சனி, 17 ஜூன், 2017

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் .ஜூன் 17.06.1911.


ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் .ஜூன் 17.06.1911.

ஜூலை /09/14 :பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.
அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.
அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது.
ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.
அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று? பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.
வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம். ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான், ஆஷ். அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி, வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து. அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது.
மணியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து ஆஷ் துரையை சுட்டுக் கொன்றனர். அப்போது வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் (பிள்ளைமார்கள்) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். குற்றம் சாட்டப்பட்ட டி.என்.சிதம்பரம், முத்துக்குமாரசாமி, சாவடி அருணாச்சலம், அழகப்பன் ஆகியோர் தென்காசி, செங்கோட்டையைச் சேர்ந்த வெள்ளாளர்கள். இதுவே ஆஷ் துரையின் மீதான வெறுப்புக்கு காரணம் சாதி வெறிதான் என்பதை தெள்ள தெளிவாக புரிந்து கொள்ளளாம்.

வரலாற்றை அறியாத கூட்டம்
வரலாறு படைக்க முடியாது -
இதை படித்து விட்டு விரும்பினால் ஷேர்
செய்யுங்கள்
''குற்றால அருவியில் குறிப்பிட்ட
ஒரு குலத்தவரே குளிக்க முடியும்,
ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க
கூடாது என்றிருந்த
ஜாதி வெறியை உடைத்து அனைவரும்
குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
ஆஷ்.''என்பது நம்மில்
எத்தணை பேருக்கு தெரியும்?
இது போன்ற சீர்திருத்த
நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய
கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன்
வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,
தகவல் உதவி - பரிமள ராசன்
ஆஷ் துரை மாலை நேரத்தில்
தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர்
உடன் நடைபயிற்சி போகிறார்.
நடந்து கொண்டிருந்தவர் காதில்
ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த
திசை நோக்கினார் ஆஷ் துரை.
அங்கு போவதற்காய்
பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த ராவுத்தர்
ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்"
என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய
துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின்
குடிசை என்றும் நீங்கள்
அங்கு போகக்கூடாது என்றும்
சொல்லுகிறார். ஆஷ் துரை,
ராவுத்தரை பார்த்து நீ போய்
பார்த்து வா என்றார். சேரிக்குள் போன
முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்
" மொத பிரசவம் துரை சின்ன
பொண்ணு ரெண்டுநாள
கத்திட்டு இருக்காளாம்,
பிள்ளை மாறிக்கிடக்காம்"
எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு
அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க ,
அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க
அய்யா பின்ன
எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார்
முத்தா ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த
திருமதி.ஆஷ்
துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
மருத்துவமனை கொண்டு சென்றால்
ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம்
என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள்
சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார்
துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின்
மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம்
தாண்டிய பொழுது துரையின்
வண்டியொட்டி எனத்தெரிந்த
ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன
விடயம்
என்வென்று சொல்லி ஒரு குடியானவனின்
வீட்டிலிருந்த
மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த
வழியாய்
வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான்
சென்றாகவேண்டும். சரியாய்
அக்கிரஹாரத்துக்குள்
மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும்
வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள்
வழிமறித்து விடமறுக்கிறார்கள்.
வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர்
நீக்கம் செய்துவிடுவோம் என
எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர
சொன்னது துரையும் அவரின்
மனைவியும்தான் என்று விபரம் சொன்ன
பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த
விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார்
ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள்,
தனது வண்டியில் அந்த
பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
குதிரையோட்டியின்
பக்கதிலேறி அமர்ந்து கொண்டார்.
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட
பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த
அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய்
இருந்தாலும் அனுமதிக்கமுடியா
து"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்த
ார் மறுக்கவே வண்டியைக்கிளப்ப
ு என்று உத்தரவிடுகிறார். மீறி மறித்த
பார்ப்புகளின் முதுகுத்தோல்
துரை அவர்களின் குதிரைசவுக்கால்
புண்ணாக்கபடுகிறது. அந்த பெண்
மருத்துவமனைக்கு
கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய
கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும்
இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன்.
அப்போது எடுத்த சபதம்தான்
வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
சனாதான காவலனாக , மனித உயிரைவிட
அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட
வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.
இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official
Notes எனும் குறிப்புகளில்
அரசு ஆவனக்காப்பகங்களில்
தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக