வெள்ளி, 26 மே, 2017

திருச்சி வரலாறு


திருச்சி

திருச்சிராப்பள்ளியின் சுருக்கம்

 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். இதைப் பொதுவாகத் திருச்சி என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில் திருச்சியும் ஒன்று.



_*திருச்சி பெயர்க்காரணம் :*_

திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நு}ற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

_*திருச்சியின் வரலாறு :*_

தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது.
சேர,சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின.
1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974 இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்ட்டு தனி மாவட்டமாக அமைந்தது.
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலு}ர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

_*திருச்சி மாநகரத்தின் அமைப்பு :*_

திருச்சிராப்பள்ளி 10.8050°N 78.6856°நு என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது. மாநகரத்தின் சராசரி உயரம் 88 மீட்டர்கள் (289 கவ) ஆகும். இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது.

_*மக்கள்தொகை :*_

இந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம் மாநகரின் மக்கள்தொகை: 8,46,915 ஆகும். . இவர்களில் 50 சதவீதம் ஆண்கள், 50 சதவீதம் பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.32 சதவீதம் ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.66 சதவீதம் , பெண்களின் கல்வியறிவு 88.08 சதவீதம் ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5 சதவீதம் விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

_*திருச்சி மாவட்டத்தின் எல்லைகள் :*_
வடக்கில் பெரம்பலு}ர் மாவட்டத்தையும், கிழக்கில் பெரம்பலுர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

_*கோட்டங்கள் :*_

திருச்சி
லால்குடி
முசிறி
திருவரங்கம்

_*வட்டங்கள் :*_

திருச்சிராப்பள்ளி (மேற்கு)
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
ஸ்ரீரங்கம்
திருவெறும்பூர்
மண்ணச்சநல்லு}ர்
துறையூர்
முசிறி
தொட்டியம்
லால்குடி
மருங்காபுரி
மணப்பாறை

_*மாநகராட்சி :*_திருச்சி

_*நகராட்சிகள் :*_

மணப்பாறை
துறையூர்
துவாக்குடி

_*பேரூராட்சிகள் :*_

கூத்தப்பர்
காட்டுப்புத்தூர்
பாலகிருஷ்ணம்பட்டி
பூவாலு}ர்
மேட்டுப்பாளையம் (திருச்சி)
எஸ்.கண்ணணு}ர்
லால்குடி
புள்ளம்பாடி
மண்ணச்சநல்லு}ர்
பொன்னம்பட்டி
முசிறி
தொட்டியம்
தத்தையங்கார் பேட்டை
உப்பிலியாபுரம்
சிறுகமணி

_*ஆறுகள் :*_

திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன.
திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும்.

_*பொருளாதாரம் :*_

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது.
திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது.
1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக்கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (டீர்நுடு)இ நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐனெயைn சுரிநந ளலஅடிழட.ளஎப58 கோடி (ருளுகூ13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து 22,927.4 சதுர மீற்றர்கள் (246இ788 ளங கவ) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது.
இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 ஆறு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
2010இல் ஐனெயைn சுரிநந ளலஅடிழட.ளஎப60 கோடிகள் (ருளுகூ13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்னனுக்கழகம் வரையறையால் 59.74 எக்டேர்கள் (147.6 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது.
இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.

_*கல்வி :*_

*கல்லுரிகள் :*

துவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம் திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லுரிகள் உள்ளன.

_*கலை மற்றும் அறிவியல் கல்லுரி :*_

20 கலை மற்றும் அறிவியல் கல்லு}ரிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, மாத்தூர்
ஜமால் முகம்மது கல்லுரி
நேரு நினைவுக் கல்லுரி, புத்தனாம்பட்டி
பிஷப் ஹீபர் கல்லுரி
ஏ. ஏ. அரசு கலைக்கல்லுரி
காவேரி கலை மற்றும் அறிவியல் கல்லுரி

_*சட்டக் கல்லுரி :*_

அரசு சட்டக் கல்லுரி,திருச்சிராப்பள்ளி.
அகில இந்திய சட்டப்பள்ளி, நவலுர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.

_*பொறியியல் கல்லுரிகள்:*_

11 பொறியியல் கல்லுரிகள் உள்ளன.

_*வேளாண்மைக் கல்லுரி :*_

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லு}ரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

_*பள்ளிகள் :*_

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 16 பள்ளிகள் உள்ளன.

_*முதன்மை தொழிலகம்:*_

பாரத மிகுமின் நிறுவனம்
கொதிகலன் உற்பத்தி தொழிற்சாலை
சிமெண்ட் தொழிற்சாலை
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை

_*முக்கிய விளைபொருட்கள் :*_

வெங்காயம், வாழை, சாமந்தி ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

_*திருச்சியில் குறிப்பிடத்தக்கவர் :*_

வ.வே.சு.ஐயர் - வரகனேரி (திருச்சி)

_*திருச்சி விமான நிலையம் :*_

திருச்சி பன்னாட்டு விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். திருச்சி விமான நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு விமான நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து திருச்சி விமான நிலையம் தான் சர்வதேச விமான போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது.
திருச்சி விமான நிலையத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தால் 4 அக்டோபர் 2012 இல் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது இந்த விமான நிலையம் தினமும் கிட்டத்தட்ட 3000 வெளிநாட்டு பயணிகளை கையாண்டு வருகிறது. வாரத்திற்கு 77 விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகின்றன.

_*ஆன்மிக தலங்கள் :*_

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல்
வயலுர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்
அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை
சுற்றுலாத் தலங்கள் :

*திருச்சி மலைக் கோட்டை :*

திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மலைக்கோட்டையாகும். காவிரியின் தென்கரையில் இது கம்பீரமாக அமைந்துள்ளது. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் இது மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

_*ஸ்ரீரங்கம் :*_

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.
காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

_*திருவானைக்கோவில் :*_

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர்.
இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60வது சிவத்தலமாகும்.

_*சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் :*_

தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனு}ர். சமயபுரம் மாரியம்மன் சிலை அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி அமைந்துள்ளது.

*_இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் :*_

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது.
இது திருச்சி மலைக்கோட்டைக்கு அண்மையில் உள்ளது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் இது நகர மண்டப நிர்வாகத்தினர் கூடுவதற்கான மண்டபமாகச் செயற்பட்டது.
1999 ஆம் ஆண்டில் இது இந்திய அருங்காட்சியகத் துறையால் கையகப்படுத்தப்பட்டது. இங்கே தற்போது அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது.

_*முக்கொம்பு :*_

முக்கொம்பு திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தலமாகும்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.
முக்கொம்புக்கு அருகாமையிலேயே புதைமணல் பகுதியும் கொள்ளிடமும் அமைந்திருக்கின்றன.

*_கல்லணை :_*

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.

_*வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் :*_

வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இது திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் முருகப் பெருமானுக்காகச் சிறப்புற்றதாகும். கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது

*_கங்கை கொண்ட சோழபுரம் :_*

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.
இந்நகரம் இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். மேலும் கங்கைகொண்ட சோழேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும் கட்டினர்
enga ouuru...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக