ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

புனித_மொழி


#புனித_மொழி

பண்டைய ஐரோப்பாவில் மிகவும் தொன்மையான புனித மொழியாக லத்தீன் மொழி கூறப்படுகிறது. புனித ரோம் சாம்ராஜ்யத்தின் ஆட்சி மொழியாக, கடவுள் மொழியாக, சட்ட மொழியாக, அறிவியல் மொழியாக லத்தீன் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

எனவே அங்கு புழக்கத்தில் இருந்த மற்ற மொழிகள் இழிவானது என்ற கருத்து தோன்றியது. லத்தீன் மொழி தெரிந்தவர்களே உயர்வானவர்கள். உயர்வானவர்கள் மட்டுமே அதனை கற்க முடியும் என்ற நிலை உருவானது.

லத்தீன் மொழியின் மீது இருந்த புனித தன்மையும் ஆதிக்க தன்மையும் அந்த மொழியை சாதாரண எளிய மக்களிடம் இருந்து அந்நியப்பட்டும் இருந்தது. மேலும், லத்தின் மொழியின் புனிதமும் பரிசுத்தமும் அந்த மொழியை கடினமானதாகவும் நெகிழ்வு தன்மையற்றதாகவும் மாற்றியது.

லத்தீன் கையாள கடினமான மொழியாக மாறியதால் அறிவியலாளர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என்று படைப்பாளிகள் அனைவரும் அனைத்து மக்களுக்கும் புரியும் தம் தாய்மொழியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே காலக்கட்டத்தில் இழிவானதாக கருதப்பட்ட ஆங்கிலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடம் கொடுத்து. வெவ்வேறு மொழியில் இருந்து சொற்களை கிரகித்து தன் சொல்லடக்கத்தை அதிகரித்தது. எனவே பல அறிவியலாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர எளிமையான நெகிழ்வு தன்மை கொண்ட ஆங்கிலத்தை கையிலேடுத்தார்கள்.

மிக புனிதமானதாக உயர்வானதாக பரிசுத்தமானதாக கருதப்பட்ட லத்தீன் அந்த புனித தன்மையினாலயே இன்று வழக்கொழிந்து போனது. ஆங்கிலம் உலக மக்களால் பரவலாக பரவலாக பேசப்பட்டு உலக மொழியாக இருக்கிறது.

ஆக, ஒரு மொழியின் வளர்ச்சி, உயிர்ப்பு அனைத்தும் அதை பயன்படுத்தும் வெகு மக்களின் எண்ணிக்கையையும் அதன் நெகிழ்வு தன்மையையும் சார்ந்தே அமைகின்றது. இதன் காரணத்தால் அம்மொழியில் நிகழும் படைப்புகள், கலை இலக்கிய அறிவியல் ஆராய்ச்சிகள் அதை மேலும் செம்மை படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக