ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

வேலூர் C M C HOSPITAL சிஎம்சி மருத்துவமனை உருவானது எப்படி என்று பார்போம்.....


வேலூர் என்றால் அனைவருக்கும்
C M C HOSPITAL  தெரியும்
சிஎம்சி மருத்துவமனை உலக பிரசித்திவாய்ந்த ஒன்றாகும்
சற்று உருவானது எப்படி என்று பார்போம்...............

திண்டிவனம் என்றும் போல காரிருளில்மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870!அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்குவெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்கநங்கை ஆங்கில நாவல் படித்துக்கொண்டிருந்தாள் .அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் (Ida Sophia Scudder). வயது -  20.அமெரிக்காவில் இறைத் தூதர்(Missionary) பயிற்சியும் பெற்றவள் .ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவள் .இந்தியாவில் நிலவிய வறுமை,பஞ்சம்,வியாதி அவளை விரக்திக்குள்ளாக்கியது. அவளுடைய தந்தை ஒரு மருத்துவ இறைத்தூதர்(Medical Missionary) பெயர்மறைத்திரு டாக்டர் ஜான் ஸ்கடர். திண்டிவனம் பகுதியில் ஏசுவின்இறைப்பணியுடன் மருத்துவப்பாணியிலும் ஈடுபட்டிருந்தார். தாய்க்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால்ஐடா ஸ்கடர் அப்போது திண்டிவனம்வந்திருந்தாள்... தந்தையின் மருத்துவப் பணியின்போதுஉதவி வந்த தாய்க்கு உடல் நலம் குன்றியகாரணத்தால் இவள் உதவ வேண்டிய நிர்ப்பந்தம்உண்டானது. பாமர மக்கள் இவளையும் ஒருமருத்துவராக எண்ணினர்.

இறைத் தூதர் பணியில் அவளுக்குநாட்டமில்லாமல் போனதற்கு இந்தியாவின்பின்தங்கிய நிலை ஒரு காரணம். அவளுடைய குடும்ப உறுப்பினர்அனைவருமே இறைப் பணியாளர்கள் என்பதுஇன்னொரு காரணம். அவருடைய ஏழுசகோதரர் அனைவருமே இறைப்பணியாளர்கள்தான்! அதோடு அவளின் இளமை. பிடித்த ஒருவரை திருமணம் புரிந்துஅமெரிக்காவில் சொகுசாக வாழவேண்டும் என்ற கனவு! ஆனால் அன்றைய இருண்ட இரவு அவளுடையஉள்ளத்தில் ஒரு உள்ளொளியை உண்டுபண்ணியதை இறைவனின் செயல்என்றுதான் கூறவேண்டும்!

நாவலில் மூழ்கியிருந்தவளின் கவனத்தைகதவை வெளியில் யாரோ தட்டும் சத்தம்கலைத்தது. நள்ளிரவை நெருங்கும் நேரம். பெற்றோர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். எழுந்து சென்றுகதவைத் திறந்தாள். லாந்தர் ஒளியில் ஒரு இஸ்லாமியர்தலையில் சமய குல்லா அணிந்தவாறுநிற்பது கண்டாள். அவரைப் பார்த்து அவள்திரு திருவென விழித்தாள். வந்தவர்பதற்றத்துடன் காணப்பட்டார். ”மிஸ்ஸியம்மா . நீங்கள்தான் என் மகளைக்காப்பாற்றணும்!” அவர் மன்றாடினார். ”உங்கள் மகளுக்கு என்ன?” எனும் அர்த்தம்படதமிழில் கேட்டாள் அந்த அமெரிக்க மங்கை.” தலைப் பிரசவம்! வலியால்துடிக்கிறாள்! உடனே வாருங்கள் அம்மா ”அவர் கெஞ்சுகிறார். ”ஐ ஆம் சாரி. நான் டாக்டர் இல்லே.பிரசவம் பாக்க எனக்கு தெரியலே.” அப்படி சொல்லாதீங்க மிஸ்ஸியம்மா.ஏதாவது செய்யுங்கள்.  அவரின் நிலைஅப்படி. ”இருங்கள். அப்பாவை எழுப்புறேன். அவர்உடன் வருவார்.” என்றவாறு மாடிஅறைக்குச் செல்ல திரும்பினாள்.” வேண்டாம் மிஸ்ஸி. அவரைஎழுப்பவேண்டாம்.” அவர் உரக்க கூறிதடுத்தார். ”ஏன் வேண்டாம்? உங்களுடைய மகள்?”, ”வேண்டாம் அம்மா வேண்டாம்! ஒரு முஸ்லீம்பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின்வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள்செத்தாலும் பரவாயில்லை. நான்வருகிறேன் தாயே!” கைகள் கூப்பிவிடை பெற்று இருளில்மறைந்துபோனார்.அவள் செய்வதறியாது வியந்து நின்றாள்.கதவைத் தாழிட்டுவிட்டு நாவலைக்கையில் எடுத்தாள். விட்ட இடத்தில் தொடரமுயன்றாள். ஆனால் முடியவில்லை.மனதில் ஒரு நெருடல்.

அதிக நேரம் ஆகவில்லை.மீண்டும் கதவு தட்டப்பட்டது.ஒருவேளை அவர்தான் மனம் மாறி மீண்டும்வந்துள்ளாரோ என்ற எண்ணத்தில் கதவைத்திறந்து பார்த்தாள்அது வேறொருவர். நடுத்தர வயதுடையவர். நெற்றியில் பட்டை தீட்டியிருந்தது. அவ்ர்ஒரு இந்து. வணக்கம் கூறிவிட்டு அவர்சொன்னது அவளை வியப்பில் ஆழ்த்தியது.” மிஸ்ஸியம்மா . என் மனைவி பிரசவவலியால் துடிக்கிறாள். உடன் என்னோடுவாருங்கள் அம்மா . அந்த இரு உயிரையும்காப்பாற்றுங்கள்தாயே!” அவரும்கெஞ்சினார்.மீண்டும் அதே பதிலைத்தான் அவள்கூறினாள். தந்தையை அழைக்கவா என்றுகேட்டாள்.” வேண்டாம் தாயே! எங்கள் ஹிந்துசாஸ்த்திரத்தில்அதற்கு இடமில்லை . என்மனைவி செத்தாலும் சாகலாமே ஒரு ஆண்அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாதுதாயே.” அவரும் ஏமாற்றத்துடன்திரும்பினார்.அவர் சென்றபின்பு அவள் அமைதி இழந்துபோனாள். நாவலை மூடிவிட்டு படுக்கச்சென்றாள். உறக்கம் வரவில்லை.

 அப்போதுமீண்டும் கதவு தட்டப்படும் சதம் கேட்டுகுதித்தெழுந்தாள்.கதவைத் திறந்து பார்த்தபோதுவேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.” மனைவிக்கு பிரசவ வலியா? ” இவளேகேட்டாள்.” ஆமாம் தாயே . அது எப்படி உங்களுக்குத்தெரிந்தது? உடனே வந்து என் மனைவியைக்காப்பாற்றுங்கள்மிஸ்ஸி.” அவரின் கெஞ்சல்.”அப்பாவை எழுப்பவா?” என்ன பதில் வரும்என்று தெரிந்துதான் கேட்டாள். ”அப்பாவா? வேண்டாம் தாயே. அது எங்கள்சம்பிரதாயத்தில்இல்லை தாயே. நீங்கள்தான்வரணும்.” அவர் உறுதியாகக் கூறினார். ”இல்லை. நான் டாக்டர் இல்லையே? அப்பாதான்வர முடியும்” அவள் உண்மையைக்கூறினாள். ”அதை விட என் மனைவி சாகலாம். ”என்றவாறே வந்த வழியே திரும்பினார்.அதன்பின்பு அவளின் தூக்கம்பறந்தோடியது. இது இந்திய நாடு.இங்குள்ள கலாச்சாரமே வேறு. பெண்கள்தான்பிரசவம் பார்க்கவேண்டும்என்பதில்நம்பிக்கைக்கொண்ட மக்கள் வாழும் நாடு.இதற்கு என்னதான் தீர்வு? பெண் டாக்டர்களேஇந்தியாவில் இல்லாத காலமாயிற்றே?தீவிரமாக யோசித்தாள் ஐடா என்ற அந்தஇருபது வயதுடைய அமெரிக்க இள நங்கை!

மறு நாள் மாலையில் பங்களா தோட்டத்தில்ஐடா அமர்ந்து நாவல் படித்துக்கொண்டிருந்த போது வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்றுகொண்டிருப்பதைப்பார்த்தாள் . அந்தமூவரும் பிரசவ சிக்கலில் இரவில்இறந்துபோன பதின்ம வயது பெண்மணிகள்என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம்வெதும்பினாள்.இரவில் தோன்றிய உள்ளொளி அப்போதுமுழு வடிவம் பெற்றது! அப்போதே தனது கனவான அமெரிக்காவின்சொகுசு வாழ்க்கையை தியாகம்செய்து விட்டாள் ஐடா! இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவைபெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்துகொண்டாள்.அவர்களுக்காக தன்னையேஅப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள்.அதை கடவுளின் அழைப்பாகவும் நம்பினாள்.அவள் திருமணம் பற்றிய எண்ணத்தையும் அன்றேகைவிட்டாள். அதன்பின் நடந்தவை வரலாறு.

1899 ஆம் வருடம் நியூ யார்க் நகரில்கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக்கல்லூரியில் (Cornell University Medical College) சேர்ந்தாள். அதிலும் ஒருசிறப்பு . பெண்கள் மருத்துவம் பயிலஅனுமதிக்கப்பட்டமுதல் வகுப்பு அது!1899 ஆம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்றுமருத்துவரானார். உடன் தமிழ் நாடு திரும்பி மருத்துவப்பணியை பிணியாளிகளுக்கு,குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும்என்ற ஆர்வம் கொண்டார். பலரிடம் தனதுதிட்டத்தைக் கூறினார். மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர்ஷெள்(Schell) என்பவர் தமிழ் நாட்டுபெண்களின் நலனுக்காக $10,000 அமெரிக்கடாலர்களை அவரின் மனைவியின்நினைவாக ஐடாவிடம் வழங்கினார்(அப்போது அதன் மதிப்பு மிகவும்அதிகமாகும்). அவர் தமிழ் நாடு திரும்பியபோதுஅவரின் தந்தை வேலூரில் மருத்துவப்பணியில் ஈடு பட்டிருந்தார். அவர்குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டுவருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்தார்... 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை மரணமுற்றார்மருத்துவப் பணியின் முழுப்பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி1902ஆம் வருடம் ஒரு சிறுமருத்துவமனையை வேலூரில் அமைத்துஅதற்கு ஷெல் மருத்துவமனை(Schell Hospital ) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாகதரப்பட்டன. தற்போது இது Mary TablerSchell Eye Hospital) என்று கண்மருத்துவமனையாக பெரிய அளவில்இயங்கி வருகின்றது சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் அங்குவந்து பயன் பெற்றனர். வருடத்தில் 40,000நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்தார். அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக்(Plague), காலரா, தொழுநோய்ஆகியவற்றிலிருந்து மக்களைக்காப்பாற்றப் போராடினார். தமிழ் நாட்டு பெண்களின் நல்வாழ்வுக்காகதான் ஒருவர் மட்டும் முயற்சியைமேற்கொள்வது இயலாத காரியம் என்பதைஅவர் உணர்ந்தார்.

பெண்களுக்கான தாதியர் பயிற்சிப் பள்ளிநிறுவ எண்ணினார். அப்போதுஆசியாவிலேயே இது கேள்விப் படாதஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழகசம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல்தாதியர் பயிற்சிப் பள்ளியைநிறுவினார்.1909 ஆண்டில் அவர் ஆரம்பித்த வீதியோரகிளினிக்(Roadside Clinic) திட்டம்கிராம மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. அவர கிராமம்கிராமமாகச் சென்று மரத்தடியிலும், குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழைஎளியோருக்கு மருத்துவச் சேவைபுரிந்தார். ஆனால் அவருக்கு அப்போதும் திருப்திஉண்டாகவில்லை. தானும் தன்னால்உருவாக்கப்பட்ட தாதியராலும்பெண்களுக்குத் தேவையான மருத்துவசேவையை வழங்குவது இயலாத காரியம்என்பதை உணர்ந்தார். பெண் மருத்துவர்களை உருவாக்குவதேஅதற்கு ஒரே வழி என்பதை உணர்ந்தார். இந்தவிபரீத எண்ணத்தைக் கேட்டவர்கள் இது நடக்கவேநடக்காது, அவரிடம் மூன்று மாணவிகள்வந்தாலே பெரிய ஆச்சரியம் என்று கேலிபேசினர். அப்போதிருந்த சமுதாயஅமைப்பு அப்படி! பெண் கல்வியே இல்லாதகாலம் அது! அந்த நிலையில் பெண்கள்மருத்துவம் பயில்வதா ?அரசு அனுமதியுடன் சென்னைப்பல்கலைக்கழக அங்கீகாரத்துடன்1918 ஆம் வருடம்பெண் மருத்துவர்களுக்கான கல்லூரிநிறுவப்பட்டது. அதில் சேர 151 பெண்கள்மனு செய்திருந்தனர்.அவர்களில் 17 பெண்கள்தேர்வு செய்யப்பட்டு வகுப்பில்சேர்க்கப்பட்டனர். இதுவே கிறிஸ்துவமருத்துவக் கல்லூரியின் ஆர்ம்பம்.


1928 ஆம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள்பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அதுதான் இன்றைய சி.எம்.சி.மருத்துவமனை. 1928 ஆம் வருடத்தில் பாகாயத்தில் மலைகள்சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கில் பரவலானநிலப்பரப்பில் மருத்துவக் கல்லூரியின்வளாகம் அமைக்கப்பட்டது.அப்போது நாட்டின் தந்தை மகாத்மாகாந்தி அவர்களும் கல்லூரியையும்மருத்துவமனையையும் விஜயம் செய்துசிறப்பித்தார்! இன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக்கல்லூரியாக விளங்குவதை நாடறியும்! ஒரு தனிப்பட்ட பெண்மணி இவ்வளவு பெரியசாதனைப் புரிய நிறையபொருளாதாரம் தேவை. இவரின்மருத்துவப் பணியை இறைப்பணியாகவேஏற்று 40 கிறிஸ்துவ சபைகள் ஓரளவுஉதவின. ஆனால் அது போதாததால்நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941 ஆம்வருடம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். தேவையான நிதி திரட்ட அவர்அமெரிக்காவின் அனைத்துபகுதிகளுக்கும் (மாநிலங்களுக்கும்) பிரயாணம் செய்தார். அங்குள்ளதிருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவுநல்கியதோடு ஆண்டுதோறும் பொருள்உதவிகள் செய்யவும் ஆர்வம்காட்டின. பொதுமக்களும் அவருடையபுனிதப் பணியைப் பாராட்டி உதவினர். 2 மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம்ஆளுக்கு ஒரு டாலர் என்று 2 மில்லியன்அமெரிக்க டாலர்கள் திரட்டினார்!அதுபோன்று பல மில்லியன் டாலர்களுடன்வேலூர் திரும்பி, மருத்துவமனையையும் மருத்துவக்கல்லூரியையும் நவீனப் படுத்தினார்.

1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில்ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இன்று அனைத்து வசதிகளுடனும், நவீனசிறப்புப் பிரிவுகளுடனும், 2000படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாகவும் , உலகின்மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாகவிளங்குகிறது! ஐடாவின் பெயர் உலகெங்கும் பரவியது.1952ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர். ஐடாஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர். ஐடா ஸ்கடர் வேலூர் நகரமக்களாலும், வட ஆற்காடு மக்களாலும்பெரிதும் போற்றப்பட்டார். அவரைபாசத்துடன் ஐடா அத்தை(Aunt Ida) என்றேஅழைத்தனர். இந்திய நாட்டின் பெண்களின்நல்வாழ்வுக்காக தமது வாழ் நாளைஅர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர். தாதியர் கல்வியையும், பெண்களுக்கானமருத்துவக் கல்வியையும் இந்தியாவில்அறிமுகப் படுத்திய முன்னோடி அவர். அவர் தமது முதிர் வயதில் கொடைக்கானல்மிஷன் பங்களாவில் ஓய்வு பெற்றார். தமது 85வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல்தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அமெரிக்காவிலிருந்து வந்திருந்தஒரு தபாலில் ”டாக்டர். ஐடா, இந்தியா.” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய நிலையில் அவர்அறியப்பட்டிருந்தார்.

இந்தியப் பெண்களுக்காக அவர் செய்தமாபெரும் தியாகத்தையும்சேவையையும் பாராட்டும் வகையில்அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12,2000 நாளன்று அவரின் படமும் சி.எம்.சி.மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும்பொறிக்கப்பட்டசிறப்பு தபால் தலை வெளியிட்டுபெருமை சேர்த்தது இந்திய அரசு!1960 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் நாள்அதிகாலையில் வழக்கம்போல் எழுந்தார்.அவருக்கு வயது 90.வழக்கத்திற்கு மாறாக தலைசுற்றுவதாகக் கூறினார்.அவருக்கு உதவும் தாதி, ”காப்பிகுடியுங்கள் அம்மா தலை சுற்றல்நின்றுவிடும்” என்றாள் .அவர், ”வேண்டாம்” என்று பதிலளித்தார். ஐந்து நிமிடங்களில் அவர் இறைவனடிசேர்ந்துவிட்டார்! இவர் போன்றவர்கள் இந்தியா வந்ததினால்தான்மருத்துவ துறை இத்தகைய அசுர வளர்ச்சிகண்டிருக்கிறது.யாருக்காவது  மறுக்க முடியுமா?

Source : WP
இந்த செய்தியை உங்களுக்கு பகிர்ந்துகொள்வது என் பாக்கியம் என கருதுகிறேன் ..அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக