வியாழன், 31 ஜனவரி, 2019

88 முறைதவறிய உறவுகள், நிர்வாண போஸ்! ராஜ குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்திய முதல் இளவரசி


88 முறைதவறிய உறவுகள், நிர்வாண போஸ்! ராஜ குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்திய முதல் இளவரசி

மேகன் மெர்க்கல் யுகத்திலேயே இத்தனை கட்டுப்பாடுகள் கொண்ட ராஜ குடும்பத்தில், 1963இலேயே ஒரு இளவரசி எண்ணிப்பார்க்கக்கூட இயலாத அளவிற்கு முறை தவறிய உறவுகளை வைத்துக் கொண்டு ராஜ குடும்பத்திற்கு வெளிப்படையாக அவமானத்தைக் கோண்டு வந்த முதல் இளவரசி என்னும் பெயரை பெற்றிருக்கிறார் என்பது உண்மையாகவே அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்திதான்.

Margaret Whighamஆகப் பிறந்து அமெரிக்க செல்வந்தர் ஒருவரை மணந்து மூன்று குழந்தைகளுக்கு தாயான Margaret, அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரித்தானிய இளவரசரான Ian Campbellஐ மணந்து Margaret Campbell ஆனார்.

திருமணமான குறுகிய காலத்திலேயே, இளவரசர் Ian Campbellக்கு Margaretமீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.



Margaret வீட்டிலிருந்த ஒரு பீரோவை தட்டான் ஒருவர் உதவியுடன் உடைத்துப் பார்த்த இளவரசருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

Margaret Campbellஇன் பீரோவுக்குள் ஏராளமான காதல் கடிதங்களும், பல்வேறு ஆண்களுடன் Margaret பாலுறவு கொள்ளும் புகைப்படங்களும் கொட்டிக் கிடந்தன. அந்த புகைப்படங்களில் ஒன்றில் நிர்வாண மனிதன் ஒருவருடன், Margaret முத்துமாலை ஒன்றை அணிந்திருக்கும் படம் மிகவும் புகழ் பெற்றது.

அதாவது Margaret நிர்வாணமாக முத்துமாலை ஒன்றை மட்டும் அணிந்திருந்தார். கட்டுப்பாடுகள் நிறைந்த ராஜ குடும்பத்தில் இப்படி ஆபாசப் பெண் ஒருவர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



பத்திரிகைகள் Margaretஐ Argyllஇன் அசிங்க இளவரசி என்றே அழைத்தன. ஏற்கனவே பிரித்தானிய மாகாணச் செயலரான Profumo என்னும் ஒருவர், மொடல் பெண் ஒருவருடன் தவறான உறவு கொண்டிருந்த விடயம் பிரித்தானியாவை உலுக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், Margaretஇன் அந்த தலையில்லா மனிதன் என்ற புகைப்படம் இன்னும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தியது.

அந்த தலையில்லா மனிதன் யார் என கண்டறிய பிரித்தானிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிபெறவில்லை.

அதோடு இல்லாமல் இளவரசரும் தன் பிள்ளைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என Margaret மீது குற்றம் சாட்டினார்.



Margaret, Ian Campbell விவாகரத்து வழக்கு பல அதிர்ச்சித் தகவல்களை வெளிக்கொண்டு வந்தது.

அமைச்சர்கள் இருவர், ராஜ குடும்ப உறுப்பினர் மூவர் உட்பட Margaret 80 பேருக்கும் அதிகமான ஆண்களுடன் தவறான உறவு வைத்திருந்தது தெரியவந்தது. பிரித்தானிய ராஜ குடும்ப வரலாற்றிலேயே வெளிப்படையாக அவமானம் சம்பாதித்த முதல் இளவரசி Margaret என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Lord Wheatley, Margaret முற்றிலும் ஒழுக்கம் கெட்ட ஒரு பெண் என்றும், அவளுடைய பாலியல் இச்சைகளை ஏராளமான ஆண்களால் மட்டுமே தணிக்கமுடியும் என்றும் கூறியிருந்தார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக