ஞாயிறு, 3 டிசம்பர், 2017

ராணி பத்மினி ( Rani Padmini) அல்லது பத்மாவதி ( Padmavati)



ராணி பத்மினி ( Rani Padmini) அல்லது பத்மாவதி ( Padmavati , இறப்பு: 1303)
இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர்
ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.

வரலாறு

வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்சி அவளைத் தன்
அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்.
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி
கூட்டுத் தீக்குளித்து உயிர் துறந்தாள்.
74,500 க்கு தரப்பட்ட மதிப்பு
கில்ஜியிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 741/2 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
ரக்சா பந்தன்
ராணி பத்மினி மன்னர் உமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.
திரைப்படம்
சித்தூர் ராணி பத்மினி என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக