வியாழன், 24 ஜனவரி, 2019

பாளையங் கோட்டை வரலாறு


பாளையங் கோட்டை வரலாறு

வெளிக் கோட்டை சுவர் 13 அடி உள் கோட்டை சுவர் உயரம் 18 அடி.

வடக்கு கடைவீதி
 #பாலாஸ்பத்திரியிலிருந்து கிழக்கே #சமாதானபுரம் மகளிர் காவல்நிலையம் வழி தெற்கே
#சேவியர்_பளளி வரை சென்று பாளைபஸ் ஸ்டாண்ட் வழி #கட்டபோம்மன் சிலையோடு வடக்கே  திரும்பி கோட்டை வாசல் பிள்ளையார் கோவில் வழி சித்த மருத்துவ கல்லூரி வழி பாலாஸ்பத்திரியை அடைந்ததாம். கோட்டைச்சுவர்.

கடடபொம்மன் சிலை இருக்குமிடம் தென்மேற்கு கோட்டைக் கொத்தளமாம்.
அதனடியில் படைக் காவல் வீரர்களது அறையிருந்ததாம்.

கோட்டையின் மையப் புள்ளி ஆயிரத்தம்மன் கோவிலாம்.
அதனருகில் தெப்பக்குளம் இருந்ததாம்.

மன்னர் காலத்தல் போருக்குப் போகும் பொழுது நரபலி இட்டார்களாம். நவகண்டம் பலியிடுவார்களாம்.

பின் எருமைபலியாக மாறியதாம்.
எருமைகளைத் தருவதால்.. யாதவர்களுக்கு  ஆயிரத்தம்மன கோவில் முதல் மரியாதையாம்.

ஆயிரம் படை வீரர்கள் தங்கியிருந்து கொற்றவைக் கோயிலாக தாய்க் கோயிலாக வழிபட்டதால் ஆயிரத்தம்மன்  என எண்ணுப் பெயராம்.

எருமை தலை அரக்கனை அழிப்பதே தசரா முதல் நோககம்.

போருக்குச் செல்லும் மன்னர்கள் வடதிசை வழியே செல்வதைப் போல அனைத்து தாய்த் தெய்வங்கள் கோவில்கள் வடக்குவாசலாய் இருக்கின்றனவாம்.

கோபாலசுவாமி இறைவனின் ஆதிப் பெயர் வீரநாராயணன்.

கோவிலுக்கு வடமேற்கே செண்பகமரங்கள் நிறைந்த
செண்பகவனம் என்றும்
புதுப்பேட்டை பகுதி முல்லை வனம் என்றும்
சிவன் கோவில் மேற்குப் பகுதி புன்னைவனம் எனப்பட்டதாம்.

இன்றும் செண்பகவனத் தெரு புன்னைவனத் தெரு இருப்பதை அறியலாம்.

பாளை கோபாலசுவாமி கோவிலுக்கு கிழக்கே ..சிவன கோவிலுக்கு மேற்கே உளள பகுதியில் விஜயநகரப் டேரரசு காலத்தில் 13ம் நூற்றாண்டில் சதாசிவதேவ மகாராயர் காலத்தில் நிறைய செளராஷ்டிர மக்கள் குடியேறினார்கள்.

-பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு நூலில் திரு தொ.ப மற்றும் திரு.ச.நவநீதக்கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக