சனி, 2 டிசம்பர், 2017

திருவண்ணாமலை தீபம் உண்மை என்ன தெரியுமா?



திருவண்ணாமலை தீபம் உண்மை என்ன தெரியுமா?

- மஞ்சை வசந்தன்

திருவண்ணாமலை இமயமலையைவிட பழைமையான மலை. அது ஓர் எரிமலை. அந்த எரிமலை வெடித்து விண்முட்ட நெருப்பைக் கக்கியது. எரிமலை என்ற விவரம் அறியாத அக்கால மக்கள், கடவுள் (சிவன்) ஜோதியாக வெளிப்பட்டுவிட்டார் என்று வணங்கினர்.

மலையின் உச்சியில் எரிமலை நெருப்பு வெடித்து வெளிப்பட்டதால் அதன் நினைவாக மலை உச்சியில் பெரிய தீபம் ஆண்டுதோறும் ஏற்றுகிறார்கள். இதில் கடவுள் தன்மை ஏதும் இல்லை. இது ஓர் இயற்கை நிகழ்வு. காரணம் புரியாமையே கடவுள் நம்பிக்கைக்கும், பக்திக்கும் காரணம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த உண்மையை விளக்கி 20 ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ நாளேட்டில் கட்டுரை எழுதினேன். அக்கட்டுரையில் திருவண்ணாமலையை ஆய்வு செய்தால் அது ஓர் எரிமலை என்பது விளங்கும். எரிமலை கக்கிய மண் மலைமீது இருக்கிறது என்பதும் தெரியும் என்றேன். நிலவியல் ஆய்வாளர் ஆய்வு செய்து அது எரிமலை என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்ததை ‘தினமணி’ நாளேடு செய்தியாக வெளியிட்டது.

பகுத்தறிவாளர்களின் ஆய்வுகள் பொய்ப்பதில்லை என்பதை இது உறுதி செய்தது. இதுசார்ந்த எனது முழு கட்டுரை விரைவில் முகநூல் மற்றும் பிளாக்ஸ்பாட்டில் வெளிவரும்!

அண்மையில் இந்தோனேசியாவில், பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை வெடித்து 2300 அடி உயரத்திற்கு நெருப்பும் புகையும் வெளிப்பட்டதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மையை அறியலாம். இந்தியாவில் எரிமலை மிக அரிது. அதனால் இந்த உண்மை புரியாத மக்கள், அக்காலத்தில் அதை கடவுள் வெளிப்பாடு என்று கருதினர்.

எனவே, திருவண்ணாமலை ஓர் எரிமலை. அதில் சிவன் வெளிப்பாடு என்பது கற்பனை. எனவே, மூடநம்பிக்கையில் முட்டி மோதி அங்கு சென்று அலையாது, பகுத்தறிவோடு வாழுங்கள்.
இச்செய்தியைப் பலருக்கும் பகிருங்கள், பரப்புங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக