திங்கள், 31 டிசம்பர், 2018

பஞ்சமி நிலமும் அதன் வரலாறும்



பஞ்சமி நிலமும் அதன் வரலாறும்:

 *************************************

நமது தோழர் ஒருவர் " பஞ்சமி நிலம்" என்றால் என்ன என்று கேட்டார் ...எனக்கு ஆச்சரியம் தெரிந்துதான் கேக்கிறாரா ...இல்லை உண்மைகள் தெரியாமல் கேட்கிறாரா என்று ...ஆனால் அடுத்து அடுத்து பலர் தோழர்கள் உல் தப்பி பூட்டை ஆட்டியதால் உணர்ந்துகொண்டேன் .....உண்மையாகவே பலருக்கு பஞ்சமி நிலம் பற்றிய உண்மை தெரியவில்லை என்று ....

அவரை போலவே பலருக்கும் இன்றும் பஞ்சமி நிலம் என்றால் என்ன ...அது யாரால் கொடுக்கப்பட்டது ... ஏன் கொடுக்கப்பட்டது ??... அது சலுகையா ?? உரிமையா ?? என்கிற பல கேள்விகள் அறிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது .. காரணம் அவற்றை பற்றி பேசினாலோ .. அல்லது செயலில் இறங்கினாலோ நேரடியாக பாதிக்க படுவது சூத்திர சாதி இந்துக்கள் ஆகிய ஆண்டைகளும் பஞ்சமி நிலங்களை ஆட்டை போட்ட பண்ணை ஆதிக்க சாதி வியாதிகளும் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்கிற நிலை இருப்பதால்தான்...

ஆகவே அதை வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள் 

பஞ்சமி நிலமும் அதன் வரலாறும்:
 *************************************

தமிழகத்தில் சோழர்களின் ஆட்சியில் தான் சாதியம் வலுப்பெற்றது. மனுதர்மத்தின்படி முதல் நிலையில் இருந்த பிராமணர்கள் சத்ரியர்கள் உதவியுடன் நிலங்களை அபகரித்து அதனை அரசு நிலங்களாகவும்,கோயில் நிலங்களாகவும் மாற்றிவிட்டனர்.இவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலங்கள் யாவும் தலித் மக்களுக்கு சொந்தமானவை. அதன்பின்,ஆங்கிலேயர்கள் தமிழகத்தைக் கைப்பற்றியபோது நிலவிய நிலவுடைமை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. தஞ்சாவூர்,செங்கல்பட்டு,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நீர்ப்பாசனமுள்ள நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களிடமே குவிந்து கிடந்தன. பெரும்பான்மையான மிராசுகள் தங்கள் நிலங்களைப் பயிரிட படியாட்களாக அடிமைகளை வைத்திருந்தனர். அந்த அடிமைகள் அனைவரும் தலித்களாகவே இருந்தனர்.

1892ல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த ஜே.ஹெச்.ஏ.ட்ரெமென் ஹெரே (J.H.A.Tremen Heere) என்ற ஆங்கிலேயர் அப்போதைய பிரிட்டிஷ் அரசிடம் தலித்துகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டுமென்று 17 பகுதிகள் கொண்ட ஒரு அறிக்கையை சமர்பித்தார். இந்த அறிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் அப்போது இருந்த தலித்துகளின் சமூக பொருளாதார வாழ்க்கையை மிகத் தெளிவாக விளக்கியது.

அவர் அளித்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:

“தலித்களுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை. கந்தைத் துணிகள்தான் அவர்களது ஆடைகள். தொழுநோய் போன்ற மிக மோசமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது.
 (மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கிவந்த பொருட்கள் போல). மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனுக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”.
என்று தன் தலைமை அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தார்.

அவர் கூறுகிறார், “1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த தலித்கள்
 படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு
 புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள்.
மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள தலித்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே தலித்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம்
 அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் தலித்களுக்கு கிடைக்கும்.
ஆனால் தலித்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்.”

மேலும் ட்ரெமென் ஹெரே கூறுகிறார்,

* “தலித்கள் மீது மட்டும் ஏன் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்? தலித்துகள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருப்பதோடு விவசாயத்தோடு அதிகம் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
 * இவர்களுக்கு உதவுவதன்மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம்.
 * சமூகத்தின் மிகவும் அடித்தளத்தில் இருக்கிறார்கள். இவர்கள் உயர்ந்தால் அனைவரையும் உயர்த்தியதற்குச் சமம்.
 * தலித்களுக்குக் கொடுக்கும் சலுகைகள் ஒன்றும் பெரிய சலுகைகள் இல்லை. அனால் மற்ற சாதியினருக்கு இதைவிட பெரிய சலுகைகள் இருக்கின்றன.
 * கடந்த காலத்தில் அரசின் கொள்கைகள் தலித்களை கீழான நிலையிலேயே வைத்திருக்கிறது. அந்த தவறை இப்பொழுது நிவர்த்தி செய்ய வேண்டுமனில் புறக்கணிக்கப்பட்டவருக்கு புதிய ஆரம்பத்தைக் கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

ட்ரெமென் ஹெரே அவர்கள் அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகளின் சுருக்கம் :

* மாகாணத்தில் ‘நில விண்ணப்ப’ சட்டத்தின்படி பட்டாதாரருக்கு உள்ள உரிமையை கிராமத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்கும்படி மேற்படி சட்டத்தை திருத்த வேண்டும்.
 * சாகுபடிக்கேற்ற புறம்போக்கு விவசாய நில பகிர்மானத் திட்டம் கிராமத்திலுள்ள தலித்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
 * 1875 க்கு முன்பு வரி பாக்கிக்காக மிராசுதாரர் மற்றும் பட்டாதாரர்களிடமிருந்து அரசு கைப்பற்றிய நிலத்தை தலித்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
 * தேவையில்லாமல் வனத்துறையுடன் சேர்க்கப்பட்ட விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களிலும் மிராசுதாரர் இல்லாத கிராமங்களில் அதிகமாக விவசாயத்திற்குப் பயன்படும் நிலம் உள்ள இடங்களிலும் “தலித்கள் குடியிருப்பை” அமைக்க வேண்டும்.
 * இத்தகைய குடியிருப்புகளில் உள்ள தலித்களுக்கு விவசாயத்திற்கேற்ற மற்ற நிலத்தை அரசு தலித்களுக்கு கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கு கிணறுகள் வெட்டிக் கொடுக்க வேண்டும். இந்தக் கடனை தவணை முறையில் வசூலிக்க வேண்டும்.
 * சென்னை மாகாண குத்தகைச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் தலித்களும் மற்ற விவசாயிகளும் மிராசுதாரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
 * அரசு கிராமமாக இருந்தாலும் மிராசுதாரர் கிராமமாக இருந்தாலும் தலித்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் சார்பாக இருக்கும்படி சட்டம் திருத்தப்பட வேண்டும்.
 * கூலி விவசாயிகள் அடிமை முறையிலிருந்து விடுபடும் விதத்தில் உடன்படிக்கைமீறல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கூலி உடன்படிக்கையை ஒரு வருடத்திற்கு உட்பட்டதாக ஆக்கப்பட வேண்டும்.
 * தலித்கள் வாழும் வீட்டிற்கு பட்டா உரிமையை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 * தலித்கள் அரசு உதவியுடன் மற்ற நாட்டிற்கு குடிபெயரும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.
 * கள்ளு சாராயக் கடைகள் அதிகமாக தலித்துகளுக்கென்று இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
 * தலித்களுக்கு கல்வியை அனுமதித்து அரசு தெளிவாகவும் நேரடியாகவும் அவர்களின் கல்விக்கு வழிவகுப்பது அரசின் கடமையாகும்.
 * தலித்துகளின் சுகாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றங்களால் வரக்கூடிய விளைவுகள்:

* தலித்துகள் நிலத்தைப் பெறுவதில் உள்ள தடையை நீக்குவது.
 * தலித்துகளின் வீடுகளை மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதிலிருந்து விடுவிப்பது.
 * தலித்துகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது.
 * தலித்துகளுடைய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது.”

“சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்க தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்திரம், தன்மானம்
 ஆகியவற்றை அவர்களுக்கு கொடுத்தால் தலித்துகளின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்” என்று 5 அக்டோபர் 1891 அன்று கையெழுத்திட்டு தன் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் அந்த மகான். இத்தகைய கொடுமைகள் மாறவேண்டுமென்றால் கண்டிப்பாக தலித்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் ட்ரெமென் ஹெரே. தன் பிரிட்டிஷ் அரசையும் வலியுறுத்தினார்.

ட்ரெமென் ஹெரே அவர்கள் தலித்துகள் பற்றிக் குறிப்பிட்ட பல்வேறு கொடுமைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமே இருந்தன என்று பொருளில்லை. இந்தியா முழுவதுமே தலித் மக்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவித்தார்கள். இன்னமும்கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் பிறந்த ஆண்டாகிய 1891 ம் ஆண்டு தலித் மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விவாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அந்த ஆண்டுதான் ட்ரெமென் ஹெரே அவர்கள் தலித் மக்களுக்கு நிலம் கொடுத்தால் பிரிட்டிஷ் அரசுக்கு வருமானம் பெருகும் அரசுக்கும் நற்பெயர் இருக்கும் என்றும் பிரிட்டிஷ் அரசிடம் மேற்கண்ட அறிக்கைகளை சமர்ப்பித்தார். 1892ம் ஆண்டு தலித் மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. (அரசாணை 1010, நாள் : 30.09.1892).
இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள தலித் மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இவ்வாறு தலித் மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களை வழங்கிய போது ஒரு சில விதிமுறைகளையும் அரசு வகுத்தது. அதன்படி வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனுபவிக்க வேண்டும்.

* முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது.
 * பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு தலித் இன மக்களுக்கு மட்டுமே விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ செய்யலாம்.
 * நிபந்தனைகளை மீறிச் செய்யப்படும் உரிமைமாற்றங்கள் சட்டப்படி செல்லாது என்ற விதிமுறைகளை விதித்தது. (பார்வை : வருவாய்த் துறை நிலையான ஆணை 15.9 மற்றும் அரசாணை G.O.M.S. 2217 நாள் 01.10.1941). இத்தகைய குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நிலம் வழங்கப்பட்டதால் இவை டி.சி. மற்றும் ஆதிதிராவிடர் கண்டிஷன் நிலங்கள் என்று இன்றும் வருவாய்த் துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பிரிட்டிஷ் கலெக்டரின் நீண்ட போராட்டங்களினாலும் அந்த அரசு அதன் நாடாளுமன்றத்திலேயே சட்டம் நிறைவேற்றி தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் இப்போது எங்கே என்றால் விடை தெரியவில்லை. அத்தனை ஏக்கர் நிலங்களும் மீண்டும் ஆண்டைகள் கையிலும் ஆதிக்க சாதிவெறியர்கள் கையிலும் அரசியல்வாதிகள் கையிலும் போய்விட்டன. எல்லா நிலங்களையும் இன்று தலித் அல்லாத பிற சாதியினரின் கையிலேயே இருக்கின்றன. ‘அந்த நிலங்கள் தலித் அல்லாதவர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் செல்லாது’ என்று சட்டமிருந்தாலும் சட்டங்களை மீறி எல்லா நிலங்களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டன. சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் அமைந்துள்ள பல வானுயர்ந்த கட்டடங்களும் இவ்வாறான பஞ்சமி நிலங்களைத்தான் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. ஆதிக்க சாதியினர்தான் இவ்வாறான நிலங்களை பிடுங்கிக்கொண்டனர் என்பது மட்டுமில்லை. இன்றைய ஆளும் அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு கட்சிபேதம் பார்க்காமல் பஞ்சமி நிலங்களை பிடுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கு பார்த்தால் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அரசால் செய்யப்படும் நில ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பஞ்சமி நிலங்களை குறிவைத்தே நடக்கின்றன. அதுவும் தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக வாழும் பல நூற்றுக்கணக்கான பஞ்சமி நிலங்கள் அடங்கிய கிராமங்களைக் குறிவைத்தே இவ்வாறான அநியாயங்கள் இந்த அரசுகளால் நடத்தப்படுகிறது. இதற்கெனவே அரசின் அங்கீகாரம் பெற்ற நில புரோக்கராக சிப்காட் என்னும் நிறுவனம் இயங்கி வருகிறது. நீர் வளம் உள்ளிட்ட எல்லா ஆதாரங்களும் உள்ள பஞ்சமி நிலங்களாக பார்த்து ஆக்கிரமிப்பு செய்து அயல் நாட்டின் பல நிறுவனங்களுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி எந்தவிதமான சட்டதிட்டங்களுமின்றி இலவசமாக தானமாக எழுதிக்கொடுத்துவிடுவதுதான் இன்றைய அரசுகளின் வேலை. இவ்வாறாக பஞ்சமி நிலங்களை அபகரிக்கும் முதல் ஆளாக இன்றைய அரசுகளும் அதிகார வர்க்கமும் தலித் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்துப் போராடும் மக்களை பஞ்சமி நிலமீட்பு போராளிகள் ஜான்தாமஸ் மற்றும் ஏழுமலையை சுட்டுத்தள்ளியது போல கொன்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு சட்டப்பேரவை தேர்தல்களில் இந்த இரண்டு ஆளும் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுப்போம் என்று சொல்லியது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தான் சொன்னதை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு நேர் மாறாக அரசே பஞ்சமி நிலங்களை பிடுங்கி எவனுக்கோ கொடுப்பது எவ்வகையில் நீதி? அதையும் மீறி பஞ்சமர்கள் நியாயத்திற்காக நீதிமன்றம் சென்றால் அங்கே சொல்லும் நீதி என்ன தெரியுமா. ‘அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’. பிறகு யார்தான் தலையிடுவார்கள் என்று தெரியவில்லை.
ஆக அந்த காலம் முதல் இந்த காலம் வரை தலித்துகளை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்று ஆண்டைகள் முதல் அரசியல்வாதிகள், அதிகார வர்கங்கள், இன்றைய ஆளும் அரசுகள் வரை நினைத்துக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. வாழ்க ஜனநாயகம் !ஆக நாம் செய்ய வேண்டிய முதல் வேலை பஞ்சமி நிலம் பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்,மக்களை போராட்ட ரீதியாக ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை முன்னெடுப்பதும்தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்...

அனைத்து தகவல்களும் இணையதளங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.


புதன், 26 டிசம்பர், 2018

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?: ஓர் வரலாற்று ஆவணம்


கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?: ஓர் வரலாற்று ஆவணம்

“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ்,

´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை சாதியத் தன்மையும் கொண்டிருக்கிறது…..
தமிழ்நாட்டில் நடந்த வர்க்கப்போராட்டங்களில் சாதியப் போராட்டத்தின் வெறித்தனத்தின் உச்சம் எந்நிலைக்கு சென்றது என்பதற்கு கீழ்வெண்மணி கிராமத்தின் சம்பவங்களை ஆராய்வோம்.

நிலப்பிரபுத்துவ நுகத்தடியின் கீழ்…

தஞ்சையில் நிலச்சுவான்தார்கள், தாழ்த்தப்பட்ட மக்களை ‘பண்ணையாள் முறை’ கட்டமைப்பில் வைத்திருந்தது. இதில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நிலங்களில் செய்யும் வேலைகளுக்கு கூலியாக 1968-வரையிலும் ஒருபடி நெல்லே கூலியாக கொடுக்கப்பட்டது.
மேலும் வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலை நேரத்தில் களைப்பாக இருந்தால் உடம்பில் இரத்தம் வரும் அளவுக்கு சாட்டையாலும், சவுக்கு தடியாலும் தண்டிக்கப்பட்டனர். மாட்டுச் சாணியை தண்ணிருடன் கரைத்து குடிக்கச் சொல்லும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. மறுக்கும் கூலி தொழிலாளர்கள் அடியாட்களால் உதைக்கப்பட்டனர்.

1960-க்கு மேல் அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த மணியம்மையும், சீனிவாசராவும் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தி விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தனர்.
இராஜாஜி ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது´ என்று வர்ணித்ததும் அப்போதுதான்.

பற்றி எரிந்த வர்க்கப் போராட்டம் !

உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெற்களுடன் மேலும் ஒருபடி நெற்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை.
ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

விவசாய தொழிலாளர் சங்கம் இருப்பதால் தான் விவசாய தொழிலாளிகள் துணிந்து நிற்கிறார்கள் என்று சங்கத்தை ஒழித்துக் கட்ட நினைத்தனர். சங்கத்தில் இருந்த தொழிலாளர்களை தாக்குவதும், சங்கத்தில் இருப்பவர்களுக்கு வேலை தர மறுத்து சங்கத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என நினைத்தனர்.
மேலும் நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில், ´நெல் உற்பத்தியாளர்´ சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் மூலம் உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் விவசாய தொழிலாளர்களை வரவழைத்தனர். நிலச்சுவான்தார்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சச்சரவுகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன.

நிலச்சுவான்தார்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட சங்கத்தில் விவசாய சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களை கொல்லும்படி சதி திட்டம் தீட்டப்பட்டது. தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் இணைந்து இச்சதி திட்டத்தை குறித்து அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் புகார் கொடுத்தாலும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.

நிலைமை இழுபறியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் 25.12.1968-அன்று மாலை 5-மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் [நாயுடு] வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி நிலச்சுவான்தார் சவரிராஜ் [நாயுடு] வீட்டுக்கு வந்து முத்துச்சாமி, கணபதியின் கட்டை அவிழ்த்து அழைத்துச் சென்றனர்.

அப்போது நிலச்சுவான்தார் ஆட்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த நிலச்சுவான்தார்கள் ஆத்திரம் கொண்டனர். ´கோபால கிருஷ்ண´நாயுடு துப்பாக்கிகளுடன் காவல்துறை மற்றும் அடியாட்களோடு வெண்மணி கிராமத்துக்கு சென்றார்.

வெறிகொண்ட நிலப்பிரபுக்கள்! எரிந்தது வெண்மணி !

கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தவுடன் கண்ணில் தென்பட்ட விவசாயத் தொழிலாளர்களை காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதைப் போல் கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தினர். தற்பாதுகாப்புக்காக விவசாயத் தொழிலாளர்களும் திருப்பி தாக்கினர். இதில் பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்டார். துப்பாக்கித் தாக்குதலில் பல தொழிலாளர்களுக்கு உடலில் குண்டுகள் பாய்ந்தன. தங்களால் துப்பாக்கி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த விவாசாய தொழிலாளர்கள் ஓடினர்.

தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யா என்பவரின் குடிசைக்குள் பாதுகாப்புக்காக புகுந்தனர். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சிறிய குடிசைக்குள் புகுத்தவர்களின் எண்ணிக்கையோ மொத்தம் 48.

ஆத்திரம் அடங்காத கோபால கிருஷ்ண நாயுடு குடிசையின் கதவை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை இட்டார். அதன்படி குடிசையின் கதவு அடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. குடிசைக்குள் இருந்த 48-பேர்களும் மரண பயத்தில் கதறினர். குடிசையை தீ ஆக்ரோஷமாக பிடித்துக் கொண்டு தகி தகித்துக் கொண்டு இருந்தது.

தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வந்துவிடக் கூடும் என்று அடியாட்கள் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். இருப்பினும் குடிசையில் இருந்து ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பிடிபட்டு மீண்டும் குடிசைக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். ஒரு தாய் தன் ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்ற வெளியே வீசினாள். பாதகர்களோ குழந்தை என்றும் பார்க்காமல் மீண்டும் குடிசைக்குள்ளே தூக்கியெறிந்தார்கள்.
இக்காட்சிகளை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 3-சிறுகுழந்தைகளும் பயத்தில் கத்தின. அவர்களையும் தூக்கி நெருப்பில் போட்டது வன்முறைக்கூட்டம். பெருங்கூச்சலும், மரண ஓலமும் வெகுநேரத்திற்கு பின்பே அடங்கியது.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் புகாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொண்டிருந்த குடிசையின் உள்ளே பார்த்த போது மனித உயிர்கள் கருகி தீச்சுவாலைகள் சதைகளை சாம்பல்களாக்கி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது.

மறுநாள் காலை 10- மணி அளவில் எரிந்து சாம்பலாகிப் போயிருந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது. மிகச் சிறிய குடிசைக்குள் கருகிய நிலையில் 44-மனித உடல்களை எண்ண முடியாத அளவில் எலும்பும் சாம்பல் குவியலுமாய் கிடக்கிறது. அதில் மாதாம்பாள் (வயது 25) என்ற பெண் தன் குழந்தை தீயில் கருகிவிடக் கூடாதே என்று இறுக்கி அணைத்தபடி குழந்தையோடு கருகி பிணமான பின்னும் அவளுக்குள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்தபடி இறந்து போய் இருந்த காட்சியும் குழந்தை தாய் மார்பின் முலையில் வாய் வைத்தபடி இறந்து கிடந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைத்தது.

பிணங்களின் உடல்களை பரிசோதிக்கும்படி அரசாங்க டாக்டருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் வந்த டாக்டர் இதற்குள் புகுந்து சாம்பலாகிப் போன உடல்களை பரிசோதிப்பது சிரமம் என மறுத்துவிட்டார். இன்னொரு பக்கம் காவல்துறையோ தோராயமாக 29-பேர்தான் இறந்திருக்கின்றனர் என்று கணக்கை குறைத்து எழுத முற்பட்டது. ´இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்´ என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கதையும் சொல்லியது.
நாளேடுகளில் முகப்பு செய்திகளாக கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. தமிழகம் அதிர்ந்தது. கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். தி.க மற்றும் கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள். சீனாவில் வானொலியில் தொடர்சியாக கீழ்வெண்மணி கொடூரம் குறித்து செய்தி வெளியிட்டது.

உலக நாடுகள் இந்தியாவில் வர்க்க வெறுப்பில் நடந்த படுகொலையைக் கண்டு உறைந்து போனது. ‘பாட்ரியாட்´, ´நியுஏஜ்´ போன்ற டெல்லிப் பத்திரிகைகள் “நாட்டுக்கே அவமானம்” என்று எழுதின. கீழ்வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். [ஆதாரம்: பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி 1968-டிசம்பர் 27-ஆம் தேதியில் விடுதலையில் வந்திருக்கிறது.]
28.12.1968-அன்று கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகள் குறித்து பெரியாரிடம் தெரிவிக்கப்பட்ட உடன் அன்று மாலையே வீடு திரும்பினார். கீழ்வெண்மணி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இரு அறிக்கைகளும் வெளியிட்டார்.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் சம்பவம் நடந்த அன்றே செய்தி தெரிந்ததும் கிளம்பி மறுதினமே கீழ்வெண்மணிக்கு வந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயக் கூலி தொழிலாளிகள் கீழ்வெண்மணியில் முற்றுகையிட்டனர். எப்போது என்ன நடக்கும் என்று உணரமுடியாத வண்ணம் பதட்ட நிலையில் இருந்தது. எல்லாரிடமும் மிராசுதாரையும், அடியாட்களையும் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மிகுந்திருந்தது.

கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமசாமி அம்மக்களை அமைதிப்படுத்தி நீண்ட நேரம் உரையாற்றினார். கொடூரமாக நடைப்பெற்ற நிகழ்வுக்கு சட்டப்படி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல் நிலையத்தில் கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து புகார் தரப்பட்டது. கீழ்வெண்மணி படுகொலையை நேரில் பார்த்தவர்களும்
பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிக்கு வந்தார்கள்.

கீழ்வெண்மணி வன்முறை நடந்தபோது போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அண்ணா முதலமைச்சராக இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும் நிலசுவான்தாரர்கள் கூட்டம் வேறொரு மோசடி வேலையில் ஈடுபட்டது.

“விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச்சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர்” என்று நிலச்சுவான்தார்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க கவனமாக வார்த்தைகள் கையாளப்பட்டு ஊடகங்களில் செய்தி வரச் செய்தனர். நெருப்புக்கு இரையாக்கப்பட்டதற்கு காரணம் சொன்ன நிலச்சுவான்தார்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற 11-விவசாயத் தொழிலாளிகளுக்கு என்ன காரணத்தை சொல்ல முடிந்தது?

முதல் தகவல் அறிக்கை FIR

கீழ்வெண்மணியை சாா்ந்த முனியன் என்பவா் கீவளூா் காவல்நிலையத்தில் 25.12.1968-அன்று இரவு 11.15மணிக்கு புகாா் அளிித்தாா்.
குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது
புகாாில்…

“இன்று இரவு பத்துமணிக்கு இரிஞ்சூா் நெல் உற்பத்தியாளா் சங்க தலைவா் கோபாலகிஷ்ணநாயுடு மற்றும் சுமாா் இருபதுக்கும் மேற்பட்ட நபா்களுடன் எங்கள் ஊருக்குள் புகுந்து என் வீட்டிற்கு தீ வைத்து என்னை துப்பாக்கியால் சுட்டாா். ரவைக்குண்டுகள் பட்டு காயங்கள் என் முகத்திலும் என் கழுத்திலும் இருக்கிறது. மற்ற வீடுகளும் எாிந்துவிட்டன. அதில் உள்ளவா்கள் என்னவானாா்கள் என எனக்குத் தொியாது”-என அதில் குறிப்பிட்டாா்.

இப்புகாாின் அடிப்படையில் பிரிவுகள் 147,148,323,307,436- இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
ஆனால் கொலைக்குற்றத்திற்கான 302-? பிரிவு அதில் சோ்க்கப்படவில்லை. இதன் தொடக்கமே எவ்வளவு திட்டமிடலுடன் காவல்துறை செயல்படுகிறது என்பதை அறிய ம்

எாித்துக்கொல்லப்பட்டவா்கள் பட்டியல்

1]சுந்தரம்-வயது/45
2]சரோஜா/12
3]மாதம்பாள்/25
4]தங்கையன்/5
5]பாப்பா/35
6]சந்திரா/12
7]ஆசைத்தம்பி/10
8]வாசுகி/3
9]சின்னப்பிள்ளை/28
10]கருணாநிதி/12
11]வாசுகி/5
12]குஞ்சம்மாள்/30
13]பூமயில்/18
14]கருப்பாயி/35
15]இராஞ்சியம்மாள்/16
16]தாமோதரன்/1
17]ஜெயம்/10
18]கனகம்மாள்/25
19]இராஜேந்திரன்/7
20]சுப்பன்/50
21]குப்பம்மாள்/35
22]பாக்கியம்/35
23]ஜோதி/10
24]இரத்தினம்/35
25]குருசாமி/15
26]நடராசன்/5
27]வீரம்மாள்/25
28]பட்டு/46
29]சண்முகம்/13
30]முருகன்/40
31]ஆச்சியம்மாள்/30
32]நடராசன்/6
33]ஜெயம்/6
34]செல்வி/3
35]கருப்பாயி/50
36]சேது/26
37]நடராசன்/10
38]அஞ்சலை/45
39]ஆண்டாள்/20
40]சீனிவாசன்/40
41]காவோி/50
42]வேதவள்ளி/10
43]குணசேகரன்/1
44]இராணி/4

குற்றவாளிகள்:

1]கோபலகிருஷ்ணநாயுடு
2]பாலு நாயுடு
3]கோவிந்தராஜ் நாயுடு
4]இராமுபிள்ளை
5]ராஜ் நாயுடு
6]மூா்த்தி நாயுடு
7]இராமதாசு
8]சீனிவாசநாயுடு
9]மூா்த்தி
10]இராமனுஜம்
11]இராமையா நாடாா்
12]பாலு
13]தாமோதரன்
14]கோவிந்தராஜிலு நாயுடு
15]கிருஷ்ணமூா்த்தி
16]பொருமாள் சுவாமி
17]காியய்யா நாயுடு
18]முத்துநாயுடு
19]கிருஷ்ணசுவாமி
20]கோதண்டவம் பிள்ளை
21]முருகைய்யாத்தேவர்

கொலையாளிகளை விடவும் தீா்ப்பு கொடூரமானது !

போலீஸ் ஐஜி கீவளுர் வட்டாரத்தில் லைசன்ஸ் துப்பாக்கிகள் 42- இருப்பதாகவும், 28-ஆம் தேதி முடிய 5-துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்று கூறியதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். மிகக் கொடுமையாக நடந்த இப்படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண [நாயுடு]வுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண [முதலியார்] 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண [நாயுடு] சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண [நாயுடு] மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

“Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene.” -‘ The Hindu´’

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.” – ‘இந்து’

மேலும் “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று புத்திசாலித்தனமான கருத்தையும் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், நீதிக்கு எதிராகவும் வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து என்ன செய்வது? தமிழகத்தில் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு உருவாகவில்லை.
விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் விரக்தியடைந்தனர். எத்தனை சாட்சிகள் இருந்தும் ஜனநாயகமும், சட்டமும் ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன. அதன் பின்னணி அரசியல் நகர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல….திமுக முதல் காங்கிரஸ் வரை…நிலச்சுவான்தார்களின் கௌரவப் பிரச்சனையாக கருதப்பட்டு எப்படியும் கோபால கிருஷ்ண நாயுடுவை வெளிக்கொணருவதில் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தனர்.

வெண்மணி கொடுமைக்கு கணக்கு தீர்த்தனர்!

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை செய்யப்பட்டு 12-ஆண்டுகள் சென்ற நிலையில் 1980-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் தலைமறைவு புரட்சியாளர்களான நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள் மிராசுதார் கோபால கிருஷ்ண நாயுடுவை தியாகிகள் நினைவிடத்தின் அருகில் வெட்டிக் கொன்றனர். பிணத்தின் அருகில் ´வினோத் மிஸ்ரா´ வாழ்க! என CPIML இயக்கத் தலைவரின் பெயரில் துண்டு அறிக்கைகளை வீசிவிட்டு சென்றனர்.

காவல் துறை வன்முறையாளர்கள் கோபால கிருஷ்ண நாயுடுவை கொன்றதாக குற்றம் சாட்டியது. தமிழகத்தில் தொழிலாளர்களோ இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.
கீழ்வெண்மணி படுகொலையும் அதற்கு சட்டம் கொடுத்த தீர்ப்பின் யோக்கியதையைக் குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத நிலையில் தான் இந்திய சனநாயகம் இருக்கிறது…

வர்க்கப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் நமக்கு சட்டத்தின் பங்களிப்பின் நம்பகத்தன்மையை குறித்து பல கேள்விகள் எழுகிறது. வர்க்கப் போராட்டங்களுடன் சாதீய ஒடுக்குமுறைகளுக்கும் கணக்குத் தீர்க்க வேண்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து பல வருடங்களாகிறது. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள், ‘நாங்களும் மனுசங்க தாண்டா’ என்று போராடக்கூடிய நிலையில் தான் இன்றைய நிலை நீடிக்கிறது.
கம்யூனிஸ்ட்களின் கடமை மென்மேலும் அதிகரித்துச் செல்கிறது.

வெண்மணித் தியாகிகளுக்கு வீரவணக்கம் !
நீங்கள் விட்டுச் சென்ற இலட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்!
நிலபிரபுத்துவத்தின் மிச்சங்களை கணக்குத் தீர்ப்போம் ! 

சனி, 17 நவம்பர், 2018

யுகம்...

யுகம்...

யுகம் என்றால் என்ன? எதை கொண்டு அவை நிர்ணயிக்கப்படுகிறது? அவற்றுக்கு அடிப்படை என்ன? எதை கொண்டு அவை பிரிக்கப்படுகிறது? மொத்தம் எத்தனை யுகங்கள் உள்ளது?இவை அனைத்திற்கும் விடை “பிரம்மனின் காலம்”. சரி பிரம்மனின் காலம் என்றால் என்ன? யுகங்கள் எவ்வாறு பிரம்மனுடன் தொர்பு உடையதாகிறது?இதை பற்றி ஒவ்வொருவரும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நம் புராணங்களும் இதிகாசங்களும் இந்த பிரம்மனின் கால அளவை கொண்டே நிகழ்வுகளை குறிக்கிறது. எனவே இதை பற்றி சற்று விரிவாக அலசலாம்.மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள்.1 மனித வருடம் = 1 தேவ நாள்.360 மனித வருடம் = 1 தேவ வருடம்.இப்போது தேவர்களின் கால கணக்கை துவங்குவோம்.....12000 தேவ வருடம் = 1 சதுர்யுகம் (43,20,000 மனித ஆண்டுகள்).1 சதுர்யுகம் என்பது 4 யுகங்களை கொண்டது. அதாவது 12000 தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.கிருத யுகம் 17,28,000 மனித வருடம் / 4800 தேவ வருடம்.திரேதாயுகம் 12,96,000 மனித வருடம் / 3600 தேவ வருடம்.துவாபரயுகம் 8,64,000 மனித வருடம் / 2400 தேவ வருடம்.கலியுகம் 4,32,000 மனித வருடம் / 1200 தேவ வருடம்.அதாவது ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித ஆண்டுகள் அல்லது 12,000 தேவ வருடங்கள். சதுர்யுகத்தை மஹாயுகம் என்றும் அழைப்பர்.71 மகாயுகங்கள் = 1 மனுவந்தரம்.மொத்தம் 14 மனுவந்திரங்கள் உள்ளன அவை :1.சுவயம்பு2.சுவாரோசிஷம்3.உத்தமம்4.தாமசம்5.ரைவதம்6.சாக்சூசம்7.வைவசுவதம்8.சாவர்ணி9.தக்ச சாவர்ணி10.பிரம்ம சாவர்ணி11.தர்ம சாவர்ணி12.ருத்திர சாவர்ணி13.ரௌசிய தேவ சாவர்ணி14.இந்திர சாவர்ணி.

இப்போது நாம் இருப்பது 7 வது மனுவந்திரம்.1 மனுவந்திரம் என்பது ஒரு மனுவின் ஆட்சிகாலம் என்பதை மட்டும் இப்போது நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களைகட்டுரையின் கீழ் காண்போம்.கல்ப காலம்:ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பும் நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகலை மட்டும் பிரம்மனின் ஒரு நாள் என்று பேச்சு வழக்கில் வந்தது.பிரம்மனின் கல்பகாலத்தில் 14 மனுவந்திரங்கள் அடங்கும். அதாவது ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் 1 மனு மற்றும் 1 இந்திரன் வீதம், 14 மனுக்கள் மற்றும் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள் (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).2 மனுவந்திரத்திர்க்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. ஸந்தியா காலத்தின் அளவு நான்கு கலியுகம் அளவு. அதாவது, 432000 X 4= 1728000 மனித வருடங்கள்.இதேபோல் 14 மனுவந்திரத்திர்க்கு பின்பு மீண்டும் ஒரு பெரிய இடைவேளை இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு.எனவே பிரம்மனின் ஒரு பகலில், 71 X 14 மகாயுகங்களும்,15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.14 மனுவந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.15 ஸந்தியாகாலங்கள்= 15 x 17,28,000 = 2,59,20,000 மனித ஆண்டுகள்.2,59,20,000 = 6 மஹாயுகங்கள். ( 43,20,000 X 6 = 2,59,20,000).ஆக பிரம்மனின் 1 பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்யுகங்கள்).இதையே பிரம்மனின் நாள் என்றும் கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.இவ்வாறு 360 நாள் (அ) 360 கல்பம் (அ) 360 X 1000 சதுர்யுகம் என்பது பிரம்மனின் ஒரு வருடம்.பிரம்மனின் 100 வருடம் = ஒரு பிரம்மனின் ஆயுள்.அதாவது பிரம்மனின் ஆயுள் என்பது 155,520,000,000,000 மனித வருடங்கள்.அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.யுகங்கள் என்றால் என்ன.... அவை எப்படி பிரம்மனோடு தொடர்பு கொண்டுள்ளது என்று ஓரளவிற்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில்,28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது. கி.பி.2015 என்பது கலியுக வருடம் 5116 – 17 என்பதை குறிக்கின்றது.நவீன கால விஞ்ஞானம் இந்த உலகத்தில் உயிரினம் தோன்றிய காலத்தை கணித்து 1,972,944,456 வருடங்கள் என்று கூறுகிறது. மேலே உள்ள நமது யுகங்களின் கணக்கை வைத்து பார்க்கும் போது தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,972,944,456 வருடங்கள் என்பது தெளிவாகிறது. பிரம்மாவிற்கு இப்போது 51 வயது நடந்து கொண்டிருக்கிறது. பிரம்மாவின் ஆயுள் 100 என்றால், அதன் பின் பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அழியும் என்றால் இன்னும் ஜீவராசிகள் உயிர்வாழ 49 பிரம்மா ஆண்டுகள் பாக்கியுள்ளன. அதாவது 76,20,48,00,000,000 வருடங்கள் இன்னும் பாக்கியுள்ளது. நவீன அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் மீதம் உள்ள ஆயுள் என்று கணக்கிட்ட வருடங்களும் கிட்டத்தட்ட இதுவே...

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

என்னாது, பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா? - தெரிந்த கதை தெரியாத உண்மை


என்னாது, பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா? - தெரிந்த கதை தெரியாத உண்மை

இந்த வாரம் நமது தெரிந்த கதை, தெரியாத உண்மையில், பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா? இல்லையா எனத் தெரிந்து கொள்வதற்கு முன் ஆஞ்சயநேயரின் பிறப்பு ரகசியம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். “அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன்.

வியக்கத்தக்க கருத்துக்களை கொண்டது இந்து புராணங்கள். அவைகள் படிப்பதற்கு மிகவும் புதிராகவும், சுவாரசியமாகவும் இருக்கும். மாகாபாரதத்தில் தேவர்களின் அருளால் பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்திதேவி. அதேப்போல, கந்தாரியோ 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். அதுப்போலதான், ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் வியக்கத்தக்க கருவின் மூலமாக தான் பிறந்தார். ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்றைத்தான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான் என்பதே. மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான்.

வால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது, ஒருமுறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும். மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து, அதற்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர். அதுவே மகர்ட்வாஜா என்று சொல்லப்படுகிறது .

கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், அனுமனின் மகன் ”மச்சானு” என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிற்கும் (சுவர்ண என்றால் தங்க மச்சா என்றால் கடற்கன்னி என்று அர்த்தம்) பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது சென்றது மகாராவிற்கு பதில் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிடம் என்று கூறப்படுகிறது

இராமர் இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், அந்த பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான். வானரப்படைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணாமல் போயின.இந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க அனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார். அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரணம் எனத் தெரிந்துக் கொள்கிறார்

இராவணனின் மகள் சுவன்னமச்சாவினை பார்க்கிறார் அனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூக்கி வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அதை, அனுமன் தடுக்கும்போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டிக் கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் அனுமனின் நல்ல உள்ளம் தெரிந்துக் கொண்டு அனுமன்மேல் காதல் கொண்டாள். அனுமனும் சுவன்னமச்சா அழகில் மயங்கி இருவரும் ஒன்றாக இணைந்தனர். அதில் பிறந்த மகன்தான் மச்சானு என்றும் சொல்லப்படுகிறது .

மேலும்,கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான இராமாயணத்தில், இராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் அனுமன். விளையாட்டாய் அதனை வென்றுவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அந்த உயிரினமோ கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டது. முடிவே இன்றி சண்டை நீண்டுக்கொண்டே போக, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் நீ யார்? உன் பெற்றோர் யார்? எனக் கேட்டார் அனுமன். அந்த உயிரினம் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது தன்னுடைய தாய் சுவன்னமச்சா எனவும் தந்தை வல்லமைமிக்க வானர வீரரான வாயுபுத்திரன் அனுமன் என்று கூறியதைக் கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார்.

இருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனை அடையாளம் கண்டுக்கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார். எது எப்படி இருந்தாலும், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போதுதான் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஆஞ்சநேயர் தெரிந்து கொண்டார்.

உ‌ஜ்ஜை‌னி நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 15 ‌கி.மீ. தொலை‌வி‌ல் சா‌ன்வெ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அரு‌கில் ஒரு அனுமன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் அனுமன் சிலை தலை கீழாக இருப்பதுதான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. எதுக்கு இந்த கோவிலைப் பற்றி பார்க்கிறோம்னா, மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ன்று அவ‌‌ர்க‌ள் இருவரையு‌ம் ‌மீ‌ட்டு வ‌ந்தா‌ராம். அ‌ப்படி அனும‌ன் தலை‌கீ‌ழாக‌ப் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌ப் புற‌ப்ப‌ட்ட இட‌ம் இதுதா‌ன் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பா‌ரிஜாத மர‌ங்க‌ள் ‌மிகவு‌ம் பழமையானவை. இ‌ந்த மர‌ங்க‌ளி‌ல் அனும‌ன் குடி‌யிரு‌ப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராம‌ன், ‌சீதை, ல‌ட்சுமண‌ன், ‌சிவ‌ன் ம‌ற்று‌ம் பா‌ர்வ‌தி ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌ம் உ‌ள்ளன.

புதன், 26 செப்டம்பர், 2018

யார் அந்த மருதநாயகம்?


யார் அந்த மருதநாயகம்? நீங்கள் அறிந்து  கொள்ள வேண்டிய வரலாற்றின் இரகசிய உண்மைகள்!

மருதநாயகம் என்றால் பலருக்கும் நடிகர் கமல் நீண்ட காலமாக திரைப்படமாக எடுக்க தவித்து வரும் ஒரு படமாக மட்டுமே தெரியும். ஆனால், அதையும் தாண்டி, இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்ட அந்த உண்மையான மருதநாயகம் யார் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

உண்மையில், இந்திய சுதந்திர போராட்டத்தில் மருதநாயகம் என்ற பெயரை காண்பது அரிது. காரணம், மருதநாயகம் என்ற பெயர் அந்த வரலாற்று பக்கங்களில் பெரிதாக எழுதப்படவில்லை.
இந்திய விடுதலைக்காக மருதநாயகம் என்ன செய்தான்? ஆங்கிலேயர் படையிலும், பிரெஞ்சு படையிலும் படை தலைவனாக இருந்த ஒருவனுக்கும், இந்திய விடுதலை போராட்டத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த காலத்திலேயே கொரில்லா சண்டை பயிற்சி பெற்று மாவீரனாக திகழ்ந்தவன், எப்படி உயிரிழந்தான்?
உண்மையில் யார் தான் இந்த மருதநாயகம்?

1700-களில் வாழ்ந்தவன் மருதநாயகம். இவரது இயற்பெயர் மருதநாயகம் என்றிருந்தாலும், இஸ்லாமத்தின் மீது கொண்ட பேராவல் காரணத்தால் தனது பெயரை முகமது யூசப் கான் என மாற்றிக் கொண்டான்.
இந்த பெயரை நீங்கள் இந்திய விடுதலை வரலாற்றில் கேள்விப்பட்டிருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
மருதநாயகம் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டத்தின் பனையூர் என்ற இடத்தில். தனது இளம் வயதிலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறிய மருதநாயகம் எனும் யூசப் கான் பிரஞ்சு படையில் வேலை பார்த்து வந்தவர். தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலம், உருது, போர்ச்சுகீசிய மொழிகளும் கற்று தேர்ந்த மாவீரன் யூசப் கான்.
இந்தியாவின் பெரும் பகுதிகளில் பிடித்து ஆட்சி செய்ய ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு காரர்கள் மத்தியில் பெரிய போட்டி நடந்து வந்தது. அந்த நாடு பிடிக்கும் யுத்தத்தில் யூசப் கானின் வீரத்தை கண்டு வியந்த ராபர்ட் கிளைவ், தனது படையில் யூசபை சேர்த்துக் கொண்டார்.
சிலர் பிரெஞ்சு படையில் தன்னை வளர்த்துக் கொள்ள, தனது வீரத்திற்கு ஏற்ற இடம், வேலை இல்லை என்பதால் யூசப் கான் ஆங்கிலேயர் படையில் இணைந்தான் என்றும் கூறுகிறார்கள்.
தனது படையில் யூசப் கான் இணைந்த பிறகு, அவருக்கு ஐரோப்பிய பயிற்சிகளை வழங்கினார் ராபட் கிளைவ்.
1752ல் நடந்த ஆற்காடு முற்றுகை போரில் யூசப் கான் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி தரவே, சிப்பாய் படை தளபதி எனும் 'கான்சாகிப்' பட்டம் முகமது யூசப்கானிற்கு வழங்கப்பட்டது.
1755ல் பாளைய்காரர்களிடம் இருந்து சரியாக கப்பம் வசூலித்து கொடுத்த காரணத்தால், 1759ல் நெல்லையின் கவர்னராக முகமது யூசப் கானை ஆங்கிலேய அரசு நியமித்தது.
சென்னையை 1758-ல் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை கொரில்லா தாக்குதல் மூலம் தோற்கடித்தான் முகமது யூசப் கான். இந்த வெற்றியின் பரிசாக யூசப் கானிற்கு கமாண்டோ கான் எனும் பதவி உயர்வு கிடைத்தது.
முகமது யூசப் கான் மதராச பட்டினம் சென்ற போது, கொள்ளைக்காரர்கள் மீனாட்சி அம்மன் கோயிலை சூறையாடியது அறிந்து, அவர்களிடம் இருந்து சண்டையிட்டு அந்த நிலங்களை கோவில் நிர்வாகத்திற்கு மீண்டும் அளித்தார் முகமது யூசப் கான்.
அதுமட்டுமின்றி, அங்கே குளங்கள் வெட்டி, கோட்டைகளை புதிப்பித்து பல நல்ல காரியங்கள் செய்ததால். முகமது யூசப் கானிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

முகமது யூசப் கானிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை அறிந்த ஆங்கிலேய அரசு கோபம் கொண்டது. இதை தடுக்க, மருதநாயகம் ஆற்காடு நவாபின் பணியாள் என ஆணையிட்டது. இதன் காரணத்தால் முகமது யூசப் கான் எரிச்சல் அடைந்தார்.
மேலும், மக்கள் மத்தியில் ஆங்கிலேய அரசிற்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி கைது செய்ய அறிவித்தது.
1763-ல் 27,000 பேர்களை படையில் சேர்த்து ஆங்கிலேய படைக்கு எதிராக சண்டையிட்டு மதுரையில் வெற்றிக்கொடி கட்டினார் முகமது யூசப். இதன் காரணமாக மேலும், முகமது யூசப் மீது அதிக கோபம் கொண்ட ஆங்கிலேய அரசு, தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தது.
1764-ல் ஆற்காடு இளவரசர் மற்றும் ஆங்கிலேய அரசும் யூசப் கானின் கோட்டையை முற்றுகையிட்டு போரிட்டது. வீரர்களுக்கு செல்லும் நீர், உணவை தடுத்து அவர்களை சோர்வடைய செய்து தந்திரமாக வெற்றி அடைந்தார்கள் ஆங்கிலேயர்கள்
கடைசியாக அக்டோபர் 10, 1764ல் கைது செய்யப்பட்டு, 16ம் நாள் தூக்கில் இடப்பட்டார் முகமது யூசப் கான் என அழைக்கப்பட்டு வந்த மருதநாயகம்.
எங்கே இறந்த பிறகும் தந்திரமாக உயிரெழுந்து வந்துவிடுவானோ என்ற அச்சத்தாலும், நாங்கள் மருதநாயகத்தை வீழ்த்திவிட்டோம் என்பதை அனைத்து ஊராரும் அறியவும் மருதநாயகத்தின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்து ஆங்கிலேய அரசு.
 
புதைத்த இடங்கள்!
தலை - திருச்சி; கைகள் - நெல்லை பாளையங்கோட்டை; கால்கள் - தேனீ பெரியகுளம்; உடல் - மதுரை சம்மட்டி புரம் என பல பகுதிகளில் மருதநாயகத்தின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்டன.
இவரின் கால் தேனியின் வடகரை தர்ஹாவில் புதைக்கப்பட்டுள்ளது பலரும் இன்னும் அறியாத வண்ணம் உள்ளது.


செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

செங்குந்தர் குலங்களின் வரிசை தொகுப்பு


செங்குந்தர் குலங்களின் வரிசை தொகுப்பு

1. 24 நாட்டு பட்டக்காரர்
2. கருமாண வாத்தியார்
3. வையாபுரி நாட்டு பட்டம்
4. வாரக்கநாடு பட்டம்(வெள்ளையம்மன்) 5. 6 நாட்டு பட்டம்
6. கணேசர் பட்டம்(சேவூரார்)
7. சமயம் பட்டம்(அன்னதான சோழர்)
8. நல்லதம்பிரான்
9. பூசன் குலம்
10. பூசாரி குலம்
11. குன்னத்தூர் குலம்
12. கீரனூர் குலம்
13. பட்டி குலம்
14. ஒகாயனூரார் குலம்
15. வேட்டிகாரர் குலம்
16. அனந்த குலம்
17. சிவியூரார் குலம்
18. ராக்கி குலம்
19. கருவலூரார் குலம்
20. காசி வேலன் குலம்
21. பீமன் குலம்
22. பட்டாளியர் குலம்
23. பாசியூரார் குலம்
24. பொஞ்சி குலம்
25. ஊமத்தூரார் குலம்
26. கணக்கன் குலம்
27. சென்னி குலம்
28. செம்மாரர் குலம்
29. செந்தேவன் குலம்
30. புலி குத்தி குலம்
31. சிறு வேங்கை குலம்
32. சம்பங்கருங்காலி குலம்
33. சாமக்குளத்தார் குலம்
34. குள்ளன் குலம்
35. மாகாளி குலம்
36. பெரிய குலம்
37. அன்னூரான் குலம்
38. அல்லாம்பழனி குலம்(அன்னம்)
39. பழனியூரார் குலம்
40. செல்லங்குலம்
41. உடையாங்குலம்
42. புகழுரார் குலம்
43. பெரிய குளத்தூ் குலம்
44. சின்ன குளத்தூ் குலம்
45. ஆனந்தம் குலம்
46. முருக கூட்டம்
47. கருது காளியம்மன் குலம்
48. அறுபதாங்குடி குலம்
49. வீரக்குமாரார் குலம்
50. கட்ராயன் குலம்
51. அம்பலவாணர் குலம்
52. அந்தியூரார் குலம்
53. பொன்தேவி குலம்
54. புலவனார் பட்டம் (ராஜ குலம்)
55. நெய்காரங்கூட்டம்(சிவா கூட்டம்)
56. காரியூரார் கூட்டம்
57. பரமகாளி கூட்டம்
58. பூந்துரையான்
59. காஞ்சாங் கூட்டம்
60. கஞ்சிவேலாங்கூட்டம்
61. பச்சையன் கூட்டம்
62. தெக்குத்தி குலம்
63. மணிகட்டிசடையன் கூட்டம்
64. அண்ணமார் குலம்
65. அலங்கரான் குலம்
66. ஆண்டி குலம்
67. ஆனூரார் குலம்
68. இராசி குலம்
69. ஸ்ரீலஸ்ரீபரஞ்சோதிகுருக்கள் குலம் 70. எருமைக்காரார் குலம்
71. கன்னிமார் குலம்
72. காளமேகப்புலவர் குலம்
73. காடை குலம்
74. காஞ்சியளன் குலம்
75. குழந்தை செட்டி குலம்
76. குமுட்டிகாளி குலம்
77. கொம்மக்கோயில் குலம்
78. கொக்காணி குலம்
79. கொசப்பச்சையார் குலம்
80. கோட்டைமாரி குலம்
81. சமய முதலி குலம்
82. சிலம்பு முதலி குலம்
83. சின்னாஞ்செட்டி குலம்
84. சூரிய முதலி குலம்
85. செஞ்சி குலம்
86. தடிவீரர்
87. தாச முதலி குலம்
88. தாடிக்கொம்பர் குலம்
89. தீர்த்தமுதலி குலம்
90. தீர்த்தகிரி குலம்
91. தூங்கணார் குலம்
92. பச்சையர் குலம்
93. புள்ளிக்காரர் குலம்
94. போக்கர் குலம்
95. மணல் கொடியார் குலம்
96. தொண்டைமண்டல குலம்
97. மகிழி குலம்
98. மண்ணையர்குலம்
99. மாயன் குலம்
100. வாழ்த்துமுதலி குலம்
101. வெள்ளைசித்தர் குலம்
102. வெள்ளைமணியக்காரர் குலம்
103. வெள்ளியம்பர் குலம்
104. செம்பூத்தர் குலம்
105. ரங்கஜாலதண்டர் குலம்
106. காவா முதலி குலம்
107. கோட்டையண்ணன் குலம்
108. சொக்கநாதர் குலம்
109. கொத்துக்காரார் குலம்
110. கொத்துக்காட்டான்
111. கேரள கும்ப குலம்
112. பூண்டிபெரியதனக்காரர் குலம்
113. ஆயி குலம்
114. தரகன் குலம்
115.வீரவேல் குலம்
116.கருப்பூரார் குலம்
117.ஆராங்குலம்
118.வடகுத்தியார் குலம்
119.சேத்து கட்டி குலம்
120.நவகற்கள் அணிந்தற் குலம்

இப்படி  குல பட்டபெயர்கள் நம் இனத்திற்கு உண்டு

ஹேரம், ஜனானா, மீனா பஜார் – பெண்கள்அடிமையாக்குதல், விற்றல், வாங்கல் – குஷியில்பிறக்கும் கவிதைகள், சித்திரங்கள் மற்றும் இறையியல்!

ஹேரம்ஜனானாமீனா பஜார்  பெண்கள்அடிமையாக்குதல்விற்றல்வாங்கல்  குஷியில்பிறக்கும் கவிதைகள்சித்திரங்கள் மற்றும் இறையியல்!
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (12)].
Akbar, Pancha mahal, harem
Akbar, Pancha mahal, harem
ஹேரத்தில் இருக்கும் பெண்கள் நடத்தும் மீனாபஜார்: “குஷ் ரோஜ்” / மகிழ்ச்சியான தினம் என்று முகலாயர் காலத்தில் “மீனா பஜார்” என்று சந்தை நடத்தப்பட்டது. இதில் அரசவை அதிகாரிகளின் மனைவி-மகள்கள்-சகோதரிகள், ராஜபுதன மகளிர்-பெண்கள், ஹேரத்தில் இருக்கும் பெண்கள் பெண்கள் மட்டும் தான் கலந்துகொள்ள முடியும். இவர்கள் அச்சந்தையில் கடைகள் வைத்து, பொருட்களை விற்பர். ஆனால், சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். அவர்கள் அப்பெண்களிடமிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை தேந்தெடுத்து மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். தம்மிடத்தில் அடிமையாக, காமக்கிழத்திகளாக ஹேரத்தில் இருக்கும் பெண்கள் விற்கும் பொருட்கள் என்றால், அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் எது, அவற்றை அவர்கள் விற்கமுடியும் என்று வியப்பு ஏற்படுகிறது. “ராஜபுதன மகளிர்-பெண்கள்” மட்டும் தான் கலந்துகொள்ள முடியும் என்றால் என்ன அர்த்தம்? மகிழ்ச்சியாக, திருப்தியாக, ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜபுதன பெண்கள் இங்கு எதற்காக வரவேண்டும்? அவர்கள் எப்படி அவ்வாறு தனியாக வந்து கடைகள் வைத்து, முகலாயர்களுக்கு விற்பனை செய்யும் அளவிற்கு தாழ்ந்து விட்டனரா அல்லது தள்ளப்பட்டனரா என்று யோசிக்க வேண்டும். எனவே ஒன்று அவர்களும் கடத்திக் கொண்டு வரப்பட்ட அல்லது போலித் திருமணங்கள் செய்து வலுக்கட்டாயமாகக் கூட்டி வரப்பட்ட பெண்களே என்று அறிந்து கொள்ளலாம். இங்கு உருவகமாகக் கூறப்படும் இப்பஜாரில், புதியதாக வரும் பெண்களை சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் வாங்குவர்.  அதாவது, புதியதாகக் கொண்டு வரப்பட்ட மெண்கள் விற்கப்படுவர். ஹேரத்தில் இருக்கும் பெண்கள் மாற்றிவிடுவர் என்பதும் அறிந்ததே. அதாவது, மீனாபஜார் என்பது, பெண்கள் வாங்கி-விற்கப்படும் பஜார் என்பது மறைமுகமாகக் கூறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இவ்வாறு கிடைத்த பெண்கள் சித்திர, வரையும் ஓவியர்களுக்கும் மாதிரிகளாகக் கிடைத்ததில் வியப்பில்லை. இதனால், கொக்கோக நூல்கள் உருவாகியதில் வியப்பில்லை.
Perfumed Garden, Sheikh Neffzaoui
Perfumed Garden, Sheikh Neffzaoui
கொக்கோக கவிதைகள் புனைந்ததுசெயற்குறைக்குமருந்துகளை நாடியது: முகலாயர் காலத்தில் செக்ஸை ஊக்குவிக்க, காக்க, பலமுறைகள் கையாளப்பட்டன. மதரீதியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுன்னத் என்ற உறுப்பின் நுனியறுப்பு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இது உடலுறவு கொள்ளும் போது, நேரத்தை நீட்டிக்க உதவும் என்று அவர்களே ஒப்புக்கொண்டு செய்யப்படும் முறையாகும். இதனால், அரசில், ஆட்சியில் உள்ளவர்களுக்கு, எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு திருப்தி படுத்த பெண்கள் தேவைப்பட்டனர். இதனால், அடிமைவியாபாரம் மூலம் பலநாட்டு பெண்ணடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, வாங்கப்பட்டு ஹேரங்களில் சேர்க்கப்பட்டனர். இதில் தான் போர்ச்சுகீசியர்களும், அரேபிய முகமதியர்-முகலாயர்கள் கூட்டாக செயல்பட்டனர்[1].
Persian sex poetry illustrated.2
Persian sex poetry illustrated.2
சிருங்கார மஞ்சரி, லஜாத் அல்-நிஸ்ஸா (பெண்களின் இன்பம்), தத்கீரட் அல்-ஷாவத் (காமத்தைத் தூண்டும் மருந்துகள்), நவ்ரஸ் ஷாஹி (உடலுறவை நீட்டிக்க உபயோகப்படுத்தப்படும் முறைகள்), போன்ற கொக்கோக நூல்கள் எழுதப்பட்டன. உடலுறவு இன்பத்தை நீட்டிக்க மருந்துகள் முதலியவற்றைப் பற்றிய நூல்களும், தயாரிப்புகளும் பெருகின. இதனுடன் “ரசவாதமும்” சேர்ந்து கொண்டது. தங்கம் இல்லாத உலோகத்தை தங்கமாக மாற்றுவது மட்டுமில்லாமல், உடலின் இளமையை மீட்டுப்பெறக்கூடிய மருந்தையும் ரசவாதத்தில் வைக்கப்பட்டது. இதிலும் சூபிக்களின் பங்கு அதிகமாக இருந்தது. இவ்வளவு விவகாரங்கள் இருந்ததினால், தப்தர் அர்பப்-இ-நிஸாத் (இன்பங்கள் துய்க்க தலைமை அலுவலகம்) என்ற பிரிவு இவற்றை கவனித்து, நிர்வகித்து வந்தது[2]. ஆக எல்லாமே நிர்வாகத்துடன், முறையாகத்தான் செயல்பட்டு வந்தன.
Persian sex poetry illustrated
Persian sex poetry illustrated
முகலாயத் தோட்டங்களும்சல்லாபங்களும்: முகலாயத் தோட்டங்களும் உண்மையில் காமக்களியாட்டங்களுக்கு உபயோகப்படுத்தப் பட்டன. பாதுஷா / சுல்தான் தனக்குப் பிடித்த பெண்களுடன் சந்தோஷமாக சல்லாபம் செய்ய அங்கு செல்வான்; குளங்களில் ஜலக்கிரீடையில் ஈடுபடுவான்; ஆடுவாநாட்டம் போடுவான். அப்பொழுது மற்றவர்கள் செல்லக்கூடாது. இங்குதான் அவரவர்கள் பல பெண்களுடன் சரசலீலைகளில் ஈடுபட்டார்கள். எரிக் பெபின்ஸ்கி[3] என்பவர் முகலாய தோட்டங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “இந்து கொக்கோக கவிதைகள்” பற்றிக் குறிப்பிடுகின்றார், “நான் என்னுடைய இரக்கத்தை அதற்கு [“இந்து கொக்கோக கவிதைகள்”] எந்தவித வெட்கமும் இல்லாமல் தெரிவிக்கிறேன் மற்றும் என்னுடைய இன்பங்களை, இங்கு பெர்லினில் கிடந்து சோர்வடைவதை விட, தாமர்லின் / தைமூர் அல்லது முகலாயர்களின் அரசவைகளில் இருந்து முழுமையாக அனுபவித்து இருப்பேன்”, என்கிறார். “இந்து கொக்கோக கவிதைகள்” என்று மேலடைப்புக் குறிகளில் குறிப்பிடுகின்றார்!
Persian sex poetry illustrated.3
Persian sex poetry illustrated.3
இங்கு “இந்து கொக்கோக கவிதைகள்” என்பது, முகமதியர்கள் எழுதிய கொக்கோகக்-காமநூல்கள் ஆகும். மேலு, முகலாய அரசர்கள் செய்த காமலீலைகள், சசங்களை கிருஷ்ணர் மீது ஏற்றிச் சொல்ல ஆரம்பித்தனர். அதற்கேற்றபடி ஓவியங்களும் தயாரிக்கப்பட்டன. இதனால் தான், இக்காலத்தில், அத்தகைய கவிதைகளைப் படிக்கும் போது, சித்திரங்களைப் படிக்கும் போதும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். பாகவத புராணத்தில், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அத்தகைய இடைச்செருகல்கள் செய்தனர். முகலாயர் காலத்தில் மறுபடியும் எடுத்தாளப்பட்டு, ஓவியங்கள் மூலம் தோஷிக்கப்பட்டன. ஆனால், இக்காலத்து நாத்திகர்க மற்றும் இந்து-விரோத சக்திகள் இவற்றை உபயோகித்து, பொய் சரித்திரத்தை உண்டாக்குகின்றன. மற்றவர்களை திசைத்திருப்புகின்றன. ஆகவே இந்துக்கள், இதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள வேன்டும். அவர்களின் சதியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
Mughal zenana, harem etc
Mughal zenana, harem etc
ராதாகிருஷ்ண பக்தியைக் கொச்சைப் படுத்தியதுகவிதைகள் புனைந்ததுசித்திரங்கள் வரைந்தது: முகலாயர் காலத்தில் வேண்டுமென்றே, “ராதா-கிருஷ்ண” பக்தி இணைப்புகள் கொச்சைப்படுத்தப் பட்டு, கொக்கோக கவிதைகள் புனையப்பட்டன[4].  அவற்றில் ஆபாசமான படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டன. இன்னொரு பக்கம், ராதாவைப் பெரிய தெய்மாக்க இந்துக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இதில் அவர்கள் ஈடுபட்டிருக்க முடியாது. அதனால், முகமதியர்களே அத்தகைய, “இந்து கொக்கோக கவிதைகளை” உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் சூபிக்களின் நூல்களில் காணப்படுகின்றன, ஏனெனில், அவர்கள் இதில் பெருமளவில் ஈடுபட்டனர். அலி முட்டாகியின் சீடன் ஒருவன் பிருந்தாவன் முதலிய இடங்களுக்குச் சென்று வந்தது விமர்சிக்கப்படுகிறது. ஷா ஹுஸைன் போன்ற சூபிக்கள் “ஹீர்-ராஞ்சா” என்று “ராதா-கிருஷ்ண” ஜோடி மாற்றப்பட்டு, தமதிச்சைகேற்றபடி, கொக்கோகத்தை அதில் ஏற்றிக்கொண்டனர். கிருஷ்ணரின் காமக்களியாட்டமான “ராஸலீலையை”, குரானில் காணப்படும் ஒரு உதாரணத்துடன் ஒப்பிட்டும், இது ஊக்குவிக்கப்பட்டது[5]. இது அக்பரின் “தீன்-இலாஹி”யைப்போன்றது. பிறகு இவை சித்திரங்களாக வரையப்பட்டன, அந்நூல்களில் மற்றும் கொக்கோக நூல்களில் சேர்க்கப்பட்டன. மொஹம்மது ஜாய்ஷி [मलिक मोहम्मद जायसी) (1477–1542)] என்ற சூபி கவிஞன், கவிதைகளில் ராணி பத்மினிய அழகின் சின்னமாக உதாரணமாக உருவகமாக உபயோகித்தான். பத்மினி உருவகமாக பயன்படுத்தப்பட்டாள் என்பது குறிப்பிடப்பட்டது. அவ்வாறே “ராதா-கிருஷ்ண” பக்தியும் கொச்சைப்படுத்தப்பட்டது. அத்தகைய சித்திரங்கள் இன்றும் வரையப்பட்டு விற்கப்படுகின்றன.
Persian sex poetry illustrated.4
Persian sex poetry illustrated.4
முகமதியராஜபுதன திருமண பந்தங்கள் ஏன் பரஸ்பரரீதியில் இல்லை?: பாரசீக, முகலாயச் சித்திரங்கள் என்பவற்றில், எப்பொழுதுமே, ஒரு முகமதிய சுல்தான் ஒரு இந்து பெண்மணியுடன் ஏகாந்தமாக, அரைகுறை உடைகளுடன், நிர்வாணமாகவும், ஏன் உடலுறவு கொள்வது போன்ற காணப்படுகின்றன. “காமசூத்ரா” புத்தகத்தின் அட்டைகூட அவ்வாறுதான் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு சித்தரிக்கப்படவேண்டும் என்று பார்ப்பவர்களுக்கு கேள்வி எழும். ஒரு இந்து அரசனுடன், ஒரு முகமதிய பெண் இருப்பது போன்ற சித்திரங்கள் ஏன் இல்லை என்றும் கேட்கலாம். மேலும், அக்பர் பல ராஜபுதன பெண்களை திருமணம் செய்து கொண்டபோது, ஏன் அக்பரது சகோதரி, மகள் அல்லது வேறெந்த உறவு பெண்களும், ராஜபுதன அரசர்களுக்கு பதிலுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பரஸ்பரம் இல்லாமல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, உறவுகள் இப்படி ஒருவழியாகத்தான் உண்டாக்க, சிறப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதாவது, அக்பரது ராஜபுதன பெண்களுடான திருமணங்கள் பரஸ்பர ரீதியில் இல்லாததனால், அவை வற்புறுத்தி செய்து கொண்ட கல்யாணங்களாக இருக்க வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படியென்றால், அவை போலித்திருமணங்கள் என்றாகின்றன, ஆனால், இஸ்லாம் ரீதியில் “மூத்தா” கல்யாணம் என்றாகிறது. அதனால்தான், அவர்கள் அனுபவிக்கப்பட்டு, ஹேரத்தில் தள்ளப்பட்ட்டனர்.
வேதபிரகாஷ்

அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள் – ஆண்–பெண் உடலுறவுகள், குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்

அரேபியபாரசீகதுருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள் – ஆண்பெண் உடலுறவுகள்குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (16)].
எடுத்தாளப்பட்ட நூல்கள்
எடுத்தாளப்பட்ட நூல்கள்
ஆண்பெண் உடலுறவுகள்குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்: ஆண்-பெண் உடலுறவுகள் மிகச்சாதாரணமானது, ஆனால், இஸ்லாத்தில் “ஒரு ஆண், ஒரு பெண்” என்ற பந்தம், உடலுறவு, குடும்பம் போன்றவை இல்லாததாலும், பலதார குடும்பம், விவாகரத்து, பெண்களும் பல ஆண்களை திருமணம் செய்து கொள்வது போன்ற பழக்க-வழக்ககளினாலும் உறவுகள் குழப்பமாகின. போர்களில் ஆண்கள் இறந்து விடுவதால், அவர்களது மனைவிகள் தனியாகி விடுவதால், அவர்களுக்கு உதவும் வகையில் தான் “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமாக்கப் பட்டது என்று இஸ்லாம் முல்லாக்கள், காஜிக்கள் மற்றும் உலேமாக்கள் கூறுகின்றனர்.  திருமணம் பற்றி இஸ்லாமியப் பிரிவுகள் தத்தமக்கு ஏற்றமுறையில் சட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்று சட்டரீதியில் இருந்தாலும், அவர்களை எத்தனை காலத்திற்கு மனைவியாக வைத்திருக்கலாம் என்று உறுதியாகச் சொல்லப்படவில்லை. ஒருவன் ஒரே மனைவியை வைத்துக் கொண்டிருக்கலாம், அல்லது விவாகரத்து செய்து, தொடர்ந்து திருமணம் செய்து கொள்வது, விவாகரத்து செய்வது என்றமுறையைப் பின்பற்றினால், ஆண்-பெண் உறவுமுறைகள் சீரழியும் என்பதுதான் உண்மை. உடல் ரீதியால் மட்டுமல்லாது மனோதத்துவ ரீதியிலும் சிக்கல்கள், குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மையாகிறது. “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை, “தலாக், தலாக், தலாக்” என்ற விவாகரத்து, மூத்தா திருமணங்கள், ஹேரங்கள் முதலியன, கொக்கோகங்களுக்கு வித்திட்டு, சிற்றின்ப இலக்கியங்கள் பெருகின. “மது-மாது” என்ற கிளர்ச்சிகொண்ட எண்ணங்கள் கவிதைகளாகி, மக்களை சதாய்த்தது.
Morocco Sex shop
Morocco Sex shop
உடலுறவு கொள்ள மற்றும் நீட்டிக்க கையாளும் முறைகள்.
Persian erotic literature
Persian erotic literature
பாரசீக மற்றும் இதர மொழிகளில் உள்ள நூல்களில் உதாரணத்திற்கு காட்டப்பட்ட சித்திரங்களில் சில.
ope-arab_couple_smoking_bhang_the_spirit_of_cannabis
ope-arab_couple_smoking_bhang_the_spirit_of_cannabis
உக்கா மூலம் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் இருந்தது.
Arab Erotology books - Perfumed Garden
Arab Erotology books – Perfumed Garden
அரேபியபாரசீகதுருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள்: அஹமது அல்-திபாஸி [Ahmad al-Tifashi (1184-1253 CE)], அஹமத் அல்-பலிதா [Ahamad al-Falitha], அப்தல் வஹாப் இபின் சஹ்நுன் [Abdal Wahab Ibn Sahnun (973-1031 CE)], அப்தல் ரஹ்மான் அல்-ஷன்ஜாரி [Addal Rahman al-Shanzari], அஹ்மத் அல்-திஜானி [Ahamad al-Tijani], அப்தல் ஸ்லாம் அல்-லகானி [Abdal Salam al-Laqani] முதலியோரின் நூல்கள் செக்ஸ், பாலியல் பற்றிய விவக்கரங்களைப் பற்றி விவரிக்கின்றன. அவற்றில் மொஹம்மது இபின் மொஹம்மது அல்-நப்ஜாவியின் (Muhammad ibn Muhammad al-Nafzawi) உடலின்பத்திற்கான சுகந்தமான தோட்டம் (الروض العاطر في نزهة الخاطر‎ Al-rawḍ al-ʿāṭir fī nuzhaẗ al-ḫāṭir = The Perfumed Garden) என்ற கொக்கோகப் புத்தகம் அரேபிய வட்டாரத்தில், மொஹம்மதிய சமூகங்களில் மிகவும் பிரசித்தியானது[1]. அது “அரேபிய செக்ஸ் கையேடு” என்றெல்லாம் புகழப்படுகிறது. அதிலுள்ள அத்தியாயங்களின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன[2]:
Perfumed Garden, Sheikh Neffzaoui
Perfumed Garden, Sheikh Neffzaoui
  1. ஆணின் போற்றக்கூடிய தன்மைப் பற்றியது [Chapter 1: Concerning Praiseworthy Men].
  2. போற்றக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 2: Concerning Women Who Deserve To Be Praised]
  3. வெறுக்கக்கூடிய ஆண்களைப் பற்றியது [Chapter 3: About Men Who Are To Be Held in Contempt]
  4. வெறுக்கக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 4: About Women Who Are To Be Held in Contempt]
  5. வம்சவிருத்திப் பற்றியது [Chapter 5: Relating to the Act of Generation]
  6. உடலுறவு கொள்வதற்கான வசதியான நிலைமை [Chapter 6: Concerning Everything That Is Favourable to the Act of Coition]
    The Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology - 14th Century
    The Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology – 14th Century
  7. வம்சவிருத்தியை பாதிக்கக் கூடிய இசயங்கள் [Chapter 7: Of Matters Which Are Injurious in the Act of Generation]
  8. ஆண்குறியைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 8: The Sundry Names Given to the Sexual Parts of Man]
  9. பெண்களின் பாலியல் சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 9: Sundry Names Given to the Sexual Organs of Women]
  10. மிருகங்ளின் வம்சவிருத்தி சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 10: Concerning the Organs of Generation of animals]
  11. பெண்களின் ஏமாற்றும் மற்றும் மோசடி செய்யும் குணங்கள் [Chapter 11: On the Deceits and Treacheries of Women]
  12. ஆண்கள் மற்றும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உபயோகரமான விசயங்கள் [Chapter 12: Concerning Sundry Observations Useful to Know for Men and Women]
  13. வம்சவிருத்திக்காக செய்யும் செயல்களில் இன்பம் பெறுவதற்கான காரணங்களைப் பற்றியது [Chapter 13: Concerning the Causes of Enjoyment in the Act of Generation]
    Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology - 14th Century- woman depicted Hindu
    Perfumed Garden of the Cheikh Nefzaoui- A Manual of Arabian Erotology – 14th Century- woman depicted Hindu
  14. கர்ப்பம் தரிக்க முடியாத பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது [Chapter 14: Description of the Uterus of Sterile Women, and Treatment of the Same].
  15. ஆண்களுக்கு ஆண்மையற்ற தன்மைக்கான காரணங்களை அறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது [Chapter 15: Concerning the Causes of Impotence in Men]
  16. ஆண்மையற்ற தன்மை மற்றும் பெண்மையற்ற தன்மை குணப்படுத்துவது, நீக்குவது [Chapter 16: Undoing of Aiguillettes (Impotence for a Time)]
  17. உறுப்புகளை பெரிதாக்குவது மற்றும் அழகாக்குவது பற்றிய பரிந்துறைகள் [Chapter 17: Prescriptions for Increasing the Dimensions of Small Members and for Making Them Splendid]
  18. கை-கால் மடிப்புகளில் வரும் துர்நாற்றம் மற்றும் உடலுறவுக்கு முன்னும், பின்பும் ஏற்படும் நாற்றத்தைப் போக்கும் முறைகள் [Chapter 18: Of Things that Take Away the Bad Smell from the Armpit and Sexual Parts of Women and Contract the Latter]
  19. கர்ப்பத்திற்கான விதிமுறைகள் [Chapter 19: Instructions with Regard to Pregnancy]
  20. இந்நூலின் முடிவுரை [Chapter 20: Forming the Conclusion of This Work]
    மற்றும் பின்னிணைப்பு [Appendix]
12ம் நூற்றாண்டில் அத்தகைய பிரச்சினைகள் எல்லாமே அலசப்பட்டுள்ளன எனும்போது, அக்காலத்தில் அவற்றிற்குண்டான நிலைகள் ஏற்பட்டிருந்தன என்றாகிறது. அத்தகைய பாலியல் பிரச்சினைகள், அசௌகரியங்கள், நோய்கள் ஏற்பட்டிருந்து என்றால்,
பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டப் பிரச்சினைகள்: இஸ்லாம் பரவிய நாடுகளில் எல்லாம், இத்தகைய அமைப்புகளைப் பார்ப்பதால், இவையெல்லாமே அவர்களது குணாதிசயங்களாகத் தெரிகின்றன. ஆண்கள்-பெண்கள் உறவுகள், குடும்பங்கள், போர்களால், மதச்சண்டைகளால், அடிமை வியாபாரத்தினால் சீரழிந்தன.
  1. பெண்களைத் தூக்கிவருதல், கடத்தி வருதல், அடிமைகளாக வாங்குதல்-விற்றல்.
  2. ஹேரத்தை உருவாக்கல் – தனியான கட்டிடம், காவல் முதலியன.
  3. உடலுறவுகள், உடலுறவுகளை நீட்டித்தல், அதற்கான மருந்துகள்.
  4. ஊக்குவிக்க கவிதைகள் பாடுதல், இசை-நடனம் ஏற்பாடு செய்தல்.
  5. கவிஞர்கள், நடன மாதருடன் உறவு கொள்வது.
  6. ஓவியக்காரர்கள், இத்தகைய கொக்கோகக் காட்சிகளை சித்திரங்களில் வடித்தல்.
  7. ஓவியங்களுக்காக, சித்திரக்காரர்கள் உடலுறவுகளைப் பார்ப்பது மற்றும் மாதிரிகளாக பெண்களைப் பயன்படுத்துக் கொண்டது. அப்பெண்களிடம், ஓவியக்காரர்கள் உறவு கொண்டது.
  8. ஆண்-பெண் உறவுகள் சீரழிந்ததால் விபச்சாரம் பெருகுதல்.
  9. உடலுறவுகள், கர்ப்பமாதல், கர்ப்பத்தை அழிப்பது, போன்றவற்றில் ஈடுபடல்.
  10. ஹேரத்தின் பாதுகாப்பு – அலிகளை பாதுகாவலர்களாக வைப்பது, அவர்களைக் கண்டுபிடிப்பது, உருவாக்குவது.
  11. குழைந்தைகள் பிறத்தல், அவர்களை வளர்ததல், ஆவண செய்தல்.
  12. உறவுமுறைகள் அறியாத, பந்தபாசங்கள் அறியாத குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆதல், மனோரீதியில் குரூரக்குற்றவாளிகளாக, கொடுங்கோலர்களாக மாறுதல்.
  13. இவையெல்லாம் காமச்சங்கிலிகளாக, கொக்கோக சுழற்சிகளாக, உடலுறவு வட்டங்களாக, பின்னிப்பிணைந்துள்ளதால், சிக்கிக்கொண்டு தொடர்ந்து நடந்து வந்தன.
இவ்வாறு இஸ்லாம் பரவிய நாடுகளில், இத்தகைய மாதிரிகள், அமைப்புகள், சமூக பிறழ்சிகள், பழக்க-வழக்கக்கள் பரவின, காணப்பட்டன[3].
வேதபிரகாஷ்