புதன், 1 நவம்பர், 2017

கடை வள்ளல் அதியமான் ஆண்ட தகடூர்(எ) தருமபுரி மாவட்டம்

கடை வள்ளல்  அதியமான் ஆண்ட தகடூர்(எ) தருமபுரி மாவட்டம்

தருமபுரி உதயமான நாள்: (அக்டோபர்-02), தருமபுரி மாவட்டத்தின் 51-வது பிறந்த நாள்.

*தருமபுரி தோற்றம்:*

1804 -ல் சேலம், ஒருமாவட்ட தலைமைச் சிறப்பை பெற்றிருந்தது, பல காரணங்களால் சேலமே மாவட்டத் தலைநகராக சிறப்புற்றது. தருமபுரி கிருஷ்ணகிரி, நாமக்கல் எல்லாமே சேலம் மாவட்டத்திற்குள் இருந்தன.
சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்தியாவிலேயே பெரிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்தை தென் சேலம், வட சேலம் என இரு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி இருக்கின்றனர்.

வட சேலம் மாவட்டம் அமையும் போது தலைநகரம் எது..? தருமபுரியா..? கிருஷ்ணகிரியா..? ஒசுரா..?

1962 ல் நடைபெற்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சுயேட்சியாக நின்று வெற்றிபெற்றவர் காரிமங்கலம் R. S. வீரப்ப செட்டியார். வட சேலம் மாவட்டத்திற்கு அதாவது புதிய மாவட்டத்திற்கு தருமபுரியே தலைநகராக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். ஆனால் தனது பதவி காலத்திலேயே இறந்து விட்டதால் 1965-ல் தருமபுரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

இடைத்தேர்தலில் D.N. வடிவேலு கவுண்டர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். R.S. வீரப்ப செட்டியார் எடுத்த முயற்சி வீணாகி விடக்கூடாதல்லவா, ஆதலால் புதியதாக உருவாகும் மாவட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் என்றும் இம்மாவட்டத்தின் தலைநகரம் தருமபுரி தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

அப்போது முதலவராக இருந்த திரு. பக்தவச்சலம் அவர்கள் சேலம் மாவட்டத்தை வட மற்றும் தென் சேலம் என்றே பிரிக்கவேண்டும் என்று இருந்துள்ளார். ஆனால் D.N. வடிவேலு கவுண்டர் அவர்களின் விடா முயற்சியால் புதியதாக உருவான மாவட்டத்திற்கு *"தருமபுரி மாவட்டம்"* என்றும் தருமபுரி மாவட்டத்தின் தலைநகர் *"தருமபுரி"* என்றும் காந்தியடிகள் பிறந்த தினமான 02.10.1965 அன்று அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு தொன்மை வரலாற்று பெருமைகளால் உயர்ந்து நிற்கும் தருமபுரி மாவட்டமாக 02.10.1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
*எல்லைகள்:*
வடக்கு-திருவண்ணாமலை
தெற்கு-சேலம்
கிழக்கு-சேலம்
மேற்கு-கிருஷ்ணகிரி
*சிறப்பு:-*
நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக உயரமான மலைகள் சூழ்ந்த மாவட்டம்..
*மக்கள் தொகை:*
 *மொத்தம்:*1506843
*ஆண்கள்:*774303
*பெண்கள்:*732540
*வரலாற்று இடங்கள்*
1.அதியமான் கோட்டை
2.தீர்த்தமலை
3.போடுவராமர் கோவில்
4.குள்ளர் குகைகள்
மற்றும் பல
*அனைகள்:*
1.ஈச்சம்பாடி அனை
2.வானியாறு அனை
3.பஞ்சப்பள்ளி அனை
4.வரட்டாறு அனை
*கிராம ஊராட்சிகள்-251*
*வட்டங்கள்*
1.தருமபுரி
2.பாலக்கோடு
3.பாப்பிரெட்டிப்பட்டி
4.பென்னாகரம்
5.அரூர்
*சட்டமன்ற தொகுதிகள்*
1.தருமபுரி
2.பாலக்கோடு
3.பாப்பிரெட்டிப்பட்டி
4.அரூர்(தனி)
5.பென்னாகரம்
*நாடாளுமன்ற தொகுதி*
1.தருமபுரி
*நகராட்சி*
1.தருமபுரி
*பேரூராட்சிகள்*
1.மாரண்டஹள்ளி
2.காரிமங்கலம்
3.பாப்பிரெட்டிப்பட்டி
4.அரூர்
5.பி.மல்லாபுரம்
6.கம்பைநல்லூர்
7.பாலக்கோடு
8.பாப்பாரப்பட்டி
9.பென்னாகரம்
10.கடத்தூர்
11.அலேதர்மபுரி சென்ஸ் டவுன்
12.இலக்கியம்பட்டி சென்ஸ் டவுன்
*மாவட்ட ஆட்சியர்:*
*கே.விவேகானந்தன்*
*மாவட்ட காவல் கன்கானிப்பாளர்*திரு
*பன்டிகங்காதர்*
புகார் தெரிவிக்க:
1077 *மாவட்ட ஆட்சியர் அலுவலகம்*
*குழந்தை திருமணத்தை தடுக்க*
1098
*வருவாய் கோட்டங்கள்:*
1.தர்மபுரி
2.அரூர்
சமூக வாரியான மக்கள் தொகை
1.வன்னியர் குல ஷத்திரியர் இந்த மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை.
2.மலையாளி பழங்குடியினர் இந்த மாவட்டத்தில் இரண்டாவது அதிகமான மக்கள் தொகை
3.ஆதிதிராவிடர்(எஸ்.சி) இன மக்கள் இந்த மாவட்டத்தில் மூன்றாவது அதிகமான மக்கள் தொகை
4.கொங்கு வேளாளர் சமூகம் இந்த மாவட்டத்தில் 4வது அதிகமான மக்கள் தொகையாகும்.
5.இது தவிர
1.போயர்
2.அருந்ததியர்
3.தேவர் சமூகம்
4.குறவன் சமூகம்
உள்ளிட்டவர்கள் பரவலாக வசித்து வருகிறார்கள். தமிழகத்தில் மற்ற மாவட்டத்தில் பரவலாக உள்ள கோனார் பள்ளர் போன்ற சமூகத்தினர் இங்கு இல்லை.
*பிற மதத்தினர்*
1.முஸ்லீம்-2 சதவீதம்
2.கிருஷ்துவர்கள்-1சதவீதம்
*மற்றவர்கள் இல்லை.*
*சட்டமன்ற உறுப்பினர்கள்*
1.தர்மபுரி-தடங்கம் பெ.சுப்ரமணி(தி.முக)
2.பாலக்கோடு-கே.பி.அன்பழகன்(அ.தி.முக)
3.அரூர்-ஆர்.ஆர்.முருகன்(அ.தி.முக)
4.பாப்பிரெட்டிப்பட்டி-பி.பழனியப்பன்(அ.தி.முக)
பென்னாகரம்-இன்பசேகரன்(திமுக)
*சட்டமன்ற தொகுதியில் சமூகத்தின் பலம்*
1.தர்மபுரி-வன்னியர்
2.பாலக்கோடு-வன்னியர்
3.அரூர்-ஆதிதிராவிடர்(எஸ்.சி) மற்றும் மலையாளி(எஸ்.டி)
4.பாப்பிரெட்டிப்பட்டி-வன்னியர்-ஆதிதிராவிடர் மற்றும் மலையாளி
5.பென்னாகரம்-வன்னியர்.
*நிகழ்கால துயரம்:*
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்
இளவரசன்-திவ்யா காதல் பிரச்சினை தமிழ்நாட்டையே உலுக்கியது.
வாச்சாத்தி வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் தமிழகத்தில் அனைவரும் அறிந்ததே.
*மலைக்குன்றுகள்*
1.சேர்வராயன் மலை
2.கல்ராயன் மலை
3.வத்தல்மலை
4.சித்தேரி மலை
போன்றவை குறிப்பிடத்தக்க மலைகள்.
*காட்டெருமை, முயல், மான் காட்டு ஆடு ,கரடி முள்ளம்பன்றி* ஆகிய வன விலங்குகள்..
மற்றும்
*மயில் சிட்டுக்குருவி கருங்குருவி கொக்கு கழுகு காட்டுக்கோழி* போன்ற பறவை இனங்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டம்.
*தொழில்கள்*
விவசாயம் இங்கு 90 சதவீதம் மக்கள் செய்து வருகிறார்கள்.
*கிடைக்கும் பொருட்கள்:*
1.நெல்
2.கேல்வரகு
3.மஞ்சள்
4.கம்பு
5.கொள்ளு(உளுவல்)
6.தினை
7.சாமை
8.கரும்பு
9.புலி
10.தர்ப்பூசனி
11.அவரை
12.துவரை
13.மாம்பழம்
14.பலாப்பழம்
15.வாழை
16.தேங்காய்
இவை அனைத்தும் எளிமையாக கிடைக்கும் பொருட்கள்.
*புகழ் பெற்றோர்*
1.அதியமான்
2.ஔவையார்
3.இராஜாஜி
4.சுப்பிரமணிய சிவா
*அதியமான் ஆட்சியில்தான் "கரும்பு"முதன்முதலில் பயன்படுத்தியதும் மற்ற மாவட்டங்களுக்கு அறிமுகம் செய்ததும் இம்மாவட்டம் தான்.
*திருவிழாக்கள்*
பள்ளியில்லாத ஊர்களை கூட இங்கு பார்க்கலாம் ஆனால் கோவில் இல்லாத ஊர்களை காண்பது சாத்தியமில்லை
மாரியம்மனுக்கு சித்திரை திருவிழா இங்கு புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும் ராமர் சிவன் வழிபாடும் அதிகம்.
*விளையாட்டு*
வாலிபால் விளையாட்டிற்கும் அடுத்த படியாக தான் கிரிக்கெட் விளையாட்டிற்கும் இளைஞர்கள் முக்கியத்துவம் தருவார்கள்...
*தமிழ்நாடு புகழ்*
1983ல் தப்பாட்டத்த்தில் முதலிடம் பெற்று அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர் கையால் பரிசு பெறப்பட்டது.இந்த சாதனையை யாரும் இதுவரை முறியடிக்க முடியவில்லை.
2013ல் இந்தியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சார்ந்த இராணுவ வீரர் ஷ்ரீகாந்த் என்பவர் இந்திய தாய் திருநாட்டிற்காக தங்கப்பதக்கம் பெற்று தந்துள்ளார்.
சுதந்தீர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மற்றும் தமிழகத்தின் முதல் ஆளுநர் இராஜாஜி ஆகியோர் புகழ் பெற்றவராவர்.
இவ்வளவு பெருமைகளை சுமந்து நிற்கும் *தர்மபுரி மாவட்டம்* அக்டோபர் 2ம் நாள் தனது 51வது பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சி.
*தர்மபுரி*-பெயரிலேயே தர்மத்தை கொண்டுள்ள மாவட்டம்.
*சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா*
தர்மபுரிக்காரன்கிட்ட
அன்பா பேசுனா-உயிரையும் கொடுப்பான்
அதிகமா பேசினா-உயிரையும் எடுப்பான்
பாசத்திற்கு-சிவன்
எதிர்த்தா-எமன்
தங்கச்சி பாசத்துக்கு இந்த ஊரை *தர்மபுரி*யை மிஞ்ச யாராலும் முடியாது.
மொய் வைக்க சொத்தையே அழித்து மொய் செய்யவும் தயங்க மாட்டார்கள் தருமபுரி மாவட்ட மக்கள்.
காரணம் மானம் மரியாதை இரண்டு கண்கள் இவர்களுக்கு.
*தர்மபுரி*ன்னு சொன்னாலே மற்றவனுக்கு *டர்* ஆகும்.
நானும் *தர்மபுரிக்காரன்*
நீங்க *தர்மபுரி*யா இருந்தால்
பகிருங்கள்....
எட்டுதிக்கும் கொட்டட்டும்
எமது *தர்மபுரி* புகழ் பரவட்டும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக