புதன், 2 ஜனவரி, 2019

Siege of Madras - 1759 மதராஸ் மீட்பு போர் - 1759


Siege of Madras - 1759
மதராஸ் மீட்பு போர் - 1759

8000 வீரர்களை கொண்ட பிரஞ்சு படைகளை சிதறடித்து மதராஸை மாகாணத்தை மீட்ட
2000 வீரர்களை கொண்ட
'பறையர் ரெஜிமென்ட்' படையின் வரலாறு.

1750-களில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அதிகார சண்டை உச்சத்தை அடைந்து இருந்தது. தெற்காசியாவின் முக்கிய வணிக நகரமாகிய 'மதராஸ் மாகாணத்தை' கைப்பற்ற பிரெஞ்சு அரசு திட்டம் தீட்டியது.

மதராஸை கைப்பற்றும் திட்டத்துடன் பிரஞ்சு அரசு போர் வீரன் 'Comte de Lally' யை பாண்டிச்சேரிக்கு அனுப்பியது.

'Comte de Lally' பாண்டிச்சேரியில் இருந்து
Dec 12, 1758 அன்று தனது பிரெஞ்சு படைகளை மதராஸ் நோக்கி செலுத்த துவங்கினார். Lally-யின் ஆக்ரோஷமான படை காரைக்கால், கடலூர் போன்ற ஊர்களை கைப்பற்றி "Fort St George" கோட்டையை நோக்கி முன்னேறியது.

தொடர் வெற்றிகளுடன் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வந்த பிரெஞ்சு படைக்கு பறையர்கள் செழுமையாக வாழ்ந்த "கருப்பர் நகரம்" எனும் "Black Town" இல் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கருப்பர் நகரத்தில் 'பறையர் ரெஜிமென்ட் படை'
 பிரெஞ்சுக்காரர்களுடன் கடுமையாக போரிட்டது,
கடுமையான இந்த போரில் பறையர் ரெஜிமென்ட் படையுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த
 #மருதநாயகம்_சாம்பவர் (Muhammad Yusuf Khan) போர்ப்படை தளபதியாக சண்டை இட்டுள்ளார்.

பிரஞ்சு படைகள் பறையர் போர் படையின் ஆக்ரோஷ தாக்குதலால் முடக்கப்பட்டது. பூர்வீக மண்ணை காக்க பறையர் படை வீரியமாக சண்டையிட்டது. இந்த கடும் போரை ஆங்கிலேய ஆவணங்கள்  "Battle of Black Town" என்று பதிவு செய்துள்ளது.

2000 வீரர்களை கொண்ட பறையர் படையை
 "Black Army" என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்துள்ளனர். 1500 பறையர்களையும் குதிரை படையையும் #மருதநாயகம்_சாம்பவர் தளபதியாக நின்று வழிநடத்தி உள்ளார்.

ஆங்கிலேயர்கள்  #மருதநாயகம்_சாம்பவரை  பற்றி தம் ஆவணங்களில் குறிப்பிடுகையில் 'வீரர்களின் அரசன்'- 'King Of Sepoy" என்று பதிவு செய்துள்ளனர்.

67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில்
பறையர் படையின் தாக்குதலால் பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது.

#மருதநாயகம்_சாம்பவர் வழிநடத்திய பறையர் படையின் தாக்குதலில் சிதறிய 'Lally' தலைமையிலான பிரஞ்சு படை Feb 16, 1759-இல் தன்  தோல்வியை ஏற்று கொண்டு பாண்டிச்சேரி
சென்றது.

தெற்காசியாவின் முக்கிய வணிக நகரமாகிய மதராஸில் நடந்த இந்த போர் உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக வல்லாதிக்க சக்தி யார் என்பதை தீர்மானித்த போர் என்று வரலாற்று ஆய்வாளர் "Frank McLynn" குறிப்பிடுகிறார்.

இந்த போரில் பறையர்களின் பங்கு அளப்பரியது. ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் "Elder Smith" இதை குறிப்பிடும் பொழுது "மதராஸ் மீட்பு போரில் மதராஸ் பூர்வ குடி மக்களின் பங்கு சிறப்பு வாய்ந்தது ஏன் என்றால் அவர்கள்  சொந்த மண்ணை காக்க போரிட்டனர்." என்று குறிப்பிடுகிறார்.

இன்று 'தமிழ்நாடு அரசு' தலைமை செயலகமாக செயல் படும் "Fort St George" கோட்டையை காப்பாற்றிய பெருமை பறையர் படையையே சாரும்.

பறையர் படையின் வீரம் செறிந்த இந்த வரலாற்றை நம் அடுத்த தலைமுறையிடம் கொண்டு பொய் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு பறையரின் கடைமையாகும்.

மதராஸ் மீட்பு போரில் போரிட்ட பறையர்களுக்கு
"Fort St George" கோட்டையில் நினைவு தூண் எழுப்பி ஆண்டுதோறும் Feb-16 இல் அஞ்சலி செலுத்தி மரியாதையை செலுத்த வேண்டும்.

ஆதாரம்;-
Source:

1) History of the Services of the Madras Artillery, with a Sketch ..., Volumes 1-2
By Peter James Begbie

2) An Account of the War in India between the English and French on the Coast of Coromandel from the Year 1750 to the Year 1760 together with a Relation of the late Remarkable Events on the Malabar Coast, and the Expeditions to Golconda and Surat; with the Operations of the Fleet, London: T. Jefferys, 1761,

3) 1759: The Year Britain Became Master of the World. Pimlico, McLynn, Frank

4) A Journal of Siege of Fort St George by J Call Cheif Engineer.

5) A History of the British Army, Vol. II, MacMillan, London, 1899, by Fortescue, J. W.

6) Historical Record of the Honourable East India Company's First Madras Regiment, London: Smith, Elder and Co; 1843

7) https//en.wikipedia.org/wiki/Siege_of_Madras

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக