ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

நாம் யார்??? நம் வரலாறு என்ன???


நாம் யார்??? நம் வரலாறு என்ன???
---------------------------------------------
சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....

*        நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...

*  அப்போது,  நாடோடிகளாக, ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்...

*     நீண்ட  காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்...

*        வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்..

*     பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..

*         பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர்...பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.

*        ரிக் வேதங்களில் ,மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப் பட்டுள்ளது..

*       மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..

*           பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.

அரசவைகளில் அலோசகர்களாகஇருந்து, மறைமுகமாக ஆட்சி செய்தனர்...

*        பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினர்...

*      அப்போது, சாக்கிய குலத்தைச் சார்ந்த சித்தார்த்தன்...

*     சடங்கு,யாகம், உயிர்ப் பலி அனைத்தையும் எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..

*      புத்த மதம் உருவாகி வளரத் தொடங்கியது...

*       புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....

*                  சாம்ராட் அசோகா,கலிங்கப் போருக்குப்வபின் மனமாற்றம் அடைந்து, புத்தம் தழுவினார்..

*          பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, மூடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தார்....

*            இந்தியா, இலங்கை,ஆப்பிரிக்கா,சீனா, மங்கோலியா,ரஷ்யா,தென் கிழக்கு ஆசிய நாடுகள்வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...

*           புத்த மதத்தை அழிக்க முடியாததால், ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..

*        இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..சமணமும் செல்வாக்கோடு இருந்தது.

*            அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமன மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து,புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..

*            பிராமணர் உருவாக்கிய புத்தமதப் பிரிவிற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,

*       .  உண்மையான புத்த கொள்கைகளைப் பின்பற்றியவர்களின் பிரிவைக் குறிக்க "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.

*             ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்ற பொருளில், இகழ்ந்தனர்..

*       புத்த மதத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்...

*            மெளரிய வம்சப் பேரரசின், இறுதி மன்னன் பிராகிருதன்,இவர்,

*      புஷ்ய மித்ர சுங்கன் என்ற, ஆரிய இனப் படைத் தளபதியால், சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்....

*      புஷ்ய மித்ரன் ,சுங்க வம்சத்தை நிறுவினான்

*       அப்போது, மீண்டும் வேத மதம் எழத் தொடங்கியது...

*         இந்தக் கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..

*        புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...

*         புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில், புத்த பிக்ஷுக்களி்ன் தலைக்குப் பரிசுகள் அறிவித்து, ஒரு இனப் படு கொலையை நடத்தினான்..

*         எப்படியென்றால், புத்த பிக்குகளின் தலை, வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

*        அந்த வழக்கம்  தான்,இப்போது நாம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..

*          குப்த பேரரசு உருவான பிறகுதான் மிகுந்த எழுச்சி பெற்றது ,வேத மதம்... புத்தமும்,சமணமும் திட்டமிட்டே அழிக்கப் பட்டன.

*          அந்தக் காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..

*      ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்துக் கதைகள் எழுதப்பட்டன...

*         "சுரா" என்ற மது பானத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல/ கொள்கைகளைப் பின்பற்றி வந்த நாக பௌத்தர்கள் , அசுரர்கள் எனப்பட்டனர்...

*      அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பானத்தை அருந்தாதவர்கள் என்று பொருள்.(உங்கள்/ புரிதலுக்காக, சுத்தம்Xஅசுத்தம் என்ற எதிர்ச்சொல்லின்  பொருளைப் பாருங்கள்.)

*           நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களைக் கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..

*          இந்திய முழுமையும் வேத மதம் பரப்பப் பட்டது...

*        அரச மரத்தடியில் உள்ள புத்தர் சிலைகளை எல்லாம்,அழிக்க வேண்டும் என்பதற்காக, அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி, யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் போட்டு அழித்தனர்..

*        அது தான், தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

*           அழகான புத்த பள்ளிகளை அசிங்க படுத்த, விகார் என்றால், விகாரம் என்றும் அசிங்கமான ,அருவருப்பான என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது.

*       புத்த பிக்குகளை இகழ்வதற்காக,
அவர்களைப் பிச்சை என்று அசிங்கப்படுத்தி, பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..

*      மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..

*        வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

*           அந்தக் கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத ,பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள், புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

*      அதாவது, புத்தரின் பஞ்ச சீல கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்...

*           அவர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால் தான், பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...

*                  தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..

*           சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..

*        பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களைப் பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...

*       பிறகு ,ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...

*        இழி தொழில் செய்யப் பணித்தனர்..

*          அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு,இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல், உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

*        இதையே காரணம் காட்டித்
 தீண்ட தகாதவர்களாக, பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

*              "பஞ்சமர்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

*          1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக,இந்து மனு தர்ம சாத்திரம் தான் ,இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...

*        அதனால்தான் சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...

*         வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,

*          சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.

*       பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...

*         அதுவும் வேதம் , கிரக வானவியல்,புரோகிதம் ஜோதிடம்,புராணங்கள் போன், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படாத கல்வி/ முறைகள் இருந்ன...

*         இதைப் பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி ,பள்ளிக் கல்வி முறையை ஏற்படுத்தினார்..

*        இதற்கு, இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...

*           மேலும் , ஆங்கிலேயர்கள்  அனைவருக்கும் ஒரே வகையில் குற்றத் தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..

*       இதற்கு  முன்பு வரை, பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

*         1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது,  இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)

*         இது போல, இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...

*       பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும ,

*            உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" எனக் கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..

*         எனவே ,இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...

*            உயர் சாதி இந்துக்கள்,வருனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..

*           அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

*            அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..

*             அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்..

*                இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:--
------------------------------------------------------------

1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு.

2.       பெண்களுக்கு கல்வியுரிமை.

3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.

4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.

5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை

6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

*         ]பிறகு, மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...

ஆதார நூல்கள்:----
--------------------------

          1.  இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் ,
அழிந்தனவும்.- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா

   2.     அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.

   3.        இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

  4.     ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுல சாங்கிருத்தியாயன்.

5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.

 6.      யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.

7.        பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு  பொன்னேடுகள். வீர.சாவர்க்கர்.

8.       பாகியான்.

9.         புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.

10.     அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.

11.    இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.

12.        அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்

13.       உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக