வெள்ளி, 23 மார்ச், 2018

நாம் யார்? நம் வரலாறு என்ன?



#நாம் யார்? நம் வரலாறு என்ன?

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்!

* நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா, மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு, செழிப்பாக இருந்தது.

* அப்போது, நாடோடிகளாக, ஆடு, மாடுகளோடு வந்த, வெளிறிய ஆரியர்கள் இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்.

* நீண்ட காலப் போரில் ஈடுபட்டனர். நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து, அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்.

* வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்.

* பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம், நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

* பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர். பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.

* ரிக் வேதங்களில், மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

* மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்.

* பிறகு நர பலி, பல்வேறு யாகம், சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.

* அரசவைகளில் ஆலோசகர்களாக இருந்து, மறைமுகமாக ஆட்சி செய்தனர்.

* பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினர்.

* அப்போது, சாக்கிய குலத்தைச் சார்ந்த சித்தார்த்தன்.

* தந்தை பெரியார் போல், சடங்கு, யாகம், உயிர்ப் பலி அனைத்தையும் எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

* அதன் பிறகு தான், புத்த மதம் உருவாகி வளரத் தொடங்கியது.

* புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன.

* சாம்ராட் அசோகா, கலிங்கப் போருக்குப்வபின் மனமாற்றம் அடைந்து, புத்தம் தழுவினார்.

* பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, மூடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தார்....

* அப்போது, வாழ்விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள், வரிச் சலுகை வழங்கி, அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி, காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டது.

* இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, சீனா, மங்கோலியா, ரஷ்யா, தென் கிழக்கு ஆசிய நாடுகள்வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது.

* 700 வருடம் ஆட்சியில் இருந்த மெளரிய பேரரசு, இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது.

* புத்த மதத்தை அழிக்க முடியாததால், ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்.

* இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர். சமணமும் செல்வாக்கோடு இருந்தது.

* அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமன மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து, புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்.

* பிராமணர் உருவாக்கிய புத்தமதப் பிரிவிற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,

* உண்மையான புத்த கொள்கைகளைப் பின்பற்றியவர்களின் பிரிவைக் குறிக்க "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.

* ஹீனயானம் என்பது ஈன பிறவி. அதாவது தாழ்ந்த, குறையுடைய புத்தம் என்ற பொருளில், இகழ்ந்தனர்.

* புத்த மதத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

* மெளரிய வம்சப் பேரரசின், இறுதி மன்னன் பிராகிருதன், இவர்...

* புஷ்ய மித்ர சுங்கன் என்ற, ஆரிய இனப் படைத் தளபதியால், சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்.

* புஷ்ய மித்ரன், சுங்க வம்சத்தை நிறுவினான்.

* அப்போது, மீண்டும் வேத மதம் எழத் தொடங்கியது.

* இந்தக் கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு...

* புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன.

* புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில், புத்த பிக்ஷுக்களி்ன் தலைக்குப் பரிசுகள் அறிவித்து, ஒரு இனப் படு கொலையை நடத்தினான்.

* எப்படியென்றால், புத்த பிக்ஷுக்களின் தலை, வீட்டின் முன்புறம் தொங்க விடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

* அந்த வழக்கம் தான், இப்போது நாம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது.

* குப்த பேரரசு உருவான பிறகுதான் மிகுந்த எழுச்சி பெற்றது ,வேத மதம்.

*புத்தமும், சமணமும் திட்டமிட்டே அழிக்கப்பட்டன.

* அந்தக் காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்.

* ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்துக் கதைகள் எழுதப்பட்டன.

* "சுரா" என்ற மது பானத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல / கொள்கைகளைப் பின்பற்றி வந்த நாக பௌத்தர்கள், அசுரர்கள் எனப்பட்டனர்.

* அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பானத்தை அருந்தாதவர்கள் என்று பொருள். (உங்கள் / புரிதலுக்காக, சுத்தம் X அசுத்தம் என்ற எதிர்ச்சொல்லின் பொருளைப் பாருங்கள்).

* நல்லெண்ணம் கொண்ட,
நாக வம்ச அரசர்களைக் கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்.

* இந்திய முழுமையும் வேத மதம் பரப்பப் பட்டது.

* அரச மரத்தடியில் உள்ள புத்தர் சிலைகளை எல்லாம், அழிக்க வேண்டும் என்பதற்காக, அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி, யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் போட்டு அழித்தனர்.

* அது தான், தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

* அழகான புத்த பள்ளிகளை அசிங்க படுத்த, விகார் என்றால், விகாரம் என்றும் அசிங்கமான, அருவருப்பான என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

* புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக,
அவர்களைப் பிச்சை என்று அசிங்கப்படுத்தி, பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்.

* மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்.

* வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

* அந்தக் கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத, பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள், புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதால்... அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

* அதாவது, புத்தரின் பஞ்ச சீல கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

* அவர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால் தான், பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்.

* தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்.

* சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்.

* பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களைப் பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்.

* பிறகு, ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகள் ஆக்கப்பட்டு...

* இழி தொழில் செய்யப் பணித்தனர்.

* அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு, இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல், உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

* இதையே காரணம் காட்டித்
தீண்ட தகாதவர்களாக, பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

* "பஞ்சமர்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

* 1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக, இந்து மனு தர்ம சாத்திரம் தான், இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்து வந்தது.

* அதனால்தான் சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்.

* வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும்,

* சட்டத்தை மாற்றி அமைத்தனர்.

* பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது.

* அதுவும் வேதம், கிரக வானவியல், புரோகிதம் ஜோதிடம், புராணங்கள் போன், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படாத கல்வி / முறைகள் இருந்ன.

* இதைப் பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி, பள்ளிக் கல்வி முறையை ஏற்படுத்தினார்.

* இதற்கு, இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

* மேலும், ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் ஒரே வகையில் குற்றத் தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்.

* இதற்கு முன்பு வரை, பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

* 1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது, இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி போராட்டம் செய்தனர்.(சிப்பாய் கலகம்)

* இது போல, இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான்.

* பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும்,

* உயர் சாதி இந்துக்கள் "சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" எனக் கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்.

* எனவே, இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை.

* உயர் சாதி இந்துக்கள்,வருனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்.

* அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

* அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

* அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

#இந்து_சட்ட_மசோதாவின்_அம்சங்கள்:

1. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு.

2. பெண்களுக்கு கல்வியுரிமை.

3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.

4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.

5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை

6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு, மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது.

#ஆதார_நூல்கள்:

1. இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்,
அழிந்தனவும். -தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

2. அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.

3. இந்திய தத்துவ இயல் -தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

4. ரிக் வேத கால ஆரியர்கள் -ராகுல சாங்கிருத்தியாயன்.

5.உலக வரலாறு -ஜவகர்லால் நேரு.

6. யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.

7. பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள். -வீர.சாவர்க்கர்.

8. பாகியான்.

9. புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.

10. அபிதான சிந்தாமணி -சிங்காரவேலன்.

11. இந்தியாவின் வரலாறு -பொன்காரத்லேவின்.

12. அசோகர் இந்தியாவின்N பௌத்த பேரரசர் -வின்சென்ட். எ.ஸ்மித்

13. உலகாயுதம் -தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

2 கருத்துகள்:

  1. இது வெள்ளையனுக்கு விளக்குப்பிடித்து வாழ்ந்த வட இந்திய மகர்களுக்கு பொருந்தும் தமிழ் மறவன்களாகிய பறையன்களுக்கு பொருந்தாது.....

    பதிலளிநீக்கு
  2. வெள்ளையன் எல்லோரையும் சமமா நடத்துவான்னு கூசாம பொய் சொல்றீங்களேடா அவன் ஏன்டா எல்லா நாட்டையும் அடிமைப்படுத்தப்போறான்

    பதிலளிநீக்கு