வெள்ளி, 22 செப்டம்பர், 2017

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்...



தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்...

*இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.*

*ஆம், இதுதான்*

*”நாவலன் தீவு”*
*என்று அழைக்கப்பட்ட*
*“குமரிப் பெருங்கண்டம்”.*

*கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்!*

*இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான்.!*

*“குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு*

*என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன!*

*பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!*

*குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன!*

*தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.*

*உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.*

*நக்கீரர்*
*“இறையனார் அகப்பொருள்”*
*என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.*

*தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது.*

*இதில்,*

*“பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.*

*இதில்*

*அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.*

*இரண்டாம் தமிழ்ச் சங்கம்*

*"கபாடபுரம்" நகரத்தில்கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.*

*இதில்*

*"அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.*

*இதில்*

*"தொல்காப்பியம்"*
*மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.*

*மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கிகி.ம1850-ல் 449- புலவர்களுடன் நடத்தப்பட்டது.*

*இதில்*

*"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.*

*வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000-ம் வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20000-ம் வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்...*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக