சனி, 26 மே, 2018

யானை கட்டி போர் அடித்தான் தமிழன்..! திப்பு சுல்தான் யானையை வைத்து என்ன செய்தான் தெரியுமா..?!

யானை கட்டி போர் அடித்தான் தமிழன்..! திப்பு சுல்தான் யானையை வைத்து என்ன செய்தான் தெரியுமா..?!



யானை கட்டி போர் அடித்தான் தமிழன்..! திப்பு சுல்தான் யானையை வைத்து என்ன செய்தான் தெரியுமா..?!

வெடி மருந்து அரைக்கும் அரவைக் கல்லைப் பார்த்திருக்கிறீர்களா….?
18-ஆம் நுாற்றாண்டில், மைசூர் மன்னரிடம் சேனாதிபதியாக இருந்தார், ஹைதர் அலி. அப்போது தான், சித்ர துர்கா கோட்டையின் மீது பல முறை போர் தொடுத்து இறுதியில் 1779-ஆம் ஆண்டு கைப்பற்றினார்.
ஐந்தாம் மடகரி நாயகாவின் காலத்திற்குப் பிறகு, ஹைதர் அலியின் ஆளுகைக்குள் வந்தது சித்ர துா்கா கோட்டை. ஹைதர் அலியின் காலத்திற்குப் பிறகு, அவரது மகன் திப்பு சுல்தானின் வசம் வந்தது.
திப்பு சுல்தான், பாதுகாப்பு கருதி, பல ரகசியப் பாதைகளை அமைத்துக் கொண்டார். இரும்புக் கோட்டை எனப்படும் இந்த வலிமையான கோட்டை, அவருக்கு பல விதங்களிலும் மிக உதவியாக இருந்தது.
1500 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தக் கோட்டையில், திப்புவின் ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை இங்கே உற்பத்தி செய்து கொண்டார்கள்.
துப்பாக்கி தொழிற்சாலையையும், கோட்டையின் ஒரு பகுதியில் செயல் படுத்தினார் திப்பு. துப்பாக்கிகளும் பீரங்கிகளும், மிகச் சிறந்த, செயல்பாட்டாளர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டன.
அத்துடன் நிற்கவில்லை திப்பு சுல்தான். இங்கு தயாரிக்கப் பட்ட, பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும், மற்றும் வெடி குண்டுகளுக்கும் தேவையான கரி மருந்தினை, கோட்டையின் மேல் பகுதியில் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.
சித்ர துர்கா கோட்டையின் ஹை லைட்டான இடம், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்ததும், இந்த இடம் தான். இதனை மிக வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
பெரிய கல் மேடையினைச் சுற்றி, இந்த வெடி மருந்து அரைக்கும் கல் மேடையினை உருவாக்கி இருக்கிறார்கள். யானைகளைக் கொண்டு மட்டுமே, இந்தக் கற்களைச் சுழற்றி, வெடி மருந்தினை அரைக்க இயலும்.
இந்த இடத்தை இப்போது ஆய்வு செய்தாலும், எப்படி இந்த மாதரியெல்லாம் செய்ய முடிந்தது? என்று வியப்பாக எண்ண மட்டுமே தோன்றுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக