

1772 ஆம் ஆண்டில், கோயிலின் நுழைவு கூடம் பிரெஞ்சு படைவீரர்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. (2005ல், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கேரளந்தகன் கோபுரத்தில் பூட்டப்பட்ட அறையில் அவர்கள் பயன்படுத்திய பீரங்கி குண்டுகளை கண்டெடுத்தனர்). 1773 முதல் 1779 வரை ஆங்கிலேய படை சிறிய கோட்டையின் வடக்கு பகுதியை தங்குமிடமாக பயன்படுத்தினர் (தற்போதைய பதிவு அலுவலகம் / சிவ கங்கா பூங்கா இருக்கும் இடம் ).

பெரிய கோயிலைச் சுற்றியுள்ள சிறிய கோட்டை தஞ்சையின் பெரிய கோட்டையை விட பழமையானது. சிறிய கோட்டை 1535 ஆம் ஆண்டு வாக்கில், நாயக்கர்களால் கட்டப்பட்டது. சீனிவாசபுரத்திற்கு அருகே இடிந்து விழுந்து கிடந்த, அழிக்கப்பட்ட சோழர் அரண்மனையின் கற்களை கொண்டு, கோட்டை கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரிய கோயில், பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். அதன் பிறகு தான் கரும் பாசி படிந்த, கோயிலின் முகப்பு கற்கள் "சாண்ட் பிளாஸ்டிங்" முறையில் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் இளஞ்சிவப்பு கிரானைட் கல் மேலும் நன்றாக தெரிய வந்தது. இதன் காரணமாகத்தான் பெரிய கோயில் தோற்றம் பிரகாசமாக மாறியது.

1995 உலக தமிழ் மாநாட்டின் போது, திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் பெரிய கோயிலின் வெளிப்புற ஒளி விளக்குகளை வடிவமைத்தார்.அது மேலும் பிரகாசம் ஊட்டியது.
கடந்த 15 வருடங்களாக 5 வருடத்திற்கு ஒரு முறை ரசாயன முறையில் கோபுர சிற்பங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன

பெரிய கோயில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் ககிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. .. தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக்கு மிக அருகாமையில் .உள்ள இந்த இடத்தை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்திருக்கிறேன். தஞ்சைக்கு அருகில் கட்டிட கற்கள் கிடைக்கும், மிக அருகாமையான இடம் இதுவாகும்.

தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

கோயிலின் மேல் உள்ள உருண்டை வடிவம் கொண்ட கலசம் போல இருக்கும் சிகரம் (கல் குவிமாடம்/ Dome ) ஒரே கல்லில் வடிவமைத்தது அல்ல .. ஆறு பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட சிகரம் என்பதினை நேரில் பார்த்த ஆய்வாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெரிய கோயிலின் முன் (கிழக்கு) பகுதியில் "அழகியா குளம்" என்ற பெரிய நீர்நிலை இருந்தது, பெரிய கோயில் கட்டப்பட்ட நேரத்தில் அது இருந்தது. நாயக்க மன்னர்களால், கோட்டை மற்றும் அகழி உருவாக்கப்பட்டதன் மூலம் இதற்ககு வந்து கொண்டிருந்த நீர் ஆதாரம் தடைசெய்யப்பட்டது. பிற்காலத்தில் இந்த நீர்நிலை சுருங்கி காணாமல் போனது.

மராத்தியா ஆட்சியாளர்களின் பெரும் முயற்சியால், 800 வருட இடைவெளிக்குப் பிறகு, 1729 ஆம் ஆண்டில் தான் ராஜா செர்போஜி I அவர்களால் “கும்பாபிசேகம்” நிகழ்த்தப்பட்டது; பிறகு 1803ல் ராஜா செர்ஃபோஜி II காலத்தில் இந்த நிகழ்வு தொடர்ந்தது ; சுதந்திரத்திற்குப் பிறகு; 1980 மற்றும் மீண்டும் 1997ல் “கும்பாபிசேகம்” நிகழ்த்தப்பட்டது.

மராத்தா இளவரசர் இன்றும் கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆவார்.

இப்போதய “கும்பாபிசேகம்” பிப்ரவரி 5, 2020 அன்று நிகழ்த்தப்படவுள்ளது.


+++++++++

Old Tanjore ... The Brahadeeswara Temple .. a truth lost in wilderness for over 800 years ...

Prior to 1860 the Big Temple was just another undocumented masterpiece inspite of the fact everything was recorded on the temple walls. This remained in obscurity for nearly 800 years. Local people did not bother to know the origin of the temple.
After the British took over the administration of Tanjore in 1858, the great Tamil scholar G.U.Pope, who was a English missionary teaching at that time in St. Peter’s school was requested to document this great temple. He was the first one to document that it was built by a Chola king. On local enquiry from the learned scholars he learnt that it was built by “Kaaduvetti Chola from Conjevaram”.

It was not until 1887 when actual truth was discovered by a German archaeologist E. J. Hultzsch, who was deputed by the British Government to photograph and document all the temples in and around Thanjavur. These photographs are well preserved in the British Library. It should be noted that the British officially introduced photography in 1835 for documentation purpose.

Hultzsch was fond of photography and served as a District Collector earlier. He was the one who re-discovered, after 800 years, the entire episode sculpted on the base of the Big Temple and published that this great Temple Brahadeeswara was built by Raja Raja Chola in 1010 A.D.!!

The Big Temple at time was seat of great learning ... propagating scriptures, teaching dance, music and recitals and also served as kind of hospital propagating herbal medicine and cures according to the noted scholar Dr.T.N.Ramachandran.

The Sivganga Tank was dug about the same time when the Big Temple was built. Its earth should have been used to make the circular ramp for towing the building stones. The other theory that it had a reclining ramp towards Saarappallam about 7 kilometres away does not seem practical for two reasons. One, it lies on the east and the source of stone materials was from the south-west; Two, to construct a ramp with 1:15 ratio to take it to a height of 200 feet, the maximum ramp length need to be only about 3000 feet which is well within 1 Kilometre. Hence there is absolutely no need to construct a ramp from Saarapallam which 7 kilometres away.

Over the 1000 years of existence, this great Temple has withstood earth quakes, army invasions and vandalism. And still it withstood the test of times..

Wars and invasions took place over the years bringing in so many rulers .. In 1279, the Pandyas conquered Thanjavur from the Cholas, who had ruled Thanjavur for about 450 years and burnt down and destroyed the Chola Palace (that was located in the vicinity of Srinivasapuram and Melaveli Panchayat) and ruled Thanjavur from 1279 to 1311. Then the Tanjore kingdom was invaded by the forces of Malik Kafur in 1312. Then the Delhi Sultanate extended its authority to Tanjore from 1335 to 1378. Later it came to be ruled by Vijayanagar Empire. In 1532, Sevappa Nayak, the Vijayanagar viceroy of Arcot, established himself as an independent monarch) and founded the Thanjavur Nayak kingdom.
In 1674, Thanjavur was successfully conquered by Ekoji I the Maratha and founded the Thanjavur Maratha kingdom which ruled Thanjavur till 1855 for 190 years.
in 1855, The kingdom was eventually absorbed into British India which ruled Tanjore till 1947.

In 1772, the entrance court of the temple was used by the French as a garrison. In May 2005, the Archiological Survey of India found cannon balls used by them in a locked chamber in the Keralandhagan Gopuram. From 1773 to 1779 the English Garrison was stationed on the northern part of the small fort (that is the present registration office/ Sivganga Park vicinity).

The Little Fort or the fort around the Big Temple is older than the Big Fort enclosing four main streets of Tanjore and was constructed around the year 1535 by the Nayaks. There is evidence that the fort was built from the left over stones of the destroyed Chola Palace that was in ruins in the vicinity of Srinivasapuram.

It was however only in the mid 1990s that the moss-bitten, blackened temple was cleaned by sand-blasting pressure guns. The pinkish granite stone became more visible and Big Temple became brighter. These type of pinkish granite was brought from the vicinity south-west of Killukottai . .. very close to Thanjavur District south-west border. I have personally studied this place. This is the closest place where granite is available near Tanjore.

The present Nandi was installed by the Nayak kings. It was carved out of stone brought from Perambalur Pachamalai area.

The stone dome atop the temple is not a single piece of stone as it is believed .. but is made up of several pieces fixed together.

Another interesting factor is that there was a large water body called ALAGIYA KULAM that existed in the front (east) of the Big Temple at the time it was built. This was mostly closed by the creation of the fort and moat by the Nayak Kings as the water source was diverted to the Moat.

During the 1995 World Tamil Conference, veteran film director, K.Balachander designed the external lighting for the towering dome.

After a gap of nealy 800 years, due to the great efforts of the Maratha rulers, “Kumbabisekam” was performed in 1729 by Raja Serfoji I; in 1803 by Raja Serfoji II ; After independence; in 1980 and again in 1997.

The hereditary Maratha Prince is the Trustee of the Temple even today.

The present day “Kumbabisekam” is being performed on 5th February 2020.

(தகவல் / எழுத்தாக்கம் : S.P.அந்தோணிசாமி M.A.,B.L.,, சேர்மன், பரிசுத்தம் பொறியியல் கல்லூரி,, தஞ்சாவூர் ::: Information/Article Compiled & written by: S.P.Anthonisamy, Chairman, Parisutham Institute of Technology & Science, Thanjavur)

திங்கள், 3 பிப்ரவரி, 2020

சிந்துவெளியில் சிவன்


சிந்துவெளியில் சிவன்

தமிழறிந்த சிவனும்
தமிழறியா ருத்திரனும்

தமிழ்க் கடவுளுக்குத்
தமிழா தெரியாது ?

சிந்துவெளி நாகரிகத்தின் தனித்தலைமை , முழுமுதற் கடவுள் சிவனே . அயிலன் என்னும் வேலன் , காடுறைவாளாகிய வனா இல்லி கொற்றவை , காலனாகியக் கடவுள் இருளன் ஆகியோர் பெரிதும் பேசப்பட்டாலும் தலைமைக்கடவுள் சிவனேதான் . சிந்து எழுத்தைப் படித்தால் இந்தியாவின் பண்பாடு , வழிபாட்டு முறைகள் , மெய்யியல் சிந்தனைகள் சிவனை வைத்தே உருப்பெற்றுள்ளதை உணர்கிறோம் . இன்று சிவனை வைத்துப் பிழைப்பு நடத்தும் உடான்ஸ் யோகா குருக்கள் சிவனுக்கே தமிழ் தெரியாது என்று இழித்துப் பேசும் அவல நிலையைக் காண்கிறோம் . தமிழரின் உண்மையான சிவனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமை இப்பொழுது ஏற்பட்டுள்ளது .

ஆரியரின் ரிக் வேதம் தெய்வீகமோ , பண்பாட்டுணர்வோ இல்லாத ஒரு நாடோடிச் சிறுகுழுவின் குலதெய்வ வழிபாட்டுப் பாடல்களே . இந்திரன் என்னும் ஆரியப்படைத் தலைவன் ; சோம பானமும் , இளங்கன்றின் ஈரலையும் வைத்துப் படைத்தால் எந்தப் படுபாவத்தையும் செய்யக்கூடிய குலதெய்வம் . வருணன் , அக்கினி என்னும் நீருக்கும் , நெருப்புக்குமான தேவதைகள் . மருத்துவத்துக்குரிய மருத்யூக்களின் அதிதேவதை எனப்படும் ருத்திரன் . யாகத்தில் சிறு அளவு அவிபாகம் பெரும் விஷ்ணு , தான் படைத்த பெண்ணையே கூடிக் குலவிளக்கம் செய்த பிரம்மன் இவர்களைத் தவிர வேறு பெரிய முழுமுதற் கடவுளர் எவரும் ரிக் வேதத்தில் இல்லை .

ருத்திரன் மருந்து நோய் தீர்க்கும் தேவதையாகவும் மருத்யூக்களின்
தலைவனாகவும் (1-114-6, 2-32-2 , 1-114-6,9 ) சில பாடல்கள் குறிப்பிடுகின்றன . விஷ்ணு தனது காலடிகளால் மூவுலகையும் அளந்து , நிலைபெற வைப்பவன் (1-54-1,1-154- 3 ) என ஒரு சில பாடல்களே பெற்றுள்ளனர் . இவர்களில் ருத்திரனை சிவனோடும் , விஷ்ணுவை இருளனோடும் ( கிருஷ்ணன் ) இணைத்துவிட்ட பிறகு புராணங்களில் கூறப்படும் தவ முக்கண் , உலக இயக்கமென்னும் நடனம் , இறைவிக்குத் தன்னுடம்பில் பாதியை அளித்தவன் போன்ற எவ்வித கருத்தாக்கமும் ரிக்கில் இல்லை . ஏன் , ஆரியர்கள் பாற்கடலை அசுரர்களோடு சேர்ந்து கடைந்து அமிழ்தம் எடுத்தது , உலகம் காக்க சிவன் தோன்றிய நஞ்சினை உண்டதென எதுவுமே இல்லை . விஷ்ணு மூவடியால் உலகளப்பது தவிர மகாபலி மன்னன் கதை விஷ்ணுவுடன் இணைத்துப் பேசப்படவில்லை . ஆகவே ஆரியருக்கு தனித்தலைமை - முழுமுதற் கடவுளென்னும் கருத்தாக்கம் இந்தியா வரும்வரை கிடையாது என்பதே உண்மை .

கிமு 2600-1750 ஆண்டுகளில் நிலவிய சிந்துவெளி நாகரிகம் அழிந்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு , கிமு 1100 அளவில் உருவான ரிக் வேதத்தில் சிந்து மக்களின் சிவன் , இருளனுக்கு ஈடான முழுமுதற் கடவுள் எவருமில்லை என்பதே உண்மை . பின்னர் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்பின்போது இந்திய மக்களின் கடவுளர்களான சிவன் , இருளன் ( கிருஷ்ணன் ) ஆகியோருக்கு இணையான கடவுளர் எவரும் தங்களிடம் இல்லாததால் இருந்த சிறு தெய்வங்களான ருத்திரனையும் , விஷ்ணுவையும் அவர்களுடன் இணைத்து திருப்திப்பட்டுக் கொண்டனர் . ஆனால் கிமு 2600-1500 அளவிலிருந்த முதிர் சிந்து (mature Harappan ) , பிற்கால சிந்து (post Indus) ஆகிய நாகரிகங்களின் காலத்தில் எழுதப்பட்ட சிந்துவெளி - குஜராத்திய முத்திரைக் குறிப்புகள் காட்டும் இறைநிலை என்பது மிகவும் உன்னதமானது . அதிலும் சிவன் - சிவம் குறித்த விளக்கங்கள் ஓர் உயர்நாகரிக மக்களினத்தின் மேன்மையான சிந்தனையின் வெளிப்பாடேயாகும் .

சித்தாந்திகள் கண்டுள்ள பண்பாடு மிக்க மக்களின் இறைநிலைகள் இருவகைப்படும் . ஒன்று மனிதன் தனது பட்டறிவின் அடிப்படையில் சிந்தித்து தன்னை இயக்கும் இறைவன் தன்னைப்போல் மனித வடிவிலேயே இருப்பான் என்று கருதுவது . இரண்டாவது , இறைவன் பேராற்றலாளன் - இவ்வுலகை இயக்கும் அப்பேராற்றலின் வடிவம் மனிதக் கற்பனைக்கும் எட்டாதது ; வடிவம் ,தன்மை , குணாம்சங்கள் ஏதுமற்ற பரம்பொருளாகிய இயங்காற்றல் என்று கருதுவது . இவற்றில் மனிதன் உலகிலேயே தனது வடிவமாகத் தனது இறைநிலையைக் காணும் முதல் நிலையின் உன்னதமான படைப்பு சிவமேயாகும் . பண்பாட்டுணர்வின் - உயர்நாகரிக நிலையின் தாக்கத்தால் தோன்றிய வடிவமாகும் . நாம் முனபே பார்த்தவாறு உலக இயக்கமாகிய நடனம் , தவ ஆற்றலாகிய மூன்றாவது கண் , தன்னுடலின் பாதியைத் தன் மணாளிக்கு அளித்தல் , யோகநிலையில் உயர்ஞானம் பெற்று மிளிர்தல் போன்ற கருத்துருக்கள் சிவமென்னும் மெய்ப்பொருளின் மேன்மையைக் காட்டுவதாகும் . புராணங்கள் காட்டும் சிவன் இவரல்ல . இவர் இம்பன இயையாதவர் ( உலகியலோடு இயையாதவர் ) . இவரே இருடி - இருடிகளின் ( துறவியர் ) தலைவராவார் .யோகநிலையில் வீற்றிருக்கும் ஆதிசிவன் - ஞான வடிவானவர் . இவர் பிச்சாடனர் உருவில் சென்று ரிஷி பத்தினிகளுக்குப் பாலியல் தொல்லை தராத அறநிலையாளர் ; தன்னைப்போல் ஐந்து தலைகள் கொண்டிருந்ததால் தன் மனையாள் குழப்பமடைவாளென்று படைப்புக் கடவுளின் தலையையே கிள்ளி எறிந்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்துக்கு இடங்கொடாத சான்றான்மையாளர் .

அப்படியானால் சிந்துவெளி நாகரிகத்தின் செந்தமிழ்க் கடவுள் எப்படிப்பட்டவர் ? தமிழால் மட்டுமே இவரைத் துதிப்பதால் - வேற்றுமொழிக் கலப்பற்றதால் இவர் சமஸ்கிருதம் - தவறு , வேதமொழி அறியாத தனித்தமிழ் - முழுமுதல் தலைமைக் கடவுள் . இவரது இயல்புகளாகச் சிந்து எழுத்து முத்திரைகள் காட்டுவது -

1 . இவர் சிவண்ணல் , ஆறு சூடிய சிவன்பர் .( 1035, 2651)
2 . இவர் ஆமுகர் அல்லது ஆமுக அண்ணலின் தலைவர் ( 1070,2061)
3. ஈமத்தில் உள்ளவர் , தமக்கென ஈமங்கொள்ளாதவர் (1426)
4. உலக இயக்கமென்னும் விண்ணக நடனம் செய்பவர் (2056,4262).
5. அம்மையொடு பொருந்திய அமயார்த்தனன் ; இறைவி இவரது உடலின் இடப்பக்கம் இடம் பெற்றதால் ஆணானவர் (2169,1626)
6. முகங்கள் ஐந்துடையவர் - ஐம்முகன் . (2442).
7. நாகத்தை உடலில் சூடியவர்(2317)
8. ஐந்தொழிலார் -ஐந்தானவர் , ஐயாற்றின் தலைவர்(4319,4337)
9 . கட ஆ - கடமாவின் ( கடம் + ஆ ) காட்டுப் பசு மூலம் தோன்றியவர் (4113)
10. இருடிகளின் - துறவிகளின் தலைவர் (2621)
11. ஆண்டவராகிய தவம் மூத்த ஈசன் (2420)
12. மிக்க ஞானம் உடைய யோகர் (4096)
13. மேலும் ஒரு கண் - தவமாகிய நெற்றிக்கண் உள்ளவர் (9278, 4340)

இத்தனை இயல்புகளும் சிந்து நாகரிக சிவனுக்கே உரியதாகும் . ரிக் வேதகால ருத்திரனுக்கல்ல . தமிழில் நாம் இறைவன் , கடவுள் என்பதுபோல ஆரியர் தங்கள் கடவுளை தேவர்கள் (Dhevas ) என்றனர் . தேவர்களை வணங்குபவர்கள் தேவர்கள் ( Dhevas ) எனப்பட்டனர் . இது இருளனை வணங்குபவர் இருளர் எனப்பட்டது போன்றது . ஆகவேதான் ஆரியரல்லாதவர்களை தேவரல்லாதவர் அதேவா (Adhevas) எனப்பட்டனர் . தேவர்களை வணங்குபவர்கள் பேசும் பாஷை தேவ பாஷா எனப்பட்டது . கடவுள் பாஷை என்ற பொருளில் அல்ல தேவர்களை வணங்குவோரது பாஷை என்பது இதன் பொருள் . இதைத்தான் பிற்காலத்தில் தேவ பாஷா என்று பெருமைப்படுத்திக் கொண்டனர் . அதனால் தமிழை நீச பாஷை என்றனர் . சமஸ்கிருதம் தேவ பாஷையும் அல்ல , தமழ் நீச பாஷையும் அல்ல . அனைத்தும் மனித பாஷையே .

மேற்காண்பவற்றுள் சிந்துவில் இல்லாதது பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்து அமிழ்தம் எடுத்ததும் , சிவன் அதிலிருந்து தோன்றிய நஞ்சை உண்டதும் புராணக் கதை . ஆரியவியலாளர்கள் இதனை ஆரியரது கருத்தாக்கம் என்பர் . ஆரியரின் ஆதித்தாயகம் மத்திய ஆசியாவில் காஸ்பியன் கடல் பகுதியாகும் . கடல் நடுவே நெடிது நிற்கும் பாறைகள் கொண்டது . அக்கடலில் நெடும்பாறைகள் நிற்பதைக் கண்டதாலும் , பறைகள் நிறைந்திருப்பதால் அலைகள் நிறைந்த நீர்ப்பரப்பு வெண்ணுரையால் பால் போல் தோற்றங் கொண்டிருப்பதாலும் ஆரியர் இக்கருத்துருவைப் பெற்றனர் என்பர் . இவ்வாறு பாலைக் கடைவது இடையர்களான ஆரியரது இயல்பாதலாலும் அவர்களுக்கு இக்கருத்துரு தோன்றியது என்பர் . இக்கதை ஆரியரும் கருப்பின தமிழர்களும் பண்பாட்டுக் கலப்படைந்த பிறகு தோன்றியதாகும் . இக்கதை ஆரியர் எவ்வாறு தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அப்பகுதி மக்களை ஏமாற்றிப் பிழைத்தனரென்று உணர்த்துகிறது . ஆனால் இந்திய மக்களின் கடவுளாகிய சிவபெருமான் பால் கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினால் ஏற்பட்ட அழிவைத் தானே ஏற்று அதனை உண்டு உலகைக் காப்பாற்றும் தியாகம் செய்தார் என உணர முடிகிறது .

இக்கதை சிந்துவில் இல்லை . புராணங்களிலும் , சங்க இலக்கியங்களிலும் உள்ளது . சிவன் உலகைக் காக்க நஞ்சுண்ட தியாகம் தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்ததால்
"" நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே ""
என்று தனக்குக் கிடைத்த அரிதான நெல்லிக்கனியைத் தானுண்னாமல் தனக்குக் கொடுத்த அதியமான் நெடுமான் அஞ்சியை அவ்வை பாடினார் . ஆனால் அசுரருடன் சேர்ந்து ப்ல் கடலைக் கடையும் இத்தகைய நிகழ்வு சிந்துவில் இருக்க முடியாது . காரணம் அங்கு அப்போது ஆரியர் கிடையாது . அப்போது சிந்தவெளிச் சிவனின் உடுக்கையின் இரண்டு பக்கமும் தமிழ் என்றே எழுதப்பட்டிருந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை . ருத்திரர் தொடர்பான குறிப்பும் , விஷ்ணுவை நெடுமால் என்னும் வழக்கும் தமிழகம் வந்த ஆரிய பிராமணர் வழியே வந்ததாகும் . ருத்திரனைத் தமிழ்க்கடவுள் என்பது வரலாற்றுப் பிழையாகும் .

சிவ வழிபாடு தமிழரின் வரலாற்று வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்துக்குரியதாகும் . முதலில் புதியகற் காலத்தில் மலைக்குகைகளில் வேடர்களாக (குறிஞ்சி ) வாழ்ந்தபோது வேலன் என்னும் முருகன் தோன்றினான் . சிவனோ செம்புக்கற்கால (Chalcolithic period ) சிந்து நாகரிகக் கடவுளாவான் . ஆகவே சிவனின் வரலாற்று வளர்ச்சி செம்புக்கற் கால தோற்றத்துடன் 6000 ஆண்டுகளுக்குரியதாகும் . முருக வழிபாடும் , சிவ வழிபாடும் ஒன்றுடன் ஒன்றாய்க் கலந்ததாகும் .