வெள்ளி, 24 ஜனவரி, 2020

குடியரசு தினம் உருவான வரலாறு



குடியரசு தினம் உருவான வரலாறு

மன்னர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்குள்ளேயே சிறு சிறு பகுதிகளாக அந்த அந்த பகுதியை சேர்ந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இந்த கருத்தினை அறிந்த

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வந்து வணிகம் செய்ய வந்தனர். வந்தவர்கள் வணிகம் செய்ததோடு மட்டுமின்றி பின்னாளில் இந்தியாவில் அவர்களது கொடுங்கோல் ஆட்சியினை புரியத்துவங்கினர். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர் .பின்னர் 1947 ஆம் ஆண்டுஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

அதன் பிறகு மக்களை ஒன்றுபடுத்தி அவர்களின் வாழ்க்கையினை மேம்படுத்த அரசியலமைப்பு மூலம் மக்களாட்சி அமைத்து நெறிப்படுத்தும் முனைப்பில் தலைவர்கள் செயல்பட்டனர். குடியரசு தினம் உருவான வரலாறு தெரிய இந்த பதிவினை தொடர்ந்து படிக்கவும்.

வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் :

முதன் முதலில் போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா கப்பல் மூலம் இந்தியா வந்தடைந்தார். அவர் இந்தியாவில் உள்ள வளத்தினை அறிந்து இந்தியாவில் வணிகம் செய்ய போர்ச்சுகீசிய வணிகத்தினரை இந்தியாவிற்குள் கொண்டுவந்தார். பிறகு இந்தியாவில் வணிகம் சிறக்க அவர்களை பின்பற்றி டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் காரர்கள் மெல்ல மெல்ல இந்தியாவில் கால் பதித்தனர்.

போர்ச்சுகீசியர்கள் தங்களது வணிகத்தினை மட்டும் மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் உள்ள மன்னர்களின் பிரிவினை கண்டு அவர்களோடு கொண்ட நெருக்கத்தினை பயன்படுத்தி மெல்ல மெல்ல தங்களது ஆதிக்கத்தினை செலுத்த தொடங்கினர்.

பின்னர் இந்தியாவினை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கொடுங்கோல் ஆட்சி செய்ய துவங்கினர். அவர்களது பிடியில் சிக்கிய இந்தியா 200 ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. வணிகம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவினை ஆளதுவங்கினான்.



சுதந்திரம் அடைந்த இந்தியா :
இந்தியாவில் நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியினை வெறுத்த இந்திய மக்கள் தொடர்ந்து பல தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் மூலம் அவர்களை எதிர்க்க துவங்கினர். பிறகு நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான முழுமையான போராட்டத்தினை நடத்த துவங்கினர்.

‘அதன் தொடக்கமாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர்.

இந்த போராட்டங்களை தொடர்ந்து இந்திய மக்களின் ஒற்றுமையை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கடைசியில் ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து இந்தியாவை விட்டு வெளியேரினர்.

அரசியல் சாசனம் :

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் மூலம் இந்திய அரசியல் சாசனம் அமைக்க முடிவெடுக்க பட்டு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சாசனம் ஒரு பெரிய குழு மூலம் வரையறுக்கப்பட்டு இந்திய அரசியல் அமைப்பு சாசனம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் நன்மையினை மட்டுமே சிந்தித்து மன்னர் ஆட்சி கலைக்கப்பட்டு குடியாட்சி அமைந்தால் தான் நாடு சுதந்திரத்துடன் மேலும் பலமாக இருக்கும் என்று எண்ணி இந்த அரசியல் அமைப்புசாசனம் கொண்டுவரப்பட்டது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

குடியரசு என்பதன் விளக்கம் :

“மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி” மக்களாட்சி என்ற பொருளுண்டு. மக்களின் நல்வாழ்வினை மக்களே முன்னின்று நடத்தவேண்டும் என்று இந்தியாவில் 1950ஆம் ஆண்டு மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் நிகழும் என்று எண்ணி மக்களாட்சி கொண்டுவரப்பட்டது.


முதல் குடியரசு நாள் கொண்டாடப்பட்ட தினம் :

காந்தியடிகள் சுதந்திரம் அடையும் முன்னரே இந்தியாவின் குடியரசு நாளினை ஜனவரி 26 அன்று செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தார் . இதனை நினைவில் கொண்டு இந்தியாவின் முதல் பிரதமரான “ஜவஹர்லால் நேரு” 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் இந்தியா குடியரசாக மாறும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஜனவரி 26 1950ஆம் ஆண்டு முதல் குடியரசு நாள் அன்று இந்தியக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. அந்த கொடியினை ஏற்றியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் நேரு. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டு ஆண்டும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் இந்தியா முழுவதும் கொடியேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.


குடியரசு தினத்தினை கொண்டாடும் முறை :

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் முதலில் டெல்லியில் பிரதமர் மூவண்ண இந்திய கொடியினை கம்பத்தில் பறக்கவிடுவார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் இந்திய கொடியினை ஏற்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி குடியசு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.

மேலும் இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களையும் நினைவில் வைத்து சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகியநாட்களில் மக்கள் அனைவரும் இந்திய கொடியினை தங்களது ஆடையில் குத்திக்கொள்வர்.

இன்று இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளது. இதன்பின் பல தலைவர்களின் உயிர்த்தியாகம் மற்றும் பல மக்களின் ரத்தமும் உள்ளது என்பது மிகையாகாது. சாதி, மதம் மற்றும் மொழி கடந்து இன்று நாம் இந்தியர்கள் என்று கூறிக்கொள்ள நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.

“ஜெய் ஹிந்த் ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக